Support Ads
 ·   ·  1937 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

யானை - காகம்

யானையின் சடலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது,

காகம் ஒன்று அந்த சடலத்தைப் பார்த்ததும், மகிழ்ச்சியடைந்தது.

உடனடியாகப் போய் அதன் மீது அமர்ந்து கொண்டது.

போதுமான இறைச்சியை கொத்திக் கொத்தித் தின்றுவிட்டு,ஆற்றின் நீரைக் குடித்து ஆனந்தமாக அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது,

மிகுந்த திருப்தியுடன் தனது இறக்கைகளை விரிந்துப் பறந்து ஆனந்தக் கூத்தாடியது.

காகம் யானையின் சடலத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டது,

ஆஹா!

இது மிகவும் அழகான வாகனம்,

இங்கு உணவு மற்றும் தண்ணீருக்கு எந்தப் பஞ்சமும் இல்லை.

நாம் ஏன் இதை விட்டுவிட்டு எங்கெங்கோ அலைந்து திரிய வேண்டும்?

ஆற்றங்கரையில் மிதந்து ஓடும் அச்சடலத்தின் மீது காகம் பல நாட்களாக கரைந்து கொண்டிருந்தது.

பசி எடுத்தால் யானையின் சடலத்தை உண்பதும், தாகம் எடுத்தால் ஆற்று நீரை அருந்துவதும், என அதன் வாழ்வே ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான நீர்நிலை,

அதன் வேகமான ஓட்டம், கரையோரம் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் அழகிய காட்சிகள் என எல்லாவற்றையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல ஒரு நாள் நதியானது இறுதியாகக் கடலை வந்து சேர்ந்தது.

நதி தன் இலக்கைக் கண்டுபிடித்துவிட்டது அது தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தது.

கடலைச் சந்திப்பதே அதன் இறுதி இலக்காக இருந்தது,

ஆனால் அன்று இலக்கற்றுப் பறந்து திரிந்த அக்காகத்திற்கு மட்டும் அந்தநாள் மிகவும் துரதிர்ஷ்டமாகிப் போனது.

சில நாட்களாக நடந்த வேடிக்கை, முடிவுக்கு வந்தது.

உணவு,குடிநீர், தங்குமிடம் என எதுவும் இல்லாத இடத்திற்கு அந்த யானையின் சடலமும் அந்த நதியும் அதனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டது.

எல்லா இடங்களிலும் எல்லையற்ற உப்பு நீர் அக்காகம் அலைந்து திரிந்து சலித்துப் போனது

பல நாட்களாக களைப்புடனும் பசியுடனும் தாகத்துடனும் நாலா திசைகளிலும் சிறகுகளை அசைத்து,தனது கொடூரமான குரலால் கரைந்து கொண்டிருந்தது

கடலின் ஆழம் மற்றும் பரந்து விரிந்த மேகக் கூட்டங்கள் என அதன் முடிவற்ற திசைகளில் தேடியலைந்தது ஆனால் கடலின் முடிவை எங்குமே காண முடியவில்லை.

கடைசியில், சோர்ந்து, சோகத்தில் மூழ்கி, கடலின் அதே வானளாவிய அலைகளில் விழுந்து மடிந்தது.

அப்பொழுது பெரிய முதலை ஒன்று கடலுக்குள்ளிருந்து தனது தலையைத் தூக்கி அதனை மிகவும் லாவகமாக விழுங்கியது.

உடல் இன்பங்களில் ஈடுபடும் மனிதர்களும் அதே காக்கையைப் போலத்தான் நகர்கிறார்கள்,

அவர்கள் உணவையும் தங்குமிடத்தையும் நிரந்தரம் என்று எண்ணிக் கொள்கிறார்கள், இறுதியில் எல்லையற்ற உலகப் பெருங்கடலில் பயணிக்கிறார்கள்,

யாரை வெல்வது ?

யாருக்காக தோற்பது ?

யாருக்காக இந்த சண்டை ?

யாருக்காக இந்த ஓட்டம் ?

யாருக்காக இந்த வாழ்க்கை ?

யாருக்காக இந்த ஆணவம் ?

வந்தவன் ஒருநாள் போவது உறுதி. உங்கள் கனவுக் கோட்டைகளை எல்லாம் மரணம் ஒரு நொடியில் தகர்த்தெறிந்து விட்டுச் சென்றுவிடும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.....

  • 605
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங