Support Ads
 ·   ·  2055 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மகான் ரமணர் வாழ்வில்....

சிதம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த நடேச ஐயருக்கு ஆஸ்ரமத்தில் சமையல்காரராக வேலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்ரமத்தில் இருந்தவரையில் மஹரிஷியை விட்டு விலகாமல் இருந்தார்

இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டு துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று நடேச ஐயர் தெளிந்த போது தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்து திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகவானின் நிழலில் இருந்தார். சமையலறையில் அவர் வேலையைத் துவங்கிய போது அங்கே பிராமண விதவைகள் பலர் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களால் மிகவும் சிரமமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். ”ஒரு எஜமானியம்மாவிடமிருந்து ஓடி வந்து ஐந்து எஜமானிகளிடம் மாட்டிக்கொண்டேன்” என்று ஒரு முறை ஐயர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

சமையலறையில் அவர்களின் தலையீட்டால் எழுந்த மன அழுத்தத்தில் ஆஸ்ரமத்தில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து ஓடிவிட முடிவு செய்தார். வீட்டிற்குத் திரும்பும் போது திருவண்ணாமலையிலிருந்து 40 மைல்களில் இருக்கும் விழுப்புரம் வந்தடைந்தார். அங்கே குளித்து முடித்த அவர் நெற்றியில் விபூதியைத் தரித்துக்கொண்ட போது பகவானை நினைத்துக்கொண்டு ஜபம் செய்தார். அப்போது பகவானே அவரது எதிரில் வந்து நிற்பதுபோல உணர்ந்தார்.

“நீங்க எப்படி இங்கே வந்தீங்க?” என்று ஆச்சரியத்துடன் ஐயர் கேட்கிறார்.

பகவான் சிரித்துக்கொண்டே.....

“என்கிட்டேயிருந்து எவ்ளோ தூரம் போயிட்டே?” என்று கேட்கிறார்.

கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய பதிலளிக்க முடியாமல் திணறுகிறார் ஐயர்.

எதிரில் நிற்கும் பகவானின் உருவம் திருவண்ணாமலையை நோக்கி நடக்கத் துவங்குகிறது. தயக்கமே இல்லாமல் ஐயர் பின் தொடர்கிறார். முன்னால் சென்ற உருவம் மறைந்தாலும் தனக்கு முன்னால் பகவான் சென்றுகொண்டிருக்கிறார் என்று அப்படியே நடந்து ஆஸ்ரமத்தை அடைகிறார் ஐயர். ஹாலுக்குள் நுழைந்து பகவான் முன்னால் தொப்பென்று விழுந்து நமஸ்கரிக்கிறார்.

“என்கிட்டேயிருந்து எவ்ளோ தூரம் போயிட்டே?” என்று விழுப்புரத்தில் கேட்ட அதே கேள்வியை பகவான் மறுபடியும் வாய்விட்டுக் கேட்கிறார்.

நிலைகுலைந்து போன ஐயர் குலுங்கிக் குலுங்கி அழுதார். சமையலறைக்குள் சென்று மீண்டும் தனது வேலைகளில் வழக்கம் போல ஈடுபட்டார்.

எல்லோரும் ஆஸ்ரமத்தில் தரிசிக்கும் இந்த தேகம் மட்டும் பகவான் இல்லை என்பதை இந்த நிகழ்ச்சி ஐயருக்குப் போதித்தது. அவரும் அதை புரிந்துகொண்டார்.

"நாம் மனதில் கிரகித்துக்கொள்வது போல பகவான் யாரோ அல்லது ஏதோ ஒன்றோ கிடையாது. அவரைப்பற்றி நாம் உண்மையாக எதுவும் சொல்ல முடியாது என்ற அறியாமையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நான் பகவானைப் பற்றி எதுவுமே சொல்லமாட்டேன். ஏனென்றால் உண்மையான பகவானை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனிப்பை எப்படி ருசித்தால் மட்டுமே உணர முடியுமோ அது போலவே பகவானை அறிந்துகொள்ளுதல்”

“அறுவை சிகிச்சை நடந்த அந்த நேரத்தில் இந்த உடம்பானது நாம் உடுத்திக்கொள்ளும் ஒரு சாதாரண சட்டை போலத்தான் என்பதைப் போன்றே அவரது நடவடிக்கைகள் இருந்தது. சதை அறுக்கப்பட்டு இரத்தம் வழிகிறது. ரேடியம் ஊசிகள் அந்த கான்சர் சதையைச் சுற்றி சொறுகப்படுகிறது. பகவான் முழு பிரக்ஞையோடு இருக்கிறார். அவரது கையில் செய்யப்படும் அந்த அறுவை சிகிச்சை செய்முறைகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. பகவானின் அந்த காஷ்ட மௌனத்தைக் கண்டு நாங்கள் வாயடைத்துப் போயிருந்தோம். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள். அறுவை சிகிச்சை நிறைவடைந்தவுடன் மருத்துவர்கள் தன்னிச்சையாக அவரது காலில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அந்த மருத்துவர்கள் குழுவிலிருந்து ஒருவர் பேசினார்.

“நான் இதுவரை நிறைய பேருக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு அனுபவம் எனக்கு வாய்த்ததில்லை”

அப்போது அந்த அறை முழுக்க ஒருவிதமான சாந்தி பரவியிருந்தது. அப்படிப்பட்ட அமைதியை நான் எங்கும் உணர்ந்ததில்லை. அது எப்படிப்பட்டது என்பதை என்னால் விளக்கமுடியவில்லை. ஆனால் இதுவரை நான் அனுபவித்திராத ஒரு அனுபவமாக அது இருந்தது.

  • 611
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங