·   ·  2183 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார்?

பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை அனைவருக்கும் பிடித்திருந்தது. அவருடைய குறும்புகள் அனைத்தும் மனம் கவர்ந்தவையாகவே இருந்தன. பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இவரைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் வருகை புரிந்தார்கள் என்பதில் சற்றும் ஆச்சரியம் இல்லை.

அதேபோல் தான் பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை காணும் ஆசை சிவபெருமானுக்கும் ஏற்பட்டது. தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஈசன் ஒரு சிறுவன் உருவம் எடுத்து பிருந்தாவனம் சென்றார்.

சிறுவனாக இருந்த ஈசன் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். விளையாடி முடித்த சிவபெருமான் மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல்.

கண்ணன் புல்லாங்குழலை தனது சிறு வயதில் இருந்தே வாசிக்கத் தொடங்கினார். இவருடைய வாசிப்பைக் கேட்டு ஒட்டுமொத்த பிருந்தாவனமும் அந்த இசையில் மயங்கிப் போனது.

கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டதும் எப்பொழுதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் யமுனை நதி கூட தனது நீரோட்டப்பாதையை மாற்றி கண்ணன் இருக்கும் திசை நோக்கி பாயுமாம்.

அனைவருக்கும் புல்லாங்குழல் இசை பிடித்திருந்தாலும், கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததற்கான காரணம் தன்னை விட 5 வயது பெரியவளான ராதைக்காகத்தான்.

கிருஷ்ணன் ராதையையும், புல்லாங்குழலையும் மட்டுமே மிகவும் நேசித்தார். ஆனால், ராதைக்கு ஒரு முனிவரின் மூலம் ஒரு சாபம் கிடைத்தது. "கிருஷ்ணரை நீ இன்னொரு முறை சந்தித்தால், அடுத்த 100 ஆண்டுகளுக்கு கிருஷ்ணரை பிரிந்து தான் இருக்க வேண்டும்," என்ற சாபத்தை வழங்கினார்.

இதனால் மிகவும் மனமுடைந்த ராதை, 'என்ன தான் முயற்சி செய்தாலும் கிருஷ்ணரை பார்க்காமல் இருக்க முடியவில்லை' என்று அவரைப் பார்க்கச் சென்று விடுகிறாள்.

ராதை கிருஷ்ணரை பார்த்த அடுத்த கணமே முனிவரின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது. அதாவது அப்பொழுது தான் கிருஷ்ணர் ராதையை முதல் முறையாக பிரிந்து மதுராவிற்கு செல்கிறார்.

விதியின் சூழ்ச்சியால் கிருஷ்ணர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறே நூறு வருடங்களும் கடந்து விடுகின்றன.

அதன் பிறகு வயதான நிலையில் ராதை கிருஷ்ணரை காண செல்கின்றாள். அப்பொழுது ராதையை பார்த்த கிருஷ்ணர் "நீ என்னை ஒரு முறை பிரிந்ததே போதும்" என்று கூற, ராதை உடனே அழத் தொடங்கி விடுகிறாள்.

அதன் பிறகு ராதை கிருஷ்ணரிடம் எனக்காக ஒருமுறை உங்களது புல்லாங்குழலை வாசியுங்கள் என்று கேட்கிறாள்.

கிருஷ்ணரும் ராதையை நினைத்து புல்லாங்குழலை வாசித்தார். புல்லாங்குழல் வாசிப்பதை முடித்துவிட்டு கண்ணன் அவரது கண்களை திறந்து பார்க்கும் பொழுது, ராதை இறந்து கிடப்பதை பார்த்து தானும் ஒரு கடவுள் என்பதை மறந்து கதறி அழத் தொடங்குகிறார்.

இறுதியாக ராதையே என்னை விட்டு சென்று விட்டாள், ராதைக்காக நான் வாசிக்க தொடங்கிய இந்த புல்லாங்குழல் எதற்கு என்று உடைத்து தூக்கி எறிந்து விடுகிறார்.

மிகவும் பிடித்த விஷயங்கள் எல்லாம் கைவிட்டுப் போகும் என்பது மனிதருக்கு மட்டுமல்ல, அந்த கிருஷ்ணனுக்கே நிகழ்ந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

  • 108
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங