·   ·  1359 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நமக்கு ஏழரை சனி வருவது மங்கு சனியா, பொங்கு சனியா அல்லது இறுதி சனியா?

ஊடகங்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், நமக்கு ஏழரை சனி நடக்கிறது என்பதை, ஏழரை சனி நடப்பவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த ஏழரை சனி கெடுதலை செய்யும் என்றும், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தரும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அனைவருக்குமே ஏழரை சனி ஒரே போல் தான் செயல்படுமா ? என கேட்டால், இல்லை! என்பது தான் பதில்.

ஏழரை சனி நிச்சயம் வயதுகளுக்கு ஏற்ப கெடு பலன்களை அதிகமாகவும், குறைவாகவும் செய்யும்.

ஒரு ராசியின் மீதும், அந்த ராசியின் முன் பின் ராசிகளிலும் சனி பகவான் செல்லும் காலகட்டம் ஏழரை சனி என சொல்லப்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைவருக்கும் வரும் தான் என்றாலும், பிறந்த பிறகு முதல் முதலில் வரும் ஏழரை சனியே மங்கு சனி என சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை 30 ஆண்டுகள் கழித்து வரும் சனியை பொங்கு சனி என சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை வரக்கூடிய ஏழரை சனிக்கு மரண சனி என பெயரிடப்பட்டுள்ளது.

மங்கு சனி என்பது கடுமையான பலன்களை கொண்டிருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களையும், பல புரிதல்களையும் ஏற்படுத்துவதற்காக, இளமை பருவத்தில் முதலில் வரும் இந்த சனி பல அனுபவங்களை கொடுத்து வாழ்வை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக பல சிக்கல்களை உண்டு பண்ணும்.

இதுவே இரண்டாவது சுற்றாக சொல்லப்படும் பொங்கு சனியை பொருத்தவரை, சில பின்னடைவுகளை தந்த போதிலும் நல்ல முன்னேற்றங்களையும், வாழ்க்கையில் ஏற்றங்களையும் ஏற்படுத்தும்.

எனில் மரண சனி என்பது மரணத்தை ஏற்படுத்துமா? என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உண்மையில் மரணத்தை ஏற்படுத்தும் என்பதற்காக மரண சனி என்று பெயரிடப்படவில்லை. சனி பகவானின் காரகம் ஆயுளை தருவது தானே! தவிர, மரணத்தை தருவது அல்ல. மரண சனியின் சரியான பெயர் அந்திம சனி. உங்களுடைய வயதான காலத்தில் வரும் ஏழரை சனி என்று பொருள். இதுவும் சற்று கடுமையாக இருக்கும். மங்கு சனியை விட சற்று பரவாயில்லை என்னும் அளவில் இருக்கும், பொங்கு சனியை விட சற்று சிரமங்கள் கூடுதலாக இருக்கும்.

ஒற்றைப்படைகளான முதல் சுற்றும், மூன்றாம் சுற்றும் சிரமங்களை தரும் என்றும், இரட்டைப்படைகளான இரண்டாம் சுற்று மற்றும் நான்காம் சுற்று ஏழரை சனி பிரச்சனைகள் தராது என்ற கருத்தும் ஜோதிடத்தில் உண்டு.

பொதுவாக இதுபோல் சொல்லப்பட்டிருந்தாலும், இதில் நிறைய ஜோதிட நுட்பங்கள் உண்டு. அந்த நுட்பங்களை இப்போது பார்ப்போம். சிலருக்கு பிறக்கும் போதோ அல்லது சிறுபிள்ளையாக இருக்கும் போது முதல் ஏழரை சனி கடந்திருக்கும், இவற்றையெல்லாம் முதல் சுற்று ஏழரை சனி என கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஆணோ, பெண்ணோ பருவ வயதை அடைந்த பிறகு தான் ஏழரை சனியின் பலன்கள் தெரியவே தொடங்கும். ஆகவே வாழ்வில் 45 வயது களுக்குள் வரும் ஏழரை சனி என்பது முதல் சுற்று ஏழரை சனியாக மங்கு சனியாகவே செயலாற்றும். ஒரு 50 வயதை கடந்தவர்களுக்கு எல்லாம் ஏழரை சனி பொங்கு சனியை போன்றே செயல்படுகிறது. நன்கு வயதான பிறகு வரும் ஏழரை சனி உடல்நிலை ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்தி, மனச்சோர்வை ஏற்படுத்தி பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது.

பெரும்பாலும் பருவ வயதில் இளைய பருவத்தில் வரும் ஏழரை சனியே வாழ்க்கையில் பல கடினமான சூழல்களை உருவாக்கி தெளிவான புரிதல்களை தந்து மீதம் இருக்கும் வாழ்க்கையை நீங்கள் உலகத்தைப் பற்றிய புரிதலுடன் வாழ்வதற்கு உங்களை பக்குவப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுவாக ஏழரை சனி என்று இல்லாமல் உங்களுக்கு தற்சமயம் எந்த சனி நடக்கிறது ? மங்கு சனி நடக்கிறதா ? பொங்கு சனி நடக்கிறதா ? அந்திம சனி நடக்கிறதா ? என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

  • 1488
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய