Support Ads
 ·   ·  1274 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கண்ணாடி தத்துவம்

ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியை பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்!! இதை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கோ ஒரே குறு குறுப்பு!!

அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?! பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!! ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியாக இருக்குமோ!! அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்கும் அந்த பெரியவரிடமே விசாரித்து விடுவோம், என்ற முடிவிற்கு வந்தான்.

பெரியவரை நெருங்கினான்......

ஐயா... குரல் கேட்டுத் திரும்பிய பெரியவர், "என்ன தம்பி வேண்டும்", என்றார்.

"உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே"?

"ஆமாம்.... அதிலென்ன சந்தேகம்"?!

"அதில் என்ன தெரிகிறது"?

"நான் பார்த்தால் என் முகம் தெரியும்…. நீ பார்த்தால் உன் முகம் தெரியும்"!!

“அப்படியானால் சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதானே அது"?

“ஆமாம்"!!

“பிறகு ஏன் அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"?!

பெரியவர் புன்னகைத்தார். "சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய"!!

"பாடமா?! கண்ணாடியிடமா!! அதனிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்"?!

"அப்படிக் கேள்"....

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்கு கண்ணாடி போன்றவர்கள்!! எத்துணை ஆழமான உவமை இது"!!

"இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை"!!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது”.

“எப்படி"?

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையை கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி அப்படியே காட்டுகிறது அல்லவா?

“ஆமாம்”

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்தஅளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்!!

எதையும் மிகையாகவோ அல்லது ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது!! இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!!

"அடுத்து…?”

“நீ கண்ணாடிக்கு முன்னால் நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”

“அட!! ஆமாம்"!!

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!!”

"அப்புறம்"?

"ஒருவருடைய முகக் கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

“இல்லை ஐயா!! மாறாக, அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். "இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்"!!

“ஐரயா, அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா!! அப்பப்பா!! யோசித்தால் இன்னும் கூட பல விளக்கங்கள் கிடைக்கும் போலிருக்கிறதே!! என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு, அவரை வணங்கி சென்றான்....

நண்பர்களே...... இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்து விடாதீர்கள்..

இவைகள் உங்களின் மனத்தை அலங்கரிக்கும், உங்களை மேலும் சிறந்தவராக பட்டைத் தீட்டும்!

  • 400
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய