வன்னி

  •  ·  Standard
  • R

    3 members
  • R

    4 followers
  • 2634 views
விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக  வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு  அனுமதிகளை கொடுத்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று (08-04-2023) முரசுமோட்டை முருகன் கோவில் முன்றலில் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்நது உரையாற்றுகையில் இன்றைய நாட்டின் ஜனாதிபதி சொல்லுகின்றார் யாரும் விக்கிரகங்களை வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்இவ்வாறு கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே பாரம்பரியமாக வழிபட்டு வந்த விக்கிரகங்களை உடைப்பதற்கான அனுமதிகளை கொடுக்கின்றார் குறிப்பாக குறுந்தூர் மலையிலே நீதிமன்றம் போட்ட கட்டளையை மீறி விகாரை அமைக்கப்படுகின்றது.வெடுக்குநாறி மலையிலே விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன இவ்வாறு தமிழர் வழிபாட்டிடங்களில் விகாரை அமைப்பதற்கு அவர் அனுமதித்துள்ளார்சிங்கள பௌத்த பேரினவாதம் எதைச் செய்தாலும் அவர் மௌனமாக இருப்பார் ஆனால் தமிழர்கள் எதையும் போய் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அது வலுக்கட்டாயம் என்றும் தடுத்து வருகின்றனர்.இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாங்கள் எங்களுக்கான சுயாட்சியை நிறுவுவதற்காக் நீண்ட நெடுங்காலமாக போராடி வருகின்றோம் அதற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை விலையாக கொடுத்திருக்கின்றோம் பலரை இழந்திருக்கின்றோம் பெறுமதி மதிப்பட முடியாத சொத்துக்களை இழந்திருக்கின்றோம் இதையெல்லாம் கடந்தும் இந்த மண்ணில் எமக்கான விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்று சேர வேண்டும் என்று என்று குறிப்பிட்ட அவர்எமது அடையாளங்களை நாங்கள் பேண வேண்டும் என்பது எமக்கு முன்னால் உள்ள வரலாற்று ரீதியான கடமையாகும்.மக்களை ஒரு குழப்பகரமான நிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக இளைஞர்களிடத்திலே ஒரு புதிய விதமான பிரச்சனை உருவாக்கப்பட்டு இருக்கிறதுஅதாவது இன்று போதைப்பொருள் பாவனை இப்பொழுது போதைப்பொருள் பாவனையினால் பல்வேறுபட்ட வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.குறிப்பாக தாய் தந்தை பிள்ளைகளை கொலை செய்தல் போதைப் பொருள் பாவனைகளால் கலாச்சார சீரழிவு என பல்வேறு விதத்திலே எங்களுடைய இளம் சமூகம் சீரழிக்கப்படுகின்றது.அதைவிட தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது இதை பலர் எதிர்க்கின்றனர் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதேபோல பலரும் எதிர்த்திருக்கின்றார்கள் உலக நாடுகள் பல எதிர்த்திருக்கின்றன இந்த அரசாங்கம் கொண்டுவரப் போகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மிக மோசமானது.ஒன்று கூடுவதோ அல்லது உரிமைகள் பற்றி பேசுவதற்கோ முடியாது எங்களது உரிமைகள் பற்றி பேச முடியாது இவ்வாறு பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்து மக்களை ஒரு நெருக்கடி நிலைக்குள் தள்ளி கொடுங்கோல் ஆட்சி மேற்கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாக தெரிவு இன்று (08-04-2023) பிற்பகல் 4.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிர்வாகத் தெரிவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் நந்தகுமார் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 1131
பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி
  • 997
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்ட முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றான பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய் வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று பகல் 1-30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் ஆ.சுந்தரமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை அதிபரும் முன்னை நாள் பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான செபமாலை அல்பிறட் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி த.யோனானந்;தராஜா போட்டியில் துணுக்காய் வலயக் கல்வித் திணைக்களத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் சிறிவள்ளி மற்றும் நட்டாங்கண்டல் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.
+5
  • 1413
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 29-03-2023 பாராம்பரிய முறைப்படி பிரம்பு வழங்கும் வைபவத்தை தொடர்ந்து  மாட்டு வண்டில்களில் பண்டமெடுத்து வருவதற்காக யாழ்; புத்தூர் பண்டமரவடிக்கு புறப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர் வரும் 05ம் திகதி புதன்கிழமை இரவு சிறப்பாக நடைபெற உள்ளது.ஆலயத்திற்கான பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று புதன் கிழமை (29-03-2023) பகல் கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரம்பு வழங்கும் நிகழ்வையடுத்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் யாழ்; மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியிலிருந்து பண்டமெடுப்பதற்கு மாட்டு வண்டிகளில் பக்தர்கள் இன்றைய தினம் புறப்பட்டுள்ளனர்.
+6
  • 1457
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் உறுதியளித்துள்ளார்.கடந்த 2023.03.22 ஆம் திகதி, புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்,அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களை அமைச்சு அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டமானது, கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிறைவில் பளை பிரதேசத்தின் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் இத் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் முடியும்.கடற்கரையை அண்டிய ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாக உள்ள பச்சிலைப்பள்ளியின் பெரும்பாலான கிராமங்களின் நிலத்தடி நீர் உவர் நீராகவே காணப்படுகிறது. இதனால் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கான தீர்வாகவே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பளையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியை கிளிநொச்சி நீர்த்தாங்கியுடன் இணைப்பதற்கான நீர்குழாய்கள் இன்மையால் இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றதை அடுத்து, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவருக்கு உடனடியாகவே உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், இத்திட்டத்தை விரைவாக நிறைவுசெய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
  • 1196
கிளிநொச்சியில் வடமகான தொழில்துறை துணைக்களத்தின் வர்த்தக சந்தை (24-03-2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து உரையாற்றுகையில்; அதிகமாக இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களினுடைய வருகை சற்று அதிகரித்து காணப்படுகின்றது.அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் உற்பத்தியும் சற்று அதிகரித்து கானப்படுகின்றது.நாங்கள் இவ்வாறான உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்ளளவு செய்து பயன்படுத்துகின்ற போது தொழில் முயற்சியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் இப்போது பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திகளை தவிர்த்து உள்ளுர் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தும் மனநிலைக்கு ஒவ்வொருவரும் மாற வேண்டும்.அத்துடன் இந்த உற்பத்தி பொருட்கள் நல்ல தரமுடைய பொருட்களாகவும் அமைய வேண்டும் அவ்வாறு அமைகின்ற போது தான் அதற்கான சரியான சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் வடமகான தொழில்துறை துணைக்களத்தினால் வர்த்தக சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது.  கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண தொழில் துறை துணைக்களத்தின் ஏற்பாட்டில பசுமை பூங்காவளாகத்தில் மேற்படி சந்தையானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.நெசவு உற்பத்திகள் கைப்பணி உற்பத்திகள் உணவு உற்பத்திகள் ஆடை உற்பத்திகள் சிறு கைத்தொழில் உற்பத்திகள் உள்ளடங்கிய 60க்கும் மேற்பட்ட விற்பனைக்கூடங்களுடன் இந்த வர்த்தக சந்தை 24 March 2023 திறந்துவைக்கப்பட்டது.நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சி. ரீமோகனன்மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
+1
  • 743
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தெடர்பிலான  மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில்  (24-03-2023) நடைபெற்றுள்ளது.வருடாந்த பொங்கல் உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.மணிக்கு நாகதம்பிரான் ஆலய பூசை வழிபாடுகளை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரச அதிபர் ; திரு.க.சிறிPமோகனன் தலைமையில் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொங்கல் உற்சவத்துக்கு வழமை போன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதரவுள்ளதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஆலயத்தின் பொங்கல் ஏற்பாடுகளை முன்னெடுத்தல் பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீதிப் புனரமைப்பு பணிகள் சுகாதார வசதி மருத்துவ வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரNதுச செயலாளர் த. பிருந்தாகரன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொலிசார் துறைசார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உறசவ கால தொண்டர்கள், உபயகாரர்கள் மற்றும் பரிபாலன சபையினர், தர்மகர்த்தாக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • 1007
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட பரந்தன் பகுதியைச் சேர்ந்த கந்தையா நாகராசா அவர்களால் மனிதம் அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக ஆனையிறவு தமிழ் வித்தியாலயம் உமையாள்புரம் அ.த.க பாடசாலை முரசுமோட்டை புனித அந்தோனியார்  றோ.க வித்யாலயம் ஆகிய மூன்று  பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தென்னங்கன்றுகள் (23-03-2023)வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
  • 684
வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) வயது பெண்ணே 23.05.2023 அன்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பின் திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
+1
  • 696
இந்த ஆய்வு தொடர்பான முழுமையான விளக்கம் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்த ஆய்வுக் கருத்தரங்கினை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.இந்த ஆய்வில் மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் , இராணுவத்தினர், விமானப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் , கிராம அலுவலகர்கள் முதலானோரிடமிருந்த தரவுகள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த ஆய்வின் மாதிரிகளாக ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனையால் நேரடியாக பாதிக்கப்பட்டோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் கருத்தரங்கில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் திரு. ம.செல்வரட்ணம், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.கே.லிங்கேஸ்வரன் , உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி .ஜெயபவாணி, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.எம்.முபாரக், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா, பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
+3
  • 660
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்திப்பிரிவு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவை இணைந்து You-lead செயற்திட்டத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகம் 2 ல் சிறப்புற முன்னெடுக்கப்பட்டது.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.நிகழ்வில் தலைமையேற்று நடாத்திய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) திரு. ந.திருலிங்கநாதன் அவர்கள் உரையாற்றுகையில்.........தொழில் வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியமானது அதாவது இளமைப் பருவத்தில் தமது எதிர்கால நோக்கி பயணிக்கின்ற போது சரியான வழிகாட்டலோடு செல்லுகின்ற போது தான் அவர்கள் தமது இலக்கை அடைய முடியும்.உண்மையிலேயே அவர்களிடம் இருக்கின்ற திறமைகளை அடையாளம் கண்டு அத்திறமைகளுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான துறைகளுக்கு வழிகாட்டுவதன் ஊடாக இளைஞர் யுவதிகள் எதிர்காலத்திலே சிறந்த ஒரு பிரஜைகளாக வருவதற்கு வழிவகுக்கும். அந்த அடிப்படையிலே நமது மாவட்ட செயலகத்திலேயே கடமை ஆற்றுகின்ற திறன் விருத்தி உத்தியோகத்தர்கள் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டுதல்களை அன்றாடம் செய்து வருகின்றார்கள்.இருந்த போதிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மட்டுப்பாடுகள் காரணமாகவும் ஏனைய பிரச்சினைகள் காரணமாகவும் அவற்றை முழுமையாக அடைகின்றோமா என்பது தொடர்பில் எமக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் முகமாக பரந்துபட்ட அடிப்படையில் எல்லா திணைக்களங்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்வது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் பெருவிருப்பாகும்.அந்த அடிப்படையில் மூண்றாம்நிலைக் கல்வி தொழிற்கல்வி தொடர்பாக மாவட்டம் மட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைக்கின்ற பணியானது அரசாங்க அதிபர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த நோக்கத்திற்காக பல கலந்துரையாடல்களை நடாத்தி அந்தந்த நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி வருகின்றார்.அந்த வகையில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற You-lead என்கின்ற செயற்திட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களும் மாவட்ட மட்டத்தில் இப்பணியினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர். அதற்கு அமைவாகவே இன்றைய நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகையில் .........கிளிநொச்சி மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தகவல்களின்படி 2400க்கும் மேற்பட்ட தொழில் தேடுனர்கள் இருக்கின்றார்கள்.இத்தொகையானது மாவட்ட சனத்தொகையோடு ஒப்பிடும் பொழுது குறைவான தோற்றப்பாட்டையே தருகின்றது.காரணம் மனிதவள வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்த தொழில் தேடுனர்களின் தொகையை அதுவாகும்.இந்நிலையில் உராய்வின் மூலம் வேலையின்மை,வேலையில் நாட்டமின்மை,அது தொடர்பான விழிப்புணர்வின்மை போன்றவை காரணமாக வேலையின்மை வீதமானது அதிகரித்த ஒன்றாகவே காணப்படுவது நிதர்சனமாகும்.இந்நிலைமையில் இன்றைய இந்த தொழிற்சந்தை நிகழ்வானது தொழில் தேடுனர்களுக்கு அவர்களது வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் நிகழ்வின் ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,நிதி அனுசரணை வழங்கிய You-lead செயற்திட்ட உத்தியோகத்தர்கள்,ஊடக அனுசரணை வழங்கிய ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார்.இந்நிகழ்வில் அரச, அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தமது செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும்      தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் தொழில் தேடுனர்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
+7
  • 605
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட உள்ள சிறுபோக நெற்செய்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக காணப்படுகிறது சிறுபோக விவசாய செய்கைகளை பாதுகாப்பதற்கு கால்நடை வளர்ப்போர் தங்களத கால் நடைகளை உரிய வகையில் பராமரிக்க வேண்டும்.அரசின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பங்களையும் சேதன முறைகளையும் பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.மாவட்டத்தின் நெல்லுற்பத்தியானது ஒரு கெக்ரேயருக்கு 03 தொடக்கம் 03.5 மெற்றிக் தொன்னாக கானப்படுகின்றது இதனை எதிர் காலத்தில் 04 தொடக்கம் 04.5 மெற்றிக் தொன்னாக அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கப்படவேண்டும் இதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட அவர்தொடர்ந்து குறிப்பிடுகையில் மாவட்டத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அவ்வாறான சட்டவிரவாத் செயல்பாடுகள் தொடர்பில் தனக்கு நேரடியாகவே அந்த தகவல்களை தெரியப்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ந்தும் எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
  • 554
கிளிநொச்சி  மாவட்டத்தில் கால்நடை அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆளணி வளம் இன்மையால் பெரும் கஸ்ரங்களை எதிர் கொள்வதாக மாவட்ட  கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைத்திணைக்களத்தின்; செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய ஆளணி வளங்கள் இல்லாத நிலையினால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் நெருக்கடிகள்  எதிர்கொள்வதாக மேற்படி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, கால்நடை உற்பத்தி சுகாதாரத்தினைக்களத்திற்கு 07 வெளிக்கள அலுவலர்கள் தேவையான நிலையில் ஒருவர் மாத்திரமே உள்ளதாகவும் மேற்படி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே நேரம் அண்மை நாட்களாக கால்நடைகளுக்கு ஏற்பட்ட பெரியம்மை என்ற வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைவடைந்து வருவதாகவும் அடுத்த சில வாரங்களில் இது பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 601
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட மணல் ஏல விற்பனை எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளதுஅதேவேளை குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னர் பார்வையிட முடியும் என்று நீதி மன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
  • 542
கடந்த கால போக நெற்செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் கெக்ரேயர் ஒன்றுக்கு 35 கிலோ கிராம்  USAID நிதியில் FAO.  உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் அடிக்கட்டு உரம் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம்கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போக நெற்செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் கெக்ரேயர் ஒன்றுக்கு 35 கிலோ கிராம்  USAID நிதியில் FAO.  உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் TSP (அடிக்கட்டு உரம்)   இலவசமாக இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல  அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா தேவரதன் தெரிவித்துள்ளார்.குறித்த இலவச உரவிநியோகமானது இன்று முதல் சகல கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் கடந்த காலபோக செய்கை மேற்கொண்ட சகல விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்கிளிநொச்சி விவசாயிகளுக்கு USAID நிதியில் FAO. உலக உணவு விவசாய நிறுவனம் மூலம் TSP (அடிக்கட்டு உரம்) வழங்கும் பணி மாவட்டத்தின் பூநகரி கமநல சேவை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட சின்ன பல்லவராஜன் கட்டு கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 350 விவசாயிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.  ஒரு ஹெக்டேயருக்கு நீர்ப்பாசன வயல்களுக்கு 33.கிலோ050கிராமும் மழையை நம்பி மானாவாரியாக செய்கை பண்ணும் வயல் நிலத்திற்கு 24கிலோ 700கிராமும் ஹெக்டேயர் வீதமும் வழங்கப்பட்டது.
  • 554