Support Ads
 ·   ·  2055 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படித்ததில் பிடித்தது....

ஒரு முறைதான், ஒரே ஒரு முறைதான், உங்கள் உலகத்தை மாற்றக் கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள். வேறு ஒருவரோடும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை அவர்களிடம் சொல்வீர்கள்.

நீங்கள் சொல்வது போலவே அவர்களால் உள்வாங்கவும் முடியும். உங்களை முழுதாகக் கேட்க விரும்புவார்கள். உங்கள் எதிர்காலம், நிறைவேறாத கனவுகள், எட்ட முடியாத சிகரங்கள், வாழ்க்கை உங்கள் மீது வீசிய கொடும் கற்கள் என அனைத்தையும் அவர்களிடம் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், அவர்களிடம் சொல்வதற்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பரவசத்தில் அவர்களும் பங்கு கொள்வார்கள். உங்களோடு அழவோ, உங்கள் முட்டாள்தனத்தைப் பார்த்து சிரிக்கவோ தயங்க மாட்டார்கள்.

உங்கள் உணர்ச்சிகளை அவர்களால் காயப்படுத்த முடியாது. உங்களை மதிப்பிட மாட்டார்கள். உங்களை வளர்த்தெடுக்க அனைத்தையும் செய்வார்கள். உங்களுக்கே தெரியாத உங்களை காண்பித்து, உங்களை அழகாக்குவார்கள். அவர்களின் அருகாமையில் ஒரு வித மன அழுத்தமோ பொறாமையோ இருக்காது.

காற்றில் அமைதியை தூவி இருப்பார்கள். அவர்கள் உங்களை உங்களாக நேசிப்பதால், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம்; எதைப் பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு வார்த்தை, ஒரு பாடல், கை கோர்த்து நடந்த நொடிகள் மிகவும் முக்கியமானதை உங்கள் இதயத்தில் வாழும். உங்கள் சிறு வயது ஞாபகங்கள் தெளிவாக மனதில் அலையடிக்கும். நீங்கள் குழந்தையாக மாறுவீர்கள்.

வண்ணங்கள் அழகாகவும் பிரகாசமாகவும் தெரியும். அதுவரை எப்போதாவது இருந்த சிரிப்பு, உங்கள் வாழ்வில் தினசரி வாழ்வில் மறுக்க முடியாத மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிடும். ஒரு நீண்ட நாளில், களைத்துப் போகும் நேரத்தில், அவர்களது ஒரு குறுஞ்செய்தி, ஒரு அழைப்பு உங்கள் முகத்தில் சிரிப்பை வர வைக்கும். அவர்களுடைய இருப்பு அழகான திருப்தியைத் தரும். அவர்களோடு பேச வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்களுக்கு ஆர்வமில்லாத விஷயங்கள் கூட அவர்களுக்குப் பிடிக்கும் என்ற ஒரு காரணத்தால் உங்களை பரவசமாக்கும்.

உங்கள் நாளின் ஒவ்வொரு நொடியிலும், உங்களின் ஒவ்வொரு செயலிலும் இவரின் நினைவு இருக்கும். நீல வானம், தென்றல், புயல் போன்றவற்றில் அவரைக் காண்பீர்கள். உங்கள் இதயம் என்றேனும் ஒரு நாள் உடைக்கப்படலாம் எனத் தெரிந்தும் அதை அவருக்குக் கொடுப்பீர்கள். அப்படி கொடுப்பதில் எல்லையற்ற ஆனந்தத்தைக் கண்டடைவீர்கள். உடைந்து போகலாம் எனத் தெரிந்து பின்புதான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். உண்மையான மகிழ்ச்சி உங்களை பயம் கொள்ளச் செய்யும்.

ஒரு உண்மையான நட்பு, உங்களுக்கு உண்மையாக இருக்கும் ஒரு பாதியாக அவர் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்குத் துணையாக இருக்கும். வாழ்க்கை வித்தியாசமானதாக மாறி விடுகிறது. பரவசமாக. மகிழ்வாக. மதிப்புள்ளதாக. உங்களின் ஒரே நம்பிக்கை அவர்கள் உங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதுதான்.

 -பாப் மார்லே

  • 639
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங