Support Ads
 ·   ·  2054 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சகுனம் (குட்டிக்கதை)

காலை 8 மணிக்கு மேல்,

தனசேகரன் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு (இன்டர்வியூ) போறதுக்கு புறப்பட்டு கொண்டிருந்தான்.

தனசேகரன் கல்லூரி படிப்பை முடித்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும். வேலை கிடைக்கவில்லை.

புது புது கம்பெனிகளுக்கு இன்டர்வியூ சென்று வந்து கொண்டு இருந்தான்.

எந்த கம்பெனியிலும் வேலை தரவில்லை. நிராகரிக்க பட்டான். அதற்கான காரணம் என்ன என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

அம்மா லக்ஷ்மி , “தனசேகரா, இன்டர்வியூக்கு கெளம்பிட்டியா. நல்லா சாமிய கும்பிடு. இந்த வேலையாவது கிடைக்கணும் அப்படின்னு வேண்டிக்கோ “ என்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் படத்தை பார்த்து கூறினாள்.

“சாமிய கும்பிட்டேன். நான் கிளம்புறேன் “ என்றான் தனசேகரன்.

“நில்லு ஒரு நிமிஷம் , எத்தன தடவ சொல்றது , சகுனம் பார்த்து போகணும்னு. நீ வீட்ல இருந்து வெளியில போறப்ப , நல்ல விசயத்த , இல்ல நல்ல ஆட்களை பார்த்துட்டு போகணும். அப்போ தான் போற காரியம் நல்லா நடக்கும். நம்ம காம்பவுண்ட்ல இருக்கிற ஆளு எல்லாம் பொறமை பிடிச்ச ஆளுக , அவங்கள பார்த்துட்டு போனா ஒன்னும் விளங்காது “ என்று கூறிவிட்டு , வாசலை நோக்கி நகர்ந்தாள் அம்மா லக்ஷ்மி.

எட்டி பார்த்து விட்டு , “தனசேகரா , இப்போ கெளம்பு . காம்பவுண்ட்ல யாரையும் காணோம். சீக்கிரமா கிளம்பு “ என்று அம்மா லக்ஷ்மி கூறியதும் , வேகமாக பைலை எடுத்து கொண்டு கிளம்பினான் தனசேகரன்.

அப்போது அந்த காம்பவுண்ட்ல கீழ் வீட்டை கடந்து செல்லும் போது , அந்த கீழ் வீட்டில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.

“தம்பி கொஞ்சம் இரு. நீ புதுசா வேலைக்கு போக போற , நல்ல சகுனம் பார்த்து போகணும். நீ வேற அந்த தனசேகரன் முகத்தில முழிச்சிட்டு போயிராத. அவனுக்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது. ராசி இல்லாதவன். அவனுக்கு , அவன் அம்மாக்கு உன் மேல தான் ஒரு கண்ணு. கொள்ளிகண்ணு. இரு நான் வாசல்ல பார்த்துட்டு , சொல்றேன் அப்புறம் வரலாம் “ என்று தன் மகனிடம் கூறி கொண்டிருந்த பெண்ணின் குரல் , அந்த வீட்டு வாசலை கடந்து கொண்டு இருந்த தனசேகரனுக்கு கேட்டது.

அவளின் பேச்சு கேட்டு அவனுக்கு கோபம் வந்தாலும் , யோசிக்க வைத்தது. அப்போது தனசேகரனுக்கு புரிந்தது.

என் அம்மாவின் பேச்சும் இப்படிதானே மற்றவர்களை காயப்படுதிருக்கும் என்று.

சகுனம் பார்ப்பது சரியா தவறா என்பதை விட , அவர்கள் எடுக்கும் முயற்சியே அவர்களின் செயலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்...

  • 549
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங