·   ·  2191 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மனைவிக்கு வந்த கடுங்கோபம் (குட்டிக்கதை)

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கணவனை பார்த்து பேசிவிட்டு திரும்பிய மனைவி கடும் கோபத்துடன் சிறை அதிகாரிகள் இருந்த அறைக்கு சென்றாள்.

'என்னுடைய கணவர் இருக்கும் சிறைக்கு அதிகாரி யார்?'

வார்த்தைகளில் அனல் தெறிக்க கேட்டாள்.

ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்த வயதில் மூத்த அந்த அதிகாரி பதில் சொன்னார்,

'நான் தான்..! என்ன விஷயம்?'

அடுத்த நொடி அவள் பத்திரகாளியாய் மாறி ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தாள்,

'என்ன விஷயமா? இது சிறைச்சாலையா அல்லது சித்திரவதை கூடமா? என்னுடைய புருஷனை இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கீங்க?

இதை நான் சும்மா விடமாட்டேன். மனித உரிமைகள் ஆணையத்திற்கு எடுத்துச் சென்று உங்கள் அனைவரின் வேலையையும் காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்'

அந்த அதிகாரி குழப்பமாய் கேட்டார்,

'ஏம்மா இவ்வளவு கோபப்படுற? அப்படி என்ன தப்பு நடந்து போச்சு?'

'என்ன தப்பு நடந்து போச்சா..? என் புருஷனுக்கு இவ்வளவு கடுமையான வேலையை கொடுத்து செய்யச் சொன்னா அவர் சீக்கிரம் செத்துப் போயிட மாட்டாரா?'

அதிகாரிக்கு மேலும் மேலும் குழப்பம் அதிகரித்தது. பதற்றமாய் பேசினார்,

'நாங்க எங்கம்மா உன் வீட்டுக்காரனுக்கு வேலை கொடுத்தோம்? வேளாவேளைக்கு நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு செல்லுல படுத்து உறங்கிக்கிட்டு தானே இருக்கான்'

அதிகாரியின் பதில் அவளை காண்டாக்கியது. பற்களை நறநறவன கடித்துக் கொண்டு சொன்னாள்,

'மனுஷத் தன்மையில்லாமல் பேசுறதுல போலீஸ்காரங்களை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவாரு. அது சரியாத்தான் இருக்கு.

வெறும் ஒரு அடி இரும்பு கம்பியை மட்டும் கையில கொடுத்து ஜெயிலுக்கு அடியிலிருந்து ஜெயிலுக்கு வெளியே இருக்கிற ரோடு வரைக்கும் இம்மி கூட சத்தம் வராமல் சுரங்க பாதை தோண்ட சொல்லி இருக்கீங்க.

மூணு மாசமா மனுஷன் படாத பாடுபட்டு தோண்டினதுல அவர் கையெல்லாம் சிவந்து புண்ணாகிப் போய் இருக்கு. பாதி தூரம் தான் தோண்டி இருக்காராம். இன்னும் மீது தூரம் தோண்டி வேண்டி இருக்குன்னு ரொம்ப சலிப்பா சொன்னாரு.

தோண்டுறதுக்கு அவருக்கு துணையா கூட ரெண்டு பேரை அனுப்பினா நீங்க என்ன குறைஞ்சா போயிருவீங்க?'

சிறைக்குள் இருந்து நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கணவன் மெல்ல மயக்கத்திற்கு தாவிக் கொண்டிருந்தான்.

  • 282
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங