·   ·  1729 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கழுதை கற்றுக் கொடுக்கும் பாடம் (குட்டிக்கதை)

ஒரு ஊரில் இருந்த ஞானி ஒருவரை தேடி வந்தார், பெரியவர்.

அந்த ஞானியிடம், 'ஐயா, ஞானத்தில் சிறந்த ஞானம் எது?' என்று கேட்டார்.

'இன்பத்தால் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தால் சோர்வடையாமலும் இருப்பது தான் அது...' என்றார், ஞானி.

'சரி, சுவாமி... அப்படிப்பட்ட ஞானம் உங்களுக்கு எப்படி வந்தது?' என்றார், பெரியவர்.

'அதை, ஒரு கழுதையிடம் இருந்து, நான் கற்றேன்...' என்றார், ஞானி.

பெரியவர் ஒன்றும் புரியாமல் விழிக்க, 'நீங்க, நாளைக்கு காலையில் ஆசிரமத்துக்கு வாங்க, புரிய வைக்கிறேன்....' என்றார், ஞானி.

மறுநாள் காலை, ஆசிரமத்துக்கு வந்த பெரியவரை, 'வாங்க, வந்து இப்படி உட்காருங்க. கொஞ்ச நேரத்தில் இந்த வழியாக ஒரு கழுதை போகும். அதை கவனிங்க...' என்றார்.

பெரியவருக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஞானி சொன்னது போல் உட்கார்ந்திருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த வழியாக, ஒரு கழுதை, முதுகு நிறைய அழுக்கு மூட்டைகளை சுமந்தபடி சென்றது. ஒரு சலவைத் தொழிலாளி அதை ஓட்டி கொண்டு போனார்.

கொஞ்ச துாரத்தில் இருக்கும் ஆற்றில் துணியை சலவை செய்து, மாலையில் இந்த வழியாகவே திரும்புவர்.

ஞானி கூறியது போல், அழுக்கு மூட்டையை சுமந்து சென்ற கழுதையை கவனித்தார், பெரியவர். கழுதை போனதும், ஞானியைத் திரும்பிப் பார்த்தார்.

'சாயந்தரம் வரைக்கும் நீங்க இங்கேயே இருக்கணும்...' என, ஞானி கூற, பெரியவரும் இருந்தார்.

சாயந்தரம் ஆனதும், 'ஐயா, இப்ப கொஞ்ச நேரத்தில் அந்த கழுதை இந்த வழியாக திரும்பி வரும். அதையும் கவனிங்க...' என்றார், ஞானி.

பெரியவரும் கவனித்து கொண்டிருந்தார். கழுதை வந்தது. அதன் முதுகில் சலவை செய்யப்பட்ட துணி மூட்டையை சுமந்து சென்றது.

பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை; பொறுமை இழந்து, 'சரி சுவாமி, இந்த கழுதைக்கும், உங்க ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்றார்.

'ஐயா, இந்த கழுதை தினமும் காலையில், அழுக்கு மூட்டைகளை சுமந்து ஆற்றுக்கு போகிறது. மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து திரும்பி ஊருக்கு போகிறது.

'காலையிலே இது போகும் போது, முதுகில் அழுக்கு மூட்டைகளை சுமந்து போகிறோம் என்ற வருத்தம் இல்லை. அதேபோல், சாயந்திரம் திரும்பி வரும் போது, சுத்தமான துணிகளை சுமந்து வருகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதைப் பார்த்துத் தான் நானும், அது மாதிரி, ஞானத்தை கற்றுக் கொண்டேன்...' எனக் கூறி முடித்தார், ஞானி.

அதனால், யார் கற்றுக் கொடுத்தனர் என்பதை விட, எதைக் கற்றனர் என்பது தான் முக்கியம்.

  • 487
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங