·   ·  1274 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

எண்ணிலடங்கா பலன்களைக் கொண்ட கோரோசனை

கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் புனிதமான பொருட்களில் கோரோசனையும் ஒன்றாகும். கோரோசனை என்பது பசுவில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். சித்தர்கள் இந்த கோரோசனையை ஆன்மிகம் மற்றும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். முன்பெல்லாம் கோரோசனையை பாலில் சிறிது கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். இதை தீட்டு மற்றும் தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக செய்தனர்.

பசு என்பது எத்தகைய தெய்வத்தன்மை பொருந்தியது என்பதை அறிவோம். அத்தகைய பசுவின் பித்தப்பையில் இருந்துதான் இந்த கோரோசனை எடுக்கப்படுகிறது. இதை மாடு இயற்கையாக இறந்த பிறகு அதிலிருந்து எடுத்து காய வைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

கோயில்களில் அபிஷேகத்திற்கு கோரோசனையை பயன்படுத்துவார்கள். இதை தானமாகக் கொடுப்பதால் குலவிருத்தி ஏற்படும். கோரோசனையை தினமும் பயன்படுத்துவதால், சர்வமும் வசியமாகும், ஈர்ப்பு சக்தியும் வசீகரத் தோற்றமும் கொடுக்கக்கூடியது கோரோசனையாகும். நேர்மறை எண்ணங்கள் நமக்கு உருவாகும். தோல்விகள், அவமானம் நம்மிடம் நெருங்காது. இதை நெற்றியில் வைத்துக்கொண்டு தொடங்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.

இதை பூஜையறையில் வைத்து தீப தூபம் காட்டி வழிபடுவது சிறந்ததாகும். வியாழக்கிழமையில் பூச நட்சத்திரம் வரும் நாளில் கோரோசனையை வெள்ளி தட்டில் வைத்து தூப தீபம் காட்டுவதால் வீட்டில் செல்வம் பெருகும். மேலும், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

பூஜையறையில் இருக்கும் விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றில் இந்த கோரோசனையை சிறிதளவு கலந்து வைத்துக்கொண்டு பன்படுத்துவது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை அன்று பன்னீர் அல்லது கோமியத்தில் சிறிது கோரோசனை பொடியை சேர்த்து கலந்து வீடு முழுக்க தெளிப்பதால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை சக்திகள் நம் இல்லத்தில் நிலைக்கும்.

இந்த கோரோசனையை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம். விலை சற்று அதிகமாக இருப்பதை வாங்கிக்கொண்டால் கலப்படம் இல்லாமல் இருக்கும். சித்தர்கள் கூறிய பாடலில் கோரோசனை பற்றிச் சொல்வது,

‘தேனாம் வெள்ளி ஞாயிறதில் திங்கள் வியாழம் நெய்யாகும்

பானாம் செவ்வாய் புதன் பாலாம் பகரு முடவன் நீராகும்

ஆனால் ஆவின் புல்லுருவி அதிலே குழைத்துத் திலர்த்தமிட

வானோ ரெல்லாம் வசமாவார் மண்ணில் சர்வ வசியமிதே’

வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்த கோரோசனையை திலகமாக தேனுடன் குழைத்து வைக்க வேண்டும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நெய்யுடன் சேர்த்து திலகம் வைத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாலோடு சேர்த்து கோரோசனையை குழைத்து திலகமிட்டுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சகலமும் வசியமாகும் என்பது இந்தப் பாடலின் பொருள்.

  • 463
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய