News
Featured News
Latest News
புலிகளிடம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொலை - இந்திய ஊடகங்கள் தகவல்
  •  ·  Srikanth
  •  · 
  •  ·  World
  •  ·  9 views
சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பசவராஜு உள்ளிட்ட ஆறு பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காது, பாதுகாப்பு படையினரே அடக்கம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.பசவராஜு, தமிழீழ விடுதலை புலிகளிடம் பயிற்சி பெற்ற திறமை மிக்க வலிமையான தலைவராக விளங்கியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரின் கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியமை மாவோயிஸ்டு அமைப்புக்கு பெரும் வலிமையாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், அவரை பிடிக்க கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டிருந்த நிலையில், பசவராஜு உள்ளிட்டவ
தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை
தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு அறிக்கை தற்பொழுது கிடைத்துள்ள உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதில் பொலிஸமா அதிபர் மேலும் தெரிவித்தார்.சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பதில் பொலிஸமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்த்தரப்பு கட
இணையத்தாக்குதல் மூலம் நுகர்வோர் தொடர்புகள் திருட்டு
இணையத்தாக்குல் மூலம், தமது நுகர்வோர் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாக, விளையாட்டு ஆடைகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான எடிடாஸ் (Adidas) அறிவித்துள்ளது.மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை வழங்குநர் வழியாக, அங்கீகரிக்கப்படாத ஒரு தரப்பினர், இந்த இணையத்திருட்டில் ஈடுபட்டதாக எடிடாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.முதன்மையாக தமது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொண்ட நுகர்வோரின் தொடர்புகளும் இதன்போது திருடப்பட்டுள்ளதாக எடிடாஸ் குறிப்பிட்டுள்ளது.எனினும்,கடவுச்சொற்கள், கடன் அட்டை எண்கள் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான விபரங்கள் போன்ற முக்கியமான தரவுகள், தாக்குதலின் போது பாதிக்கப்படவில்லை.இதனையடுத்து, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நுகர்வோருக்கு எடிடாஸ் தகவல் தெரிவித்து வருகிறது. அத்துடன் நு
கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி - விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.கடந்த காலங்களில் சட்டவிரோதமான முறையில் பல்வேறு நபர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.வெளிநாட்டில் இருக்கும் கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
ஜிதேஷ் சர்மாவின் அதிரடி - RCB வெற்றி
  •  ·  Srikanth
  •  · 
  •  ·  Sports
  •  ·  13 views
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (27) நடைபெற்ற ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) நிர்ணயித்த 228 ஓட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்தி, அற்புதமான சேஸிங்கை மேற்கொண்டது.6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் RCB அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பிடித்தது.இதன் விளைவாக, மே 29 அன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை RCB எதிர்கொள்ளும்.இதற்கிடையில், மே 30 அன்று நடைபெறும் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை (MI) எதிர்கொள்ளும்.நடப்பு ஐ.பி.எல். தொடரின் 70 ஆவதும் லீக் சுற்றின் இறுதி ஆட்டமுமான இந்தப் போட்டி நேற்றிரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்த
இயற்கை வழங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் - பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவுக்கு அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு
.........சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என இயற்கை வழங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதால் தான் இன்று இந்த கருத்தாடல் நிகழ்வுற காரணமாகி இருக்கின்றது என WCA அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூதிய அவர் மேலும் தெரிவிக்கையில் -அனைத்தும் வரி குறைக்கப்படும் விலை குறையும் என்றார்கள் ஆட்சியாளர்கள். எதற்
 கனடாவில் கடன் செலுத்த தவறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் வீட்டுக் கடன், வாகன கடன்கள் மற்றும் கடன் அட்டை நிலுவைகள் செலுத்த தவறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு இழப்புகள் மற்றும் உணவு, வீட்டு வசதிகளின் உயர்ந்த செலவுகள் ஆகியவை இந்த நிலைமைக்கு காரணங்களாக Equifax Canada வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கூறப்பட்டுள்ளன.இந்த ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் 14 இலட்சம் பேர் கடன் அட்டை கட்டணங்களை செலுத்த தவறியுள்ளனர்.
இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.2010 ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.அத்துடன் யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆக
மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தகவல்
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தமது சொந்த விருப்பத்துக்கமையவே அவரது பெற்றோருடன் சென்றதாக பொலிசாரிடம் அறிவித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்
மட்டுவிலிருந்த காலி நோக்கி பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து , டிப்பருடன் மோதி விபத்து
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து,முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இவ்விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்துள்ளனர்குறித்த விபத்துச் சம்பவம் தொபட்ர்பில் மேலும் தெரியவருவது -இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில்
மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
யாழில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய இராமசாமி சிறிகாந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் பகுதியில் பூவரசு மரத்தின் தடியை வெட்டியுள்ளார். இதன்போது அந்த தடி மின் கம்பியில் விழுந்தது. இந்நிலையில் அவர் மீது மின்சாரம் கடுமையாக தாக்கியதால் நிலத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.சடலம் மீதான மரண விசா
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் அஞ்சலோ மெத்தியூஸ்
  •  ·  Srikanth
  •  · 
  •  ·  Sports
  •  ·  650 views
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் 21 ஆம் திகதி வரை காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அவர், இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,167 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவற்றில், 16 சதங்களும் 45 அரைசதங்களும் அடங்குகின்றன அத்துடன், 118 டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசியுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் 33 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.000