புன்னகை அரசி கே.ஆர். விஜயா பற்றி அறியாத தகவல்

முதல் முதலாக தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் நாயகியாக நடித்தவர் நடிகை கேஆர் விஜயா. இவர் கடந்த 1963ஆம் ஆண்டு ’கற்பகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி 1984ஆம் ஆண்டு வெளியான ‘தராசு’ படம் வரை நாயகியாக நடித்தார். எனவே 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த பெருமைக்கு கேஆர்விஜயாவுக்கு உண்டு.

நடிகை கே.ஆர்.விஜயாவின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் அவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அவருடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கே.ஆர்.விஜயா பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார்.

கே.ஆர்.விஜயாவின் தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் கேரளாவில் ஒரு நகை வியாபாரியாக இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பார்த்து வந்த தொழில் நொடித்துவிட்டது. இதனை அடுத்து அவர் கேரளாவில் இருந்து பழனிக்கு குடி பெயர்ந்தார். அங்கு பழனி முருகன் கோவிலில் அலுவலராக வேலை பார்த்துக் கொண்டே நாடகங்களில் நடித்தார். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனி நிறுவினார். அந்த நாடகத்தில் காந்திமதி, சுருளிராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தான் நாடகத்திலிருந்து சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் அவரது தந்தை நடித்த நிலையில் கே.ஆர். விஜயாவுக்கு தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கற்பகம். இந்த படத்தில் சாவித்திரி நாயகி என்றாலும் கே.ஆர்.விஜயாவுக்கு சிறப்பான கேரக்டர் கிடைத்தது.

இதனை அடுத்து அவர் எம்ஜிஆர் ஜோடியாக ‘தொழிலாளி’ என்ற திரைப்படத்திலும், பின்னர் நாகேஷ்க்கு உடன் ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்திலும் நடித்தார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் பல திரைப்படங்களில், குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உடன் இணைந்து நடித்தார்.

அதேபோல் எஸ்எஸ்ஆர், முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் அவர் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவர் அதிக படங்களில் நடித்தார்.

கேஆர் விஜயாவின் நூறாவது படம் ’நத்தையில் முத்து’. இந்த படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வருவாயை பெற்றுக் கொடுத்தது.

அதேபோல் கே.ஆர்.விஜயாவின் 150வது படம் ’அன்னபூரணி’. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் 175வது படம் ’சத்திய சுந்தரம்’, 200வது படம் ’படிக்காத பண்ணையார்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. கே ஆர் விஜயாவின் 250வது படம் ’பெண்கள் வீட்டின் கண்கள்’ என்பதும் 275 வது படம் ’அம்மு பொண்ணு’ என்பதும் 300வது படம் ’அதிபதி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட அவர் 500 படங்கள் நடித்துள்ளார். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கே ஆர் விஜயாவின் ஆரம்ப கால வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சம்பாதித்த பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்துள்ளார். அந்தக் காலத்திலேயே ஆடம்பரமான பங்களா, சொந்த விமானம், ராயல் என்ஃபீல்டு பைக் என சொகுசாக வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.

நடிகையாக மட்டுமின்றி ஒரு சில படங்களை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த ’நான் வாழ வைப்பேன்’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

கே.ஆர் விஜயாவின் கணவர் சுதர்சன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் அதிக வருமானம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

  • 719
  • More
சினிமா செய்திகள்
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத
'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜய் தேவ்கன் (: Ajay Devgn) தற்போது நடித்து முடித்துள்ள ரெய்டு 2 திரைப்படம், 2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப்
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு