·   ·  1305 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

குறைந்த செலவில் ஆரோக்கியம் தரும் பன்னீர் திராட்சை ஜூஸ்

ஆரோக்கியத்திற்கு அதிக காசு செலவு செய்ய வேண்டும் என்பது இல்லை. குறைந்த செலவில் கூட ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அது யாருடைய கண்களிலும் எளிதாக புலப்படுவது கிடையாது.

இதெல்லாம் வாங்கி சாப்பிட்டால் தான் திடகாத்திரமாக இருப்போம் என்று ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்து கொண்டிருப்போம், ஆனால் 50 ரூபாயில் கூட ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம்.

சீப் அண்ட் பெஸ்ட் பன்னீர் திராட்சை ஜூஸ் சுவையாக எப்படி போடுவது? என்பதைத் இப்பதிவின் மூலம் நாம் காணலாம். பன்னீர் திராட்சை வாங்கியவுடன் அப்படியே பயன்படுத்தக் கூடாது.

முந்தைய காலங்களில் எல்லாம் ரசாயன சேர்க்கை அவ்வளவாக கிடையாது. ஆனால் இப்பொழுது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று கண்ட கண்ட ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய ரசாயனங்களை சேர்த்து பழங்களில் கூட கலப்படம் செய்யப்படுகிறது.

இந்த ரசாயனங்களால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதால் பழங்களை வாங்கி உண்பதில் கூட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பழக்கடைகளுக்கு சென்றால் ஒரு ஓரத்தில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்த பன்னீர் திராட்சை விலை குறைவாகத்தான் இருக்கும் என்றாலும், அதன் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை. ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் அதை யாரும் வாங்குவது கிடையாது.

நல்ல பன்னீர் திராட்சையாக பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பன்னீர் திராட்சையை வாங்கி வந்த உடன் சிறிதளவு வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து திராட்சைகளை போட்டு வையுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் அதில் நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்தம் செய்த திராட்சைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கைந்து ஐஸ் கட்டிகளையும் போடுங்கள். பன்னீர் திராட்சைகளுடன் சுவைக்காக அரைமுடி எலுமிச்சை பழ சாற்றை சேருங்கள். சர்க்கரை எதுவும் போடக்கூடாது ஏற்கனவே இனிப்பு தன்மை கொண்டிருப்பதால் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாதீர்கள்.

பன்னீர் திராட்சையில் இருக்கும் விதைகளுக்கு தான் சத்துக்கள் அதிகம் எனவே விதைகள் உடைபட அரைப்பது நல்லது. அரைத்து எடுத்த பின்பு ஒரு வடிகட்டியில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஜூஸுடன் தேவையான அளவிற்கு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேன் சேர்த்து குடிப்பதால் சருமம் ஆரோக்கியம் பெறும், பளபளப்பாக மின்னவும் செய்யும்.

பொதுவாக பன்னீர் திராட்சையை அரைத்து ஜூஸ் போடுவதை விட அப்படியே விதைகளுடன் மென்று சாப்பிடுவது தான் நல்லது. ஆனால் அப்படி யாரும் சாப்பிடுவது கிடையாது. ஜூஸ் போட்டு கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு ரசித்து ருசித்து குடித்து விடுவார்கள். உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு அடிக்கடி இது போல பன்னீர் திராட்சை ஜூஸ் பருகி வருவது நல்லது.  

  • 355
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய