Support Ads
- · 5 friends
-
I
அவர் இறந்து விட்டார்
"பெரிசு போயிருச்சு.."
அடக்கம் பண்ணணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லைதான்...
ஆனாலும் இப்போதுதான்
இவர் இறந்திருந்தார்
என்பதை மட்டும் என்னால்
நம்ப முடியவில்லை...
இருபது வருடங்கள் முந்தி
அவர் மனைவி இறந்தபின்
"சாப்பிட்டியா..?"என்று
யாரும் கேட்காத நேரத்திலேயே
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை.
"பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே
சனியன்" என்று அவர் காதுபடவே
மருமகள் பேசிய போது
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை.
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின்னோ
வீட்டின் ஓரம் மட்டுமே
என்று நடைபிண வாழ்ந்தபோதே
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை.
"காசு என்ன இங்கே
மரத்திலயா காய்க்குது..?"
அன்றொருநாள் மகன்
அமிலவார்த்தை வீசிய போழுதில்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை.
"என்னங்க... இந்த கெழத்த
ரொம்ப தூரத்திலே இருக்குற
ஏதாவது முதியோர் இல்லத்தில
விட்டுட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க..."
என்ற கடுஞ்சொல் காதில்
விழுந்த நொடி குறுகிப்போய்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை.
"உனக்கென்னப்பா
பொண்டாட்டி தொல்லை இல்ல"
என்று வாழ்த்துவது போல
ஏளனமாய் கிண்டலடிக்கப்பட்ட
முதல் நொடியிலேயே
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை.
இப்போதுதான்
இறந்தார் என்கிறார்கள்
எப்படி நான் நம்புவது...?
நீங்கள் செல்லும் வழி நெடுகிலும்
இப்படி பலர் பாசத்துக்கு ஏங்கி
இறந்து கொண்டிருக்கிறார்கள்...
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்
உங்கள் அருகிலேயேகூட
இறந்து கொண்டிருக்கிறார்கள்
புரிந்து கொள்ளுங்கள்...
பலர் வாழும்போதே
இறந்து விடுகிறார்கள்
புதைக்கவோ எரிக்கவோதான்
சில ஆண்டுகள் ஆகிறது.....
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·