Support Ads
 ·   ·  1863 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ராகுவைப் பற்றி சில பல தகவல்கள்

அசுர குலத்தில் பிறந்த சுவர்பானு எனும் அரக்கனின் தலைப்பகுதியே ராகு ஆவார். சூரியனையும், சந்திரனையும், ஏனைய கிரகங்களையும் விழுங்கும் தன்மை கொண்டவர் ராகு.

திருப்பாற்கடலில் அமுதத்தினை எடுக்க தேவர்கள் வரிசையில் சுவர்பானுவும் தேவர்களைப் போல மாறுவேடத்தில் இருந்து அமுதத்தை உண்டமையால் அழியாத வரம் பெற்றார் சுவர்பானு.

இதனை சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் கூறியமையால் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் இரு கூறுகளாக பிளக்கப்பட்டு மாயபிம்பங்களாக ராகு கேது என்று அழைக்கப்பட்டார்கள்.

ராகு மாய இருள் கிரகம். ராகுவிடம் பிடிபடும் அனைத்து கிரகங்களும் தன் பலத்தை முழுமையாக இருக்கும். அவ்வளவு வல்லமை வாய்ந்த ராகு நிழல் உருவத்தில் ஒருவரை பின்தொடர கூடியவர்.

ராகுவே தந்தை வழி முன்னோர்களின் கர்ம காரக கர்த்தராக செயல்படுகிறார். ராகு சுக்கிரனை போல அசுர குணம் கொண்டவர். ஒருவரை யோகத்தை கொடுத்து அவரை பிரபலப்படுத்தி சரிய வைப்பது ராகுவே.

ஒருவர் ஜாதகத்தில் ராகு மற்றும் வலிமை பெற்றிருந்தால் தந்தையாலும், தந்தை வழி உறவுகளாலும், தந்தை வழி முன்னோர்களாலும் அன்பையும், பேரையும் புகழையும் ஜாதகர் பயன்படுத்தி வாழ்வார்.

அதே ராகு வலிமை இழந்து இருந்தால் தந்தையாலும், தந்தை வழி உறவாலும், தந்தை வழி முன்னோர்களாலும் எந்த ஒரு பயனும் இல்லாமல் தவிக்கும் நிலையை தந்து வாழ்வின் நிலையை சரிய வைத்து விடுவார்.

ராகு வேகமாக செயல்படக்கூடிய கிரகம். ஒரு கிரகத்தின் பலனை வேகமாக உறிஞ்சி தன் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் தன்மை படைத்த ராகு, ஒருவருக்கு யோகம் தர கடமைப்பட்டவராக ஜாதகத்தில் ராகு அமர்ந்தால் அவரது வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.

ராகு ஒரு ஜாதகரை எந்தெந்த வழியில் வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறார் என்பதை காண்போம்.

ஒருவர் சினிமா துறையிலும்(புதுமுக நடிகர்), எதிர்ப்பாராத பணவரவு (லாட்டரி டிக்கெட்), புதையல் யோகமும், இணையதளம் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலமும் (Facebook, Instagram, YouTube), டிரான்ஸ்போர்ட், பலபலத் தொழில் நிறுவனங்களை முதலீடு செய்தல்,(shares, partnership) இது போன்ற பல துறைகளில் ராகுவின் அதீத பலன்களை பெற்ற நபர்களாக இருப்பார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் ராகுவிற்கு வீடு கொடுத்தவர் லக்னத்திற்கு 1-5-9 அதிபதியாக இருந்தாலும், 3-6-8-12 இடங்களில் மறைந்தாலும், செவ்வாய், சனி, குரு போன்ற கிரகங்கள் வக்கிர நிலையில் ராகு இருந்தாலும் தனது திசையில் யோகத்தையும், தொழில் யுக்தியையும் ஜாதகருக்கு நிச்சயம் வெளிக்கொண்டுவந்து காட்டுவார்.

(ராகு தரும் யோகத்திற்கு வயது வரம்பு என்பது கிடையாது. சிறுவயதில் திசை வந்தாலும் யோகத்தை தரும்.)

ஒருவராகு திசையில் அதீத கஷ்டங்களையும், கடன் நெருக்கடிகளையும், உடல் உபாதைகளையும், மன கஷ்டங்களையும், மன அழுத்தங்களையும், கொண்டுள்ள அன்பர்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை முறைப்படி செய்து வழிபாடு செய்வதன் மூலம் ராகுவின் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும், ஊனமுற்ற முதியவர்களுக்கும் உங்களால் இயன்ற அளவுக்கு உதவிகள் செய்து வர ராகுவால் வரக்கூடிய கெடுபலன்கள் குறையும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரங்களில் துர்க்கை அம்மனுக்கும் அல்லது காலபைரவர்க்கும் மிளகு தீபமேற்றி வழிபாடு செய்து வர ராகுவின் கெடு பலன்கள் குறையும்.

  • 392
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங