Category:
Created:
Updated:
I
நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...
நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.
சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.
எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது.. அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..
இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சத்தமா சொன்னா...
யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...