·   ·  2055 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

விரக்தியை முழுமையாக நீக்கும் ஒடுகத்தூர் மகான்

உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிர பகவானுடன் ராகு சேர்ந்து இருக்கிறதா ? அல்லது செவ்வாய் பகவானுடன் ராகு சேர்ந்திருக்கிறதா? அல்லது உங்கள் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் அதிபதியாக எந்த கிரகம் வந்தாலும் அந்த கிரகத்துடன் சேர்ந்து ராகு பகவான் சேர்ந்து இருக்கிறாரா ?

ஆமாம் என்றால் உங்களால் தாங்க முடியாத சோகங்கள் & அவமானங்கள் உங்கள் வாழ்க்கையில் சில காலம் வரும்!

அப்படி வராமல் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமாவது ஒடுக்கத்தூர் மகான் சன்னதிக்கு சென்று அன்னதானம் செய்யுங்கள் .அல்லது அன்னதானம் செய்ய தேவையான உணவு பொருட்களை இங்கே உள்ள நிர்வாகிகளிடம் ஒப்படையுங்கள்.அது உங்கள் பிறந்த நாள் அல்லது ஜென்ம நட்சத்திர நாளாக இருக்கலாம் .

இதை செய்ய இயலாதவர்கள் ஒரு மணி நேரம் அவர் சன்னதியில் தியானம் செய்யுங்கள், இதன் மூலமாக உங்களுக்கு வரக்கூடிய தாங்க முடியாத சோகங்கள் அவமானங்கள் நெருங்காது .

கடந்த 10 ஆண்டுகளாக இதை அனுபவத்தில் உணர்ந்து அதன்பிறகு ஒடுக்கத்தூர் மகானில் ஆசீர்வாதம் மற்றும் அனுமதியோடு இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

ரத்தினபுரி என்ற வட மாநில ஊரில் லோகையா நாயுடு பாலாம்பிகை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஒடுக்கத்தூர் மகான் ஆவார். சேஷயா இவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயராகும் .இவர் பல ஆண்டுகளாக தவம் செய்து ஏராளமான மக்களுடைய கர்ம வினைகளை தீர்த்து வைத்திருக்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மகான்களுக்கு முக்தி தரக்கூடிய அளவுக்கு வழிகாட்டும் நவநாத சித்தருக்கு இணையான மகானாக வாழ்ந்தார்.

சித்தர்களின் பல்வேறு பகையான பிரிவுகள் உண்டு. சித்தர்களின் நீதிபதிக்கு இணையானவர்கள் நவநாத சித்தர்கள் ஆவார்கள்.

மதனப்பள்ளி ஒடுக்கத்தூர் பெங்களூர் கொண்டித் தோப்பு புனே முதலிய இடங்களில் ஒடுக்கத்தூர் மகான் அவர்களுடைய சமரச சன்மார்க்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் பெங்களூரில் உள்ள ஒடுக்கத்தூர் ஜீவசமாதி மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக இதன் செயலாளராக அரும் பெரும் பணிகள் செய்தவர் திரு. ராஜபாதர் முதலியார் ஆவார்.

பல ஆண்டுகளாக அருணாச்சல பிள்ளை என்பவருக்கு இருந்து வந்த வயிற்று வலி நோய் ஒடுக்கத்தூர் மகான் சுவாமிகள் தரிசனத்தாலும் ஸ்பரிசத்தாலும் நீங்கிவிட்டது.

அல்சூர் பகுதியைச் சேர்ந்த நாகாபாய் அம்மாள் ,மீனாட்சி அம்மாள்

குடியாத்தம் என்ற ஊரை சேர்ந்த முனிசாமி நாயுடு,சுப்பா நாயுடு

புங்கனூர் சமஸ்தானம் துறை பசவ ராஜா

வீர சைவ சித்தலிங்கப்பா

நாராயணசாமி செட்டியார்

கருப்பண்ண செட்டியார்

அருணாச்சலம் பிள்ளை போன்றவர்கள் இவருக்கு ஏராளமான பணிவிடை செய்து சீடர்களாக இருந்து இவரின் புகழை பரப்பியவர்கள்.

இவரது காலத்தில் இவரை புகைப்படம் எடுக்க பலர் முயற்சி செய்தார்கள்.

ஆனால் யாருடைய கேமராவிலும் இவருடைய உருவம் பதிவாகவில்லை.

அல்சூர் பகுதியைச் சேர்ந்த திருவாளர் பழனிவேலு முதலியார் என்பவர் சுவாமிகளின் மீது தீராத பாசத்தோடு வாழ்ந்து வந்தவர். அவர் அனுமதியோடு ஒரே ஒருமுறை எடுத்த புகைப்படம் தான் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது.

இந்த படத்தை அச்சடித்து உங்களுடைய வீட்டில் வைத்து தினமும் ஓம் ஸ்ரீ ஒடுக்கத்தூர் மகான் நமக என்று ஜெபம் செய்து வரலாம்.

ஒடுத்தூர் மகான் அவர்களை தரிசனம் செய்து ஞானம் பெற்ற துறவிகள் ஏராளமானவர்கள் உண்டு .அவர்களில் அத்வைத ஞானி அருள் திரு வையாபுரி சுவாமிகள் ஓமா நகர் அருள் சித்தர் துடைத்தட்டி அருணாச்சல சுவாமிகள் பழனி அற்புத வனார் மதுரை சட்டி சாமிகள் தவத்திரு செல்லப்ப சுவாமிகள் ஸ்ரீமத் நாராயண சுவாமிகள் போன்றவர்களை குறிப்பிடலாம்.

ஓடுக்கத்தூர் மகான் ஆனந்த வருடம்,தை மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று 16.2.1915 ஆம் தேதியில் பரிபூரண சமாதி ஆனார்.

  • 471
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங