- · 5 friends
-
I

முடி உதிர்கிறதா?
முடி உதிர்தல் என்பது இந்த நாட்களில் நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதில், ஆரோக்கியமான ஊட்டச்சத்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், பிரச்சினை சில நேரங்களில் வேர்களிலிருந்து உருவாகிறது. எனவே உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலிமையாக்குவது அவசியம்.
உண்மையில், உலர்ந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சருமத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வீர்களோ, அதேபோன்று உங்கள் உச்சந்தலையிலும் எண்ணெய் தடவ வேண்டும்.
முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் எண்ணெய்களை வாங்குவதற்குப் பதிலாக, சுத்தமான தேங்காய் எண்ணெயில் சில ஆரோக்கியமான பொருட்களைக் கலந்து, அனைத்து நன்மைகளையும் பெறலாம். இவை உண்மையில் நன்றாக வேலை செய்யும். இங்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய எண்ணெய் உள்ளது.
அதை எவ்வாறு தயாரிப்பது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் :
2 கப் – தேங்காய் எண்ணெய்
½ கப் – எள் எண்ணெய்
½ கப் – விளக்கெண்ணெய்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
நெல்லிக்காயும் சேர்க்கலாம்
1 டீஸ்பூன் – வெந்தயம்
3-4 – செம்பருத்தி மலர்கள்
ஒரு கைப்பிடி செம்பருத்தி இலைகள்
எப்படி செய்வது?
அனைத்தையும் ஒரு இரும்பு கடாயில் ஒன்றாக கலந்து, எண்ணெய் கருமையாகும் வரை, மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு தீயை அணைக்கவும்.
சிறிது ஆறவைத்து, வடிகட்டிய பின் கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை தடவலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை தினமும் பயன்படுத்தலாம், எந்த பிரச்சனையும் இல்லை.
முகநூலில் படித்தது.....

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·