பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஸ்ரீதர் அப்போது இயக்குநர் இல்லை. அவர் ஒரு கதாசிரியர். கதை வசனம் எழுதுபவர்.

பல திரைப்படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதிவந்த நிலையில், திடீரென சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்சில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் பற்றி ஸ்ரீதர் முதலில் நன்றாக ஹோம்வொர்க் செய்து கொண்டார்.

சுந்தரம் கெடுபிடிகளுக்குப் பேர் போனவர். லண்டனில் படித்தவர். அவரது இருக்கைக்குப் பின்னால் சாட்டை தொங்கும். அவருக்கு எதிரே அமர்ந்து பேச இருக்கைகள் இருக்காது. எதிரே யாரையாவது உட்கார வைத்துப் பேசினால் நேரம் கெடும் என்பதால் யாரையும் அவர் உட்கார அனுமதிப்பதில்லை,

அப்புறம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு எழுதும் கதை வசனத்தில் ஒரு வரியை மாற்ற வேண்டும் என்றாலும்கூட வசனம் எழுதுபவரை சேலத்துக்கு ரயில்மூலம் வரவழைப்பார். கதாசிரியர் நேரில் வந்துதான் வசனத்தை மாற்ற வேண்டும்.

தொலைபேசியில் பேசி மாற்றுகிற கதை எல்லாம் இல்லை.

ஸ்ரீதர், சேலத்துக்குக் கிளம்பிப்போனார். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடம் ஒரு மகத்தான நூலகம் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அத்தனையும் திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றை எடுத்துப்படிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தடை எதுவும் சொல்ல மாட்டார் என்பதையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார்.

பின்னர் சுந்தரத்துடன் சந்திப்பு நடந்தது.

‘படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு எதிர் பார்க்கிறீங்க?’ என்றார் சுந்தரம்.

‘வழக்கமா 3000 ரூபாய் வாங்குவேன். மாடர்ன் தியேட்டர்ஸ் பெரிய நிறுவனம் என்பதால் 4 ஆயிரத்தை எதிர்பார்க்கிறேன்’ என்றார் ஸ்ரீதர்.

‘அதெல்லாம் இல்லை. 2 ஆயிரம் ரூபாய்தான் தர முடியும். விருப்பம் இருந்தால் எழுதுங்கள். இல்லாவிட்டால் கிளம்புங்கள்’ என்று சொல்லிவிட்டார் சுந்தரம்.

முகத்தில் அடித்த மாதிரியான பளார் பதில் அது.

ஸ்ரீதர் யோசிக்கவில்லை. ‘சரி’ என்று அதற்கு ஒப்புக்கொண்டார்.

காரணம், மாடர்ன் தியேட்டர்ஸ் எடுக்கும் திரைப்படத்துக்கு வசனம் எழுத ஸ்ரீதர் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ்சுக்கு அவர் கதை வசனம் எழுதுகிறார் என்பது வெளியில் எல்லோருக்குமே தெரிய வரும். அதை வைத்தே, மற்ற திரைப்பட நிறுவனங்களில் ஸ்ரீதர் 5 ஆயிரம் ரூபாய் கூட இனி வாங்க முடியும்’

அதேப்போல வசனத்தை மாற்ற, தன்னை சேலத்துக்குக் கூப்பிடும்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் நூலகத்தில் திரைப்பட நுட்பங்கள் தொடர்பான நூல்களை அவர் வாசிக்க முடியும்.

இதனால்தான் மாடர்ன் தியேட்டர்ஸ்சுக்கு கதை வசனம் எழுத உடனே ஒப்புக் கொண்டார் ஸ்ரீதர்.

இந்த கதை இப்படி இருக்க, பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை, ‘சான்ஸ் வாங்கித் தர்றேன் வா’ என்று மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திடம் அழைத்துப் போனார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சுந்தரத்தின் முன்னிலையில் வழக்கம் போல நாற்காலிகள் இல்லை. ‘இவர் சிறப்பான கவிஞர். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களுக்கு பாடல் எழுத இவரைப்பயன்படுத்தலாம்’ என்று எம்.எஸ்.வி. சொல்ல, ‘எதையாவது எழுதிக்காட்டுங்களேன்’ என்றார் சுந்தரம்.

நின்று கொண்டேதான் எழுத வேண்டும். ஒரு காகிதமும், பேடும் வந்து சேர்ந்தது.

பட்டுக் கோட்டையார் இரண்டு வரிகள் எழுதி சுந்தரத்திடம் நீட்டினார். அதைப்பார்த்த மறுகணமே 2 நாற்காலிகளைக் கொண்டுவரச் சொல்லி அவர்களை உட்காரவைத்தார் சுந்தரம்.

பிறகு, ‘வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்’ என்று அவர்களை அனுப்பிவைத்தார்.

வெளியே வந்ததும் எம்.எஸ்.வி. பட்டுக்கோட்டையாரிடம் ஆச்சரியத்துடன் கேட்டார். ‘சுந்தரம் மலைச்சிப் போய் நாற்காலி போடச் சொல்லுற அளவுக்கு அப்படி என்னய்யா எழுதினே?’

‘ஒரு மண்ணாங்கட்டியும் எழுதவில்லை. முதலில் உட்கார 2 நாற்காலிகளைப் போடவும்னு எழுதினேன்’ என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஸ்ரீதரின் பாணி வேறு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாணி வேறு.

  • 813
  • More
சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு