·   ·  156 posts
  •  ·  0 friends
  • 1 followers

தெற்காசியா முழுவதும் வெப்பமான காலநிலை - பாடசாலைகளுக்கு பூட்டு - வெளியே வர அச்சப்படும் மக்கள்

தெற்காசியா முழுவதும் காணப்படும் வெப்பமான காலநிலையால் பல பாடசாலைகள்  பூட்டப்பட்டள்ளதுடன் வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அச்சப்படும் நிலையும் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

குறிப்பாக மக்களும் வீட்டில் தங்க முடியாமல் புழுங்கி பூங்காவிலும் குளிர்சாதன வசதியுள்ள கடைத் தொகுதிகளிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

கடந்த வாரம் முழுவதும் கடுமையான வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியசைத் தொட்டதால் ஆயிரக்கணக்கான பாடசாலைனய் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இதுவரை இல்லாத வெப்பம் பதிவானதால் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி அன்று அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் நேரடி வகுப்புகள் இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

தாய்லாந்தில் இவ்வாண்டில் இதுவரை குறைந்தது 30 பேர் வெப்பத்துக்குப் பலியாகியுள்ளனர்.

ஏப்ரல் 27 ஆம் திகதி வடக்கு மாநிலங்களில் வெப்பம் 44.1 டிகிரி செல்சியசைத் தாண்டியது. இதனால் மோசமான சூழ்நிலை ஏற்படும் என்று அந்நாட்டின் வானிலை நிலையம் எச்சரித்தது.

கம்போடியா, மியன்மார், வியட்னாம், இந்தியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்து வரும் நாள்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியசைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023,ல் உலக வெப்பம் சாதனை அளவாக அதிகரித்தது. ஆசியா அதிவேகமாக வெப்பமடைந்து வருவதாக ஏப்ரல் 23ஆம் திகதியன்று ஐநாவின் வானிலை மற்றும் பருவநிலை அமைப்பு தெரிவித்தது.

பருவநிலை மாற்றத்தால் வெப்ப அலை நீண்டகாலத்துக்கும் தீவிரமாகவும் அடிக்கடி ஏற்படும் என்றும் விரிவான அறிவியல் ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.

மியன்மாரில் ஏப்ரல் மாத சராசரியைவிட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது என்று அதன் வானிலை கண்காணிப்பு நிலையம் கடந்த வாரம் அறிவித்தது.

இதற்கிடையே, சீனாவிலும் வெப்ப அலை வீசுவதால் மின்சார விநியோகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய சீனா, தெற்கு, தென்மேற்கு மற்றும் மங்கோலியாவின் உட்பகுதிகளில் வெப்பம் தீவிரமடைந்தால் மின்விநியோகம் தற்காலிகமாக குறைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கையிலும் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.

இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் சுட்டெரிப்பதால் வீடுகளில் இருந்து வெளியே செல்ல அனைவரும் அச்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

  • 583
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்