·   ·  1729 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தினமும் சொல்ல வேண்டிய சிவ மந்திரங்கள்

வாழ்க்கையே மாற்றும் சிவ மந்திரங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். இந்த மந்திரங்களை சொல்ல சொல்ல சிவனின் அருளையும், சிவனையும் நமக்குள் உணர முடியும்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் சிவனின் நினைவால், அவரின் மந்திரங்களை சொல்லிக் கொண்டே ஒவ்வொரு செயலையும் செய்யும் போது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாக காண முடியும்.

மந்திரங்களில் முதன்மையானதும், மிக பழமையானதுமாக சொல்லப்படுவது காயத்ரி மந்திரம். ஆனால் அதை விடமும் பழமையான மந்திரமாகவம், மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகவும் சொல்லப்படுகிறது பஞ்சாட்சர மந்திரமான, "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரம் தான்.

இதற்கு சிவனை உன்னை வணங்குகிறேன் என்பது தான் பொருள். இந்த மந்திரத்தை இன்னும் ஆழமாக சென்று பார்த்தால் பல விதமான அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, சிவன் என்ற சொல்லுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள்.

அனைத்து விதமான ஆனந்தத்தையும் அளிப்பவனை வணங்குகிறேன் என்பது இந்த மந்திரத்திற்கு பொருளாக கொள்ளலாம்.

சிவ பெருமானே அனைத்து உலங்களுக்கும் தலைவனாகவும், ஆதியும் அந்தமும் இல்லாமல் அனைத்து இடங்களிலும், அனைத்துமாகவும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆரம்பமும் முடிவும் இல்லாதவனை வணங்குகிறேன், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குகிறேன் என்பது உள்ளிட்ட பல அர்த்தங்கள் இந்த மந்திரத்திற்கு சொல்லப்படுகிறது.

இது தவிர இன்னும் எத்தனையோ மந்திரங்கள் சிவனின் அருளை பெறுவதற்காக உள்ளன. இவற்றின் நம்முடைய தினசரி வாழ்க்கையில் எந்த நேரத்தில், எந்த மந்திரத்தை சொன்னால் சிவனின் அருளால் நம்முடைய வாழ்க்கையே மாறும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் சொல்ல வேண்டிய தமிழ் சிவ மந்திரங்கள் :

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் :

அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது சொல்ல வேண்டியது :

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது சொல்ல வேண்டியது :

தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது சொல்ல வேண்டியது :

காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது சொல்ல வேண்டியது :

தோழா போற்றி துணைவா போற்றி

வீட்டின் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டியது :

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது சொல்ல வேண்டியது :

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது சொல்ல வேண்டியது :

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது சொல்ல வேண்டியது :

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது சொல்ல வேண்டியது :

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டியது :

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது சொல்ல வேண்டியது :

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

  • 680
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங