- · 5 friends
-
I
தளிகை இடக்கூடிய வழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு எளிய வழிபாடு
நாளைய தினம் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. உங்கள் வீட்டில் தளிகை போடக்கூடிய வழக்கமிருந்தால், வீட்டில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் சரியாக இருந்தால் நாளைக்கு தளிகை போட்டு பெருமாளை வழிபாடு செய்து விடுங்கள்.
பெருமாளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து விடும். குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீரும். எங்களுடைய குடும்பத்தில் தளிகை போடும் வழக்கம் இல்லை. ஆனால் எங்களுக்கு பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
தளிகை இட்ட பலன் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது. தளிகை இடக்கூடிய வழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு எளிய வழிபாடு.
உங்களுடைய வீட்டில் பெருமாளின் திருவுருவப்படம் இருக்கிறது அல்லவா. அதை துடைத்து அதற்கு சந்தன குங்குமப்பொட்டு வைத்து ஒரு துளசி இலை மாலை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை எடுத்து பெருமாளுடைய நெற்றி அல்லது தாடை பகுதியில் வைத்து விடுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. இது உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்தை முற்றிலுமாக நீக்கும்.
ஒரு பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தம், தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஏலக்காய், மிகக் குறைந்த அளவு பச்சை கற்பூரம், 2 துளசி இலைகளை போட்டு இந்த தீர்த்தத்தை பெருமாள் முன்பு வைத்து விடுங்கள்.
பெருமாள் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்யுங்கள். பெருமாளுக்கு இரண்டு வாழைப்பழம் நெய்வேதியம் வைத்தாலும் போதும். பெருமாளே எங்களுக்கு உன்னுடைய பரிபூரண ஆசீர்வாதம் தேவை என்று சொல்லி இந்த முறையில் வழிபாட்டை மேற்கொண்டு, தீப தூபங்கள் ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை பெருமாளிடம் வைக்கலாம்.
‘ஓம் நமோ நாராயணா, கோவிந்தா’ என்ற நாமங்களை வீட்டில் எழுப்பி பெருமாளின் பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு, இந்த சனிக்கிழமை வழிபாட்டை நீங்களும் அமர்க்களமாக செய்து விடுங்கள்.
பெருமாளுக்கு மாவிளக்கு போடாமல். சில பேர் வீட்டில் அம்மனுக்கு மட்டும் தான் மாவிளக்கு போடுவார்கள். எங்கள் வீட்டில் பெருமாளுக்கு மாவிளக்கு போட மாட்டார்கள் என்று சொல்லுவார்கள்.
அப்படி வழக்கம் இல்லாதவர்கள் கூட பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்யலாம் தவறு கிடையாது. இருந்தாலும் உங்கள் வீட்டு முன்னோர்கள் மாவிளக்கு போடக்கூடாது என்றால் அரைகுறை மனதோடு எந்த வழிபாட்டையும் செய்யாதீங்க. முழு மன நிறைவு இருந்தால் மட்டும் நாளை மாவிளக்கு போட்டு வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
இதை எதுவுமே எங்களால் செய்ய முடியாது என்றாலும் பரவாயில்லை. பெருமாளை உண்மையான பக்தியோடு நீங்கள் நாளை இரண்டு நிமிடம் மனதார நினைத்து வழிபாடு செய்தாலும் கூட, உங்களுக்கு அவரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·