- · 5 friends
-
I
துலுக்க நாச்சியார்
ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடித்து சென்ற. முஸ்லிம் மன்னன் பாதுஷா ஸ்ரீரங்கநாதரின் சிலையை தனது மகளான சுரதானி எனும் பெயர் கொண்ட இளவரசிக்கு தந்தான்! இளவரசியும் சிலைவடிவான ரங்கநாதர் மேல் அலாதி அன்பும் காதலும் கொண்டு சிலையை பிரியாமல் இருந்து வந்தாள்!
சிலையை பிரிய மனமில்லாத அடியார்கள் கூட்டம் கலைக்குழுவை போல் வேடமிட்டு டெல்லி மன்னன் முன் கலைநிகழ்ச்சி நடத்த அதில் மகிழ்ந்த மன்னனிடம் சிலையை பரிசாக கேட்டனர்! மன்னனும் இரவில் மகள் தூங்கியபின் சிலையை வைனவர்களிடம் தர அவர்கள் ஸ்ரீரங்கம் எடுத்து சென்ற விவரமறிந்த இளவரசி ஸ்ரீரங்ம் வந்து சிலையை கொண்டு போகவந்து சிலை நிறுவப்பட்டதை கண்டு உடல்நலிவுற்று இறந்து போனாள்!
அவள் காதலை மெச்சி வைனவர்கள் சுரதானியை ரங்கனின் ஏழாவது மனைவியாக கருதி முஸ்லிம்கள் உருவ வழிபாடு இல்லாததால் இப்போதும் ஸ்ரீரங்கம் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானமூலையில் உள்ள பீபி நாச்சியார் சந்நிதியில் ஓவியமாக வரைந்து துலுக்க நாச்சியார் என பெயரிட்டு அவருடன் ரங்கன் கைலி அணிந்த கோலத்தில் முஸ்லிம் வழக்கப்படி அகிலும் சந்னமுமம் புகையிட்டு பூசை செய்து வருகின்றனர்!
இந்த துலுக்கநாச்சியாரின் காதலை ஒப்புக்கொண்டு ரங்கனுக்கே இரவுபூசையில் முஸ்லிமாக முஸ்லிம் வழக்கப்படி கைலி சாத்தி ரொட்டியை நைவேத்யம் செய்யும் வைனவ பிராமணர்கள் தாங்கள் கைலி அணிவதில்லை!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·