புன்னகை அரசி கே.ஆர். விஜயா பற்றி அறியாத தகவல்

முதல் முதலாக தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் நாயகியாக நடித்தவர் நடிகை கேஆர் விஜயா. இவர் கடந்த 1963ஆம் ஆண்டு ’கற்பகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி 1984ஆம் ஆண்டு வெளியான ‘தராசு’ படம் வரை நாயகியாக நடித்தார். எனவே 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த பெருமைக்கு கேஆர்விஜயாவுக்கு உண்டு.

நடிகை கே.ஆர்.விஜயாவின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் அவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கே.ஆர்.விஜயா பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார்.

கே.ஆர்.விஜயாவின் தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் கேரளாவில் ஒரு நகை வியாபாரியாக இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பார்த்து வந்த தொழில் நொடித்துவிட்டது. இதனை அடுத்து அவர் கேரளாவில் இருந்து பழனிக்கு குடி பெயர்ந்தார். அங்கு பழனி முருகன் கோவிலில் அலுவலராக வேலை பார்த்துக் கொண்டே நாடகங்களில் நடித்தார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி நிறுவினார். அந்த நாடகத்தில் காந்திமதி, சுருளிராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தான் நாடகத்திலிருந்து சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் அவரது தந்தை நடித்த நிலையில் கே.ஆர். விஜயாவுக்கு தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கற்பகம். இந்த படத்தில் சாவித்திரி நாயகி என்றாலும் கே.ஆர்.விஜயாவுக்கு சிறப்பான கேரக்டர் கிடைத்தது.

இதனை அடுத்து அவர் எம்ஜிஆர் ஜோடியாக ‘தொழிலாளி’ என்ற திரைப்படத்திலும், பின்னர் நாகேஷ்க்கு உடன் ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்திலும் நடித்தார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் பல திரைப்படங்களில், குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உடன் இணைந்து நடித்தார்.

அதேபோல் எஸ்எஸ்ஆர், முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் அவர் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவர் அதிக படங்களில் நடித்தார்.

கேஆர் விஜயாவின் நூறாவது படம் ’நத்தையில் முத்து’. இந்த படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வருவாயை பெற்றுக் கொடுத்தது.

அதேபோல் கே.ஆர்.விஜயாவின் 150வது படம் ’அன்னபூரணி’. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் 175வது படம் ’சத்திய சுந்தரம்’, 200வது படம் ’படிக்காத பண்ணையார்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. கே ஆர் விஜயாவின் 250வது படம் ’பெண்கள் வீட்டின் கண்கள்’ என்பதும் 275 வது படம் ’அம்மு பொண்ணு’ என்பதும் 300வது படம் ’அதிபதி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட அவர் 500 படங்கள் நடித்துள்ளார். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கே ஆர் விஜயாவின் ஆரம்ப கால வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சம்பாதித்த பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்துள்ளார். அந்தக் காலத்திலேயே ஆடம்பரமான பங்களா, சொந்த விமானம், ராயல் என்ஃபீல்டு பைக் என சொகுசாக வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.

நடிகையாக மட்டுமின்றி ஒரு சில படங்களை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த ’நான் வாழ வைப்பேன்’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

கே.ஆர் விஜயாவின் கணவர் சுதர்சன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் அதிக வருமானம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

  • 674
  • More
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு