Support Ads
 ·   ·  1729 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

குரு காட்டிய வழி (குட்டிக்கதை)

நான்-இன் என்பவர் ஒரு குருவிடம் பல காலமாக சீடராக இருந்தார்.

பல காலம் கழித்து குரு சொன்னார் உனக்கு எல்லாம் நிறைவேறி விட்டது ஏறக்குறைய நீ அடைந்து விட்டாய் என்றார்.

குருவே ஏறக்குறைய என்றால் என்ன அர்த்தம்,

அதன் பொருள் என்ன என்றார் நான் -இன்?

குரு சொன்னார் நான் உன்னை இன்னொரு குருவிடம் அனுப்பி வைக்கப் போகிறேன்

இறுதியான நிறைவு பணியை அது செய்து முடிக்கும் என்றார்.

நான்-இன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்

சரி என்னை அனுப்பி வையுங்கள் என்றார்.

குரு கடிதம் ஒன்றை கொடுத்து நகரில் ஒருவரை சந்திக்கும் படி அனுப்பி வைத்தார்.

குரு அனுப்பி வைத்த ஆளை வந்து சந்தித்தார் நான்-இன்.

அவர் சந்தித்த நபர் ஒரு உணவு விடுதி நடத்துபவர்.

கடிதத்தைப் படித்துவிட்டு விடுதிகாரர் சொன்னார் உங்கள் குரு ஏன் என்னிடம் அனுப்பி வைத்தார் என்று எனக்கு தெரியாது.

நான் அந்த அளவுக்கு படித்தவன் இல்லை.

உங்களுக்கு போதிக்கும் அளவிற்கு எனக்கு எதுவும் தெரியாது.

இருந்தாலும் உங்களை இங்கு அனுமதிக்கிறேன் நீங்கள் தொடர்ந்து என்னை கவனியுங்கள் என்றார்.

நான்-இன் தொடர்ந்து மூன்று நாட்களாக விடுதிகாரரை கவனித்து வந்தார்.

அவர் காலையில் விடுதியைத் திறப்பதும் வியாபாரம் செய்வதும்

பிறகு இரவு பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு விடுதியை மூடுவதும்,

மீண்டும் காலையில் எழுந்து விடுதியை திறந்து பாத்திரங்களை கழுவுவதையும் அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக கவனித்து வந்தார்.

நான்-இன் க்கு சலித்துவிட்டது.

இதில் கவனிப்பதற்கு ஏதும் இல்லை

நீ எப்போது பார்த்தாலும் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு இருக்கிறாய்.

சாமானியமான வேலைகளையே செய்து கொண்டிருக்கிறாய்.

எனவே நான் போகிறேன் என்றார்.

விடுதிகாரர் சிரித்துவிட்டு அனுப்பி வைத்தார்.

நான் - இன் மீண்டும் தன் குருவிடம் வந்தார்.

மிகவும் கோபமாக, என்னை ஏன் அவ்வளவு தூரம் அங்கு அனுப்பி வைத்தீர்கள்.

அந்த விடுதிகாரன் ஒரு சாதாரண ஆள்.

அவன் எதுவும் எனக்கு கற்பிக்கவும் இல்லை

வெறுமனே கவனி என்று மட்டும் தான் சொன்னான்.

கவனிப்பதற்கும் அங்கு எதுவும் இல்லை என்றார்.

குரு சொன்னார் அங்கு நீ அடிக்கடி கவனித்த ஏதாவது ஒன்றை மட்டும் சொல் என்றார்.

நான் -இன் சொன்னார் அவன் தினமும் மாலையில் பாத்திரங்களை கழுவி வைக்கிறான்

மீண்டும் காலையில் அதே பாத்திரங்களை கழுவுகிறான் இதுதான் பார்த்தது என்றார்.

குரு சொன்னார் இதுவே என் போதனையும்.

உன்னை நான் அனுப்பி வைத்ததே இதைக் கவனிக்கத்தான்.

பாத்திரங்களை இரவில் அவர் கழுவி வைத்தார்.

இருந்தாலும் அந்த கழுவிய பாத்திரங்களையே காலையிலும் அவர் திரும்ப எடுத்து கழுவிக் கொண்டிருந்தார்.

இதன் பொருள் என்ன?

இரவிலும் கூட ஒன்றுமே இல்லாது இருக்கும் போது கூட அவை அழுக்காகியிருக்கின்றன.

ஓரளவு தூசு மாசு அதற்குள் படிந்துவிட்டு இருக்கிறது.

எனவே நீ தூயவனாக இருக்கலாம்.

நீ அப்பழுக்கு இல்லாதவனாக கூட இருக்கலாம்.

ஆனால் காலத்தில் ஒவ்வொரு கணமும் உன்னை தொடர்ச்சியாக தூய்மைபடுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

எதையுமே செய்யாமல் இருந்தாலும் கால ஓட்டத்தில் கலங்கம் அடைகிறாய்.

நான் தூய்மையானவன் என்பது கூட ஒரு ஆணவம் ஆகிவிடுகிறது.

இதுவே நான் தரும் இறுதி போதனை என்றார் குரு.

எனவே ஒவ்வொரு கணமும் புதியதாய் இருங்கள்.

  • 472
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங