·   ·  156 posts
  •  ·  0 friends
  • 1 followers

இலங்கையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக தகவல்.

சீனா தனது வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி இலங்கையில்ஒன்று அல்லது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

சீன நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை உருவாக்கி இயக்கி வருகிறது.

இலங்கை நாளொன்றுக்கு சுமார் 38,000 பீப்பாய்கள் பதப்படுத்தும் திறன் கொண்ட1960 களில் ஈரான் நாட்டினால் அமைக்கப்பட்ட ஒரே ஒரு சுத்திகரிப்பு ஆலையை கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் எரிசக்தி ஆற்றலை அதிகரிக்க போட்டியிடுகின்றன.

சீனாவினால் நடத்தப்படும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 160,000 பீப்பாய் பதப்படுத்தும் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதா? அல்லது இரண்டு 100,000 பீப்பாய் பதப்படுத்தும் திறன் கொண்ட வசதிகளை உருவாக்குவதா என்பது குறித்த அதன் சாத்தியக்கூறு ஆய்வை சினோபெக் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுத்திகரிப்புத் திட்டம் என்பது சீன மற்றும் உலகளாவிய சுத்திகரிப்பு நிறுவனத்தால் வெளிநாடுகளில் அதிக சந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

இலங்கையில் சினோபெக்கின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாட்டில் அந்த சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான முதல் சுத்திகரிப்பு ஆலையாக அது மாற்றமடையும்.இந்தநிலையில் சினோபெக் மற்றும் சீனா, இந்தியாவுடன் போட்டியிட வேண்டும்.

முன்னதாகவே இலங்கையின் எரிசக்தி அமைச்சர் விஜேசேகர, இலங்கையின் கிழக்கில் உள்ள திருகோணமலை எரிபொருள் தொட்டிப் பண்ணையுடன் இந்தியாவில் உள்ள நாகப்பட்டினத்தை இணைப்பது குறித்து இந்திய நிறுவன நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளார்.

கூடிய விரைவில் சாத்தியமான குழாய்வழிக்கான உத்தியோகபூர்வ ஏற்பாடு அல்லது உடன்படிக்கையை உருவாக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட திட்டமிடப்பட்ட சோலார் பார்க், சம்பூர் கிரவுண்ட் மவுண்ட் சோலார் திட்டம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளின் கட்டுமானத்திலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.

திட்டம் முன்மொழிவு நிலைக்கு முன்னேறியுள்ளது, மேலும் மதிப்பீடு செய்யப்பட்டவுடன் 120 மெகாவாட் சோலார் பூங்காவில் 50 மெகாவாட் முதல் கட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 310
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்