Support Ads
 ·   ·  1863 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வாழ்க்கை

25 வருடங்கள் முன்னர் எங்கள் ஊரில் ஒத்தக்கை தேவர் என்று ஒருவர் இருந்தார் பெண்ணொன்று , பையன்ஒன்று

இரண்டு பேரையும் அவ்வளவு அருமையாக வளர்த்தார் பையன் குதிரை பூட்டிய வண்டி ஓட்டி வரும் பொழுது ஊரே வேடிக்கை பார்க்கும்

அதற்கு இணையாக அந்தப் பெண் சைக்கிள் ஓட்டுவதும் ,இருசக்கர வாகனம் ஓட்டுவதும் ,குதிரை வண்டி ஓட்டுவதும், சிலம்பு சுற்றுவது என பார்ப்பவர்களை கவரும் வண்ணம் ஆக படிப்பும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வளர்த்தார் .

அந்த பெண் பருவமடைந்த பின் அவர்கள் சொந்தத்திலேயே பையன் ஒருவன் ஒருவனுடன் காதல் உண்டாயிற்று .

அவர்கள் இருவரும் சாரட்டு வண்டியில் செல்லும் பொழுதும் ,இருசக்கர வாகனத்தில் அந்த காலத்தில் அந்தப் பெண் ஒட்டி அந்த பையன் பின்னால் அமர்ந்து செல்வதும் வேடிக்கை பார்க்காதவர் பாக்கி இல்லை

18 வயதைத் தாண்டியதும் முறைப்படியே ஊரறிய 20 ஆடுகளுக்கு மேல் வெட்டி ,சமையல் செய்து பெரிய அளவில் திருமணம் நடந்தது

ஐந்து நாட்கள் கழித்து அவர்கள் மணமகன் ஊருக்குப் போகும்போது வருத்தப்படாத ஜனம் இல்லை . அந்த பெண் அனைவரிடம் சிரித்தவாறு தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் டாட்டா காண்பித்து சென்றது இன்றும் கண்களில் இருக்கிறது

அங்கே சென்று இரண்டாம் நாள் இருவரும் கிணற்றுக்கு குளிக்க சென்றிருக்கிறார்கள்.பெண் மேலே இருக்க அந்த பையன் கிணற்றில் விழுந்து குளித்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார்

அந்த பெண் செய்வதறியாமல் துடித்து, கத்தி பின்னர் மின்சாரத்தை துண்டித்து அவனை வெளியே கொண்டு வருவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது

அன்று ஊரே அந்த பெண்ணுக்கு அழுதது .

அந்த பெண்ணின் அழகு ,அவ்வளவு சந்தோசங்கள் அழகு எல்லாமே பட்டுபோய் விட்டது

ஒரு மாதம் முன்னர் தெரிந்த ஒருவருக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தினேன் .

அப்போது ஒரு பெண் அண்ணா !இங்க வாங்க ,அண்ணா! இங்க வாங்க, 50 ரூபாய்க்கு மொத்தமாக தரேன் என்று செம்பட்டை முடியும், தோளில் துண்டும் ,வியர்த்த முகமாக அழைத்தார்.

சரி ,என்று ஐம்பது ரூபாய் கொடுக்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல் .

முகத்தை மறுபடியும் ஒருமுறை பார்த்து பொறி தட்டியது போல, நீங்கள்ஒத்தக்கை தேவர் மகள் தானே ?என்றதும் , ஆமாம் அண்ணா ,சரியாச் சொன்னே. இத்தனை வருஷத்துல கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டே, என்று சிரித்தவாறு இன்னும் இரண்டு மூன்றுபிஞ்சுகள் சேர்த்து போட்டாள்

நான் கேட்க வந்த கேள்வியும், அந்த பெண் இருந்த நிலையும் ,முன்னொருகாலத்தில் பட்டாம்பூச்சி போன்று சிறகடித்த அவளின் அழகும் ,சிரிப்பும் ,பளீரென அவளின் சிரிப்பும், சிலம்பம் சுற்றும் கண்ணுக்குள் மின்னல் அடிக்க நல்லா இருக்கியாமா ?என்று உதட்டளவில் கேட்டுவிட்டு மனதளவில் மிகவும் வருத்தப்பட்டு வந்துவிட்டேன்

அண்ணா !பிஞ்சு வெள்ளரிக்கண்ணா ,ரொம்ப பிஞ்சுங்கண்ணா , வாங்க அண்ணா என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது

வாழ்க்கை சில பேருக்கு அழகாக இல்லை. பல பேருக்கும் கூட

  • 1005
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங