·   ·  1296 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ விநாயகர் சதுர்த்தி பரிகாரம்

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான் அந்த குடும்ப வாழ்க்கை என்பது சிறப்பாக அமையும். அப்படி குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் தான் அவர்களுடைய பிள்ளைகள் சிறப்பாக வளருவார்கள். ஒரு குடும்பமே சிறப்பாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் தான் முக்கியமான காரணமாக திகழ்கிறார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து ஒருமைப்பாடு இல்லாத பட்சத்தில் அந்த குடும்பம் நிம்மதியற்ற சூழ்நிலைக்கு போய்விடும். விநாயகர் சதுர்த்தி நாளன்று கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம். விநாயக பெருமானுக்கு பலவிதமான வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்வோம்.

விநாயகருக்கு 21 மலர்களை வைத்து அர்ச்சனை செய்வது, 21 இலைகளை வைத்து அர்ச்சனை செய்வது, 21 வகையான பழங்களை வைப்பது, என்று வழிபாடு செய்யும் பழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். அதே சமயம் விநாயகப் பெருமானை அலங்கரிப்பதற்காக பல வண்ண பூக்களை வாங்கி வந்து அலங்கரிப்பார்கள். அந்த மாதிரி பூக்களை வாங்கும் பொழுது வெள்ளெருக்கு பூவையும் வாங்கி விநாயகப் பெருமானுக்கு சூட்ட வேண்டும்.

இந்த மலரை பொறுமையாக பிரித்துப் பார்த்தோம் என்றால் அதற்கு நடுவே இரண்டு காம்புகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும். அந்த இரண்டு காம்புகள் தான் கணவனும் மனைவியும். அப்படி கணவனும் மனைவியும் சேர்ந்து இருக்கக்கூடிய அந்த பூவை மாலையாக தொடுத்து விநாயகப் பெருமானுக்கு சூட்டி வழிபாடு செய்தோம் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் என்றென்றும் ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் பூக்களை பறித்து மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். இதை விநாயக சதுர்த்தி அன்று புதிதாக வாங்கி வரும் விநாயகருக்கும் போடலாம்.  வீட்டில் ஏற்கனவே இருக்கும் விநாயகர் சிலைக்கும் போடலாம். வீட்டில் இருக்கக் கூடிய விநாயகரின் படத்திற்கும் போடலாம். இப்படி இந்த மாலையை போட்டு முடித்து அவருக்குரிய பிரசாதங்களை நெய்வேத்தியமாக வைத்து மனதார கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும், குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அவர்கள் நினைத்தது போலவே கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

இந்த பூக்களை பறித்து தங்களால் தொடுக்க முடியாது என்னும் பட்சத்தில் விநாயக சதுர்த்தி அன்று கடைகளிலும் விற்கும் அந்தப் பூ மாலையும் வாங்கி சூட்டலாம். விநாயகப் பெருமானுக்கு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது.  

  • 1771
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய