·   ·  186 posts
  • 2 members
  • 2 friends

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்

*கணவன் மனைவிக்குள் பிரிவே வரக்கூடாது என்றால், ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆயுள் முழுவதும் உங்களுக்குள் பிரிவே வராது.*

இன்றைய காலகட்டத்தில் கல்யாண வாழ்க்கையும், கணவரோடு வாழும் வாழ்க்கையும் ஒரு சிலருக்கு நரகமாக இருக்கிறது. வாழ்க்கை என்றாலே சந்தோஷமாக வாழத்தான். இந்த வாழ்வு ஒருமுறைதான். 24 மணி நேரத்தில் பாதி நேரம் தூக்கத்திலேயே கழிகின்றது. மீதி இருக்கும் நேரத்தில் வேலை செய்ய முக்கால்வாசி நேரம் கழிகிறது. மீதி இருக்கும் நேரத்திலாவது நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டாமா.

உங்களுடைய வீட்டில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் முகத்தைக் கூட பார்த்துக் கொள்ள பிடிக்காமல் இருந்தால், இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்காகத்தான். இதோடு சேர்த்து பெண்கள் தங்கள் மாங்கல்ய விஷயத்தில் செய்யக்கூடாத ஆன்மீகம் சார்ந்த சின்ன சின்ன தவறுகளை பற்றியும் பார்த்து விடுவோம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்

கணவன் மனைவி ஒற்றுமை என்றால் முதலில் இருக்கக் கூடிய விஷயம் திருமாங்கல்யம். தாலி கட்டிய பிறகுதான் இந்த உறவு தொடங்குகிறது. இந்த தாலி கயிறு மாற்றும் போது பெண்கள் செய்யக்கூடிய ஒரு முக்கியமான தவறு இருக்கிறது. இந்த தவறை நீங்கள் இதுவரை செய்திருந்தால் இனிமேல் செய்யாதீங்க திருத்திக் கொள்ளுங்கள்.

தாலி கயிறு மாற்றும் போது முதலில், கழுத்தில் மாங்கல்யத்தை போட்டுக்கொண்டே கத்தரிக்கோலை வைத்து அந்த கயிறை வெட்டவே கூடாது. கழுத்தில் இருக்கும் மாங்கல்ய கயிறு கழுத்தில் இருந்தபடியே வெட்டப்பட்டால், உங்களுக்கு மாங்கல்ய தோஷம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

புதுக்கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டு, பழைய கயிறையோ, சரதையோ கழுத்திலிருந்து கழட்டி அதில் இருக்கும் கயிறை வெட்டி புது கயிறு கோர்த்து மீண்டும் உங்களுடைய கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். கூடுமானவரை மாங்கல்ய கயிறு மாற்றும் போது உங்கள் கணவர் உடன் இருக்கும்போது மாற்றிக்கொள்ளுங்கள்.

உங்களது கணவரது கையால் மீண்டும் அந்த தாலி கயிறை உங்கள் கழுத்தில் போட்டுக் கொள்வது சிறந்தது. தாலி கயிறு மாற்றும் போது ராகு காலம் எமகண்டம் நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலை 6:00 மணிக்கு முன்பாகவே சூரிய உதயத்திற்கு முன்பு தாலி கயிறு பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.

சரிங்க கணவன் மனைவிக்குள் பிரிவு வரக்கூடாது என்றால் ஞாயிற்றுக்கிழமை என்ன பொருளை வாங்கணும். மல்லிகை பூ தான். இரவு 8 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஞாயிற்றுக்கிழமை மல்லிகை பூ வாங்கி மனைவிக்கு, கணவன் கொடுக்க வேண்டும். மல்லிகைப்பூ என்பது சுக்கிரன். அங்கு மகாலட்சுமியின் மனம் மகிழ இந்த மல்லிகைப் பூவின் வாசம் நமக்கு உதவி செய்கிறது. நம் வீட்டு மகாலட்சுமி நம்முடைய மனைவிதான்.

அவளுடைய மனதை குளிர வைப்பதற்கு 50 ரூபாய்க்கு வாங்கும் மல்லிகை பூ போதுமானது. இதில் சுக்கிர வசியமும் அடங்கி இருக்கிறது. இதை எந்த தவறான நோக்கத்துடனும் சொல்லவில்லை. கணவன், மனைவிக்கு மல்லிகை பூ வாங்கி கொடுக்க வேண்டும், மனைவி கணவருக்கு எது விருப்பமோ அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கணவருடைய மனம் நோகாமல் மனைவி நடந்து கொள்ள வேண்டும்.

நீ இல்லை என்றால் நானும் இல்லை என்ற முடிவுக்கு இருவரும் வரவேண்டும். அடிமையாக இருக்கச் சொல்லவில்லை எல்லாம் என் கணவர் தான் என்று மனைவி இருந்தால், கணவர் எல்லாம் என் மனைவி தான் என்று இருக்க தொடங்கி விடுவார். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றால் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரம் ஒன்றே போதும். யார் குடும்பத்திலும் விவாகரத்து என்ற வார்த்தை வரவே வராது நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

  • 959
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய