·   ·  1316 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

முடி உதிர்தல் மற்றும் இளநரையை போக்கும் எண்ணெய்

தலைமுடியை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. முதலில் தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்ய வேண்டும் என்றுதான் அனைவருமே ஆசைப்படுவார்கள்.

இளநரை வந்த புதிதில் எதையாவது செய்து இளநரையை தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இவை இரண்டையும் தீர்க்கக்கூடிய மிகவும் எளிமையான ஒரு வழிமுறையை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

முடி நீளமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக இருக்க வேண்டும், கருமையாக இருக்க வேண்டும் என்று தான் பல பெண்களும் ஆசைப்படுவார்கள். அதற்கான முயற்சிகளையும் செய்வார்கள். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் இளநரை பிரச்சினை என்பது ஏற்படும்.

பொதுவாக இளநரை பிரச்சினை ஏற்படுவதற்கு நம் உடலில் உற்பத்தியாக கூடிய மெலனின் சத்தின் குறைபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மெலனின் குறைவான அளவில் உற்பத்தியாகும் பொழுது தலைமுடி விரைவிலேயே நரைத்து விடும். இதே மெலனின் உற்பத்தி அதிகரிக்கும் அதிகமாக இருக்கும் பொழுது வயதானாலும் நரை முடி பிரச்சனை என்பது ஏற்படாது.

இந்த மெலனின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு ஒரு எண்ணையை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த எண்ணையை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் இளநரை பிரச்சனை தீர்வதோடு முடி உறுதியாகும். முடி உறுதி ஆவதால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இதற்கு நமக்கு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும்.

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினாலும் சரி அல்லது தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவி ஊறவைத்து பிறகு குளித்தாலும் சரி. ஆனால் தேங்காய் எண்ணெயை தலைக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடியின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்த முடியும்.

இந்த தேங்காய் எண்ணெயுடன் ஒரு சாறை சேர்க்கப் போகிறோம். அதுதான் நெல்லிக்காய் சாறு. ஒரு நெல்லிக்காயை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு சரிசமமான அளவு தேங்காய் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை உங்களுடைய தலையில் அப்படியே தடவ வேண்டும். பிறகு உங்களுடைய விரல் நுணியால் தலையை நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ அதற்கு முன்பாக இந்த நெல்லிக்காய் சாறு தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து ஊற வைத்து குளிப்பதன் மூலம் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் தலைமுடி வலுவாகி தலை முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும் இந்த நெல்லிக்கனி சாறை தலைக்கு தேய்ப்பது போல் தினமும் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டு வந்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியமும் மேம்படும், தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.   

  • 1684
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய