Support Ads
 ·   ·  2055 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மாறியது மனது (குட்டிக்கதை)

“நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு.. நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்கீங்க… ஆனா இவ்வளவு காலமா இல்லாம இப்ப ஊர்வம்பு வாசல்தேடி வந்து நிக்குது…அக்கம் பக்கம் இளக்காரமா பார்க்கறாங்க … என்ன பண்ணீங்க சொல்லுங்க?” கண்ணீர் வழிய மூக்கை உறிஞ்சியபடியே வழிமறித்து நின்றாள் நளினி.

“தப்பு தான் நளினி…நான் எதுக்காக அப்படி பண்ணினேன்னா…” பீடிகையோடு ராகவன் ஆரம்பிக்க இடைமறித்தாள் நளினி.

“நீங்க ஒன்னும் சால்ஜாப்பு சொல்ல வேணாம்.. நம்ம தெரு பசங்ககிட்ட ஒயின்ஷாப்ல கலாட்டா பண்ணியிருக்கீங்க.. அவனுங்க நம்ம பையன்கிட்ட..’உன் முகத்துக்காகதாண்டா உங்க அப்பாவை சும்மா விட்டோம்’னு சொல்லிட்டு போனப்ப…தலைக்கு உசந்த பிள்ளை எப்படி கூனிக்குறுகி நின்னான் தெரியுமா?”

“நளினி…உன் ஆதங்கம் சரிதான்..! அந்த பசங்களோட நம்ம ரவி கூட காலேஜ்ல படிக்குற அரவிந்தனும் வந்திருந்தான்.. குடும்ப கஷ்டத்தை நெனச்சு லீவுநாட்கள்ல அந்த பையன் பெயிண்டிங் வேலைக்கு போறான்… இன்னிக்கு சாயங்காலம் சம்பளம் பிரிக்கும் போது ஆயிரம் ரூபாய் நோட்டை சில்லரை மாத்த ஒயின்ஷாப்புக்கு வந்தானுங்க..

அவனுங்க எல்லோரும் குடிக்க பழகினவனுங்க…அதனால அந்த அரவிந்தன் மட்டும் ஒதுங்கி தூரமா போனான்.. ஆனா அவனுங்க விடல.. சும்மா பாருக்குள்ள வந்து ஒரு ஆப்பாயில் சாப்பிட்டு கம்பெனி கொடுடான்னு அவனை வற்புறுத்துனானுங்க.. அவனும் இவனுங்க கூடவே உள்ளே வந்துட்டான்.”

“இந்த மாதிரி சூழல்தான் படிப்படியா என்னையும் குடிகாரனா மாத்துச்சு…அதே நிலமை அரவிந்தனுக்கும் ஏற்பட்டுடாம தடுக்கனும்னு நினைச்சேன்.. அதான் போதை ஏறினது மாதிரி நடிச்சு…அவனுங்க டேபிள்ல இருந்ததையெல்லாம் தட்டிவிட்டேன்..

முதல் அனுபவமே கசப்பானதாக இருந்தா அடுத்த முறை அந்த இடத்துக்கு வர அரவிந்தன் கூச்சப்படுவான்.. என்னை மாதிரி நாத்த அகழியில அவனும் விழுந்து..அதன் மூலமா அவனைச் சேர்ந்தவங்களும் அவமானப்பட வேணாம்னு நினைச்சேன்..அது தப்பா நளினி.!?” என்றார் ராகவன்.

பக்கத்து அறையில் கேட்டுககொண்டிருந்த ரவி அவசரமாக ஒரு பிளாஸ்டிக் பையை ஜன்னல் வழியே வீசியெறிந்தான்.’களீ’ரென்று சப்தத்தோடு விழுந்து நொறுங்கியது மது பாட்டில்.!

  • 495
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங