Support Ads
 ·   ·  1378 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பொறுமை (குட்டிக்கதை)

சந்தைக்குப் போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த கோழி, புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக் கொண்டிருந்தது. இதை கவனித்த விவசாயி, கோழியை கையில் பிடித்து பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன. கோழி வளர்ந்து பெரிதானது.

விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது. அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கு வைக்கும் உணவையெல்லாம் திருடித் தின்று வந்தது. ஒருநாள் இதைப் பார்த்து விட்ட விவசாயியின் கோழி, சண்டை போட ஆரம்பித்தது. இரட்ண்டும் கடுமையாக மோதிக் கொண்டன. இதைப் பார்த்த விவசாயி, பக்கத்து வீட்டுக் கோழியை விரட்டியடித்தார். இதன்பிறகு பக்கத்து வீட்டுக் கோழி எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டும், வம்பு பேசிக் கொண்டும் சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தது. இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது விவசாயியின் கோழி.

கொஞ்ச நாட்கள் கழித்து விவசாயியின் கோழி முட்டை வைத்து குஞ்சுப் பொறித்தது. தன்னுடைய கோழிக் குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் கோழி மீண்டும் கிண்டல் செய்து, கோபமூட்டி வம்புக்கு இழுத்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விவசாயி கோழி சண்டை போட ஓடியது. ஓடிய வேகத்தில் கால்களை தூக்கியடித்து, சண்ட போட ஆரம்பித்தது. இந்த நேரம் தனியே நின்ற குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் சென்றது. கோழிக் குஞ்சு கதறும் சத்தம் கேட்ட தாய்க் கோழி, சண்டையை விட்டுவிட்டு ஒடிவந்தது. ஆனால் அதற்குள் கழுகு அந்த கோழிக்குஞ்சை உயரமாக தூக்கிச் சென்றுவிட்டது. ‘’ பொறுமையிழந்து கொஞ்சம் கோபப்பட்டதால என் ஒரு பிள்ளையை இழந்துட்டேனே” என்று வருத்தப்பட்டு அழுதது விவசாயியின் கோழி.

கவலையாக இருந்த விவசாயியின் கோழி முன்பு மீண்டும் ஏளனமாக பேசி கிண்டல் செய்தது பக்கத்து வீட்டுக் கோழி. என்ன செய்வதென்று தெரியாமல் பொறுமையாய் இருந்தது விவசாயியின் கோழி. அடுத்த நாள் பக்கத்து வீட்டுக் கோழி கதறும் சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று விவசாயியின் கோழி பார்த்தது.

அங்கே அடித்து குழம்பு வைப்பதற்காக பக்கத்து வீட்டுக் கோழியை தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

பொறுமை கடலினும் பெரிது..

  • 168
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய