·   ·  1303 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மைசூர் பாக்கை கண்டுபிடித்தது யார் தெரியுமா?

'காக்கசூரா மட்டப்பா' இவர் யாருனு தெரியுமா?

என்னப்பா இது பெயர்... காக்கா, குருவின்னு சொல்றியேன்னு கேட்காதீங்க... இவர்தான் நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடறோமே மைசூர் பாக்கு அதை கண்டுபிடிச்சவர்.

இவர் மைசூர் அரண்மனையில சமையல்காரரா இருந்திருக்கார். சாப்பிட்டு முடிச்சதுமே, இனிப்பு சாப்பிடுறத மன்னர் வழக்கமா வச்சிருந்திருக்கார். அன்னைக்குன்னு பார்த்து இனிப்பு தீர்ந்து போகவே, நம்ம காக்கசூரா கடலைமாவு, சக்கரை, நெய் எல்லாத்தையும் சேர்த்து அவசரம் அவசரமா கிண்டி பாகு காய்ச்சி ஒரு இனிப்பு மாதிரி செஞ்சி மன்னர் கிட்ட கொண்டு போய் கொடுத்திருக்கார். அதுக்குள்ள அது கெட்டியா போய்டுச்சு.

மன்னர் என்ன சொல்ல போறாரோன்னு பயந்துகிட்டே இருந்த காக்கசூராவுக்கு ஒரே ஆச்சர்யம். மன்னர் அந்த இனிப்பு சாப்பிட்டதும் அவருக்கு ரொம்ப பிடிச்சி போய், இது பேரு என்னன்னு, காக்கசூராகிட்ட கேட்க, அவரும் அவசரத்துக்கு 'நளபாக்' னு சொல்லி வச்சிட்டார். அரண்மனை ஆஸ்தானா இனிப்பாவே மாறிப்போன அந்த 'நளபாக்', மைசூர் அரண்மனையில கண்டுபிடிக்கப்பட்டதால பின் நாட்கள்ல 'மைசூர்பாக்' னு பெயர் மாறிடுச்சு.

அவ்வளவுதான் இந்த மைசூர் பாக்கோட வரலாறு.

ஆனா பிற்காலத்தில நம்ம ஆளுங்க இது என்னடா இவ்வளவு சுவையான இனிப்பா இருந்தாலும் கடிக்க இவ்வளவு அழுத்தமா இருக்குன்னு சொல்லிட்டு, அதுல நெய் கொஞ்சம் அதிகமா சேர்த்து 'நெய் மைசூர் பா' செஞ்சாங்க.

இந்த மைசூர் பாக்குக்கும், நெய் மைசூர் பாவுக்கும் என்ன வித்தியாசம்னா மைசூர் பாக்கு கடிக்க கொஞ்சம் அழுத்தமா சின்ன சின்ன துவாரங்களோட இருக்கும். நெய் அதிகமா சேர்க்க மாட்டாங்க.

ஆனா இந்த 'மைசூர் பா' நெய் அதிகமா சேர்க்கிறதால ரொம்ப மென்மையா, சாப்பிட ரொம்ப ஈஸியா இருக்கும். பெரும்பாலும் குழந்தைங்க இந்த 'நெய் மைசூர் பா' வைத்தான் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா இந்த பாரம்பரிய மைசூர் பாக்கோட சுவை ரொம்ப அலாதியா இருக்கும்.

இந்த பாரம்பரிய 'மைசூர் பாக்கு' வீட்லயே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு : 1 கப்

ரிபைண்ட் ஆயில் : 1 கப்

சர்க்கரை : 1 1/2 கப்

தண்ணீர் : 3/4 கப்

நெய் : 1 டே. ஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில எண்ணெய் மற்றும் கடலை மாவு இரண்டையும் சேர்த்து, நல்லா கட்டியில்லாம கலந்துக்கோங்க.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில வச்சு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நல்லா கிளறிகிட்டே இருங்க. ஒரு கம்பி பதம் வந்ததும் கரைச்சு வச்சிருக்க கடலைமாவு கரைசலை சேர்த்து கைவிடாம கிளறிக்கிட்டே இருங்க.

மாவு கரைசல் வெந்து சுருண்டு வரும் போது நெய் சேர்த்து கீழே இறக்கி எண்ணெய் தடவிய தட்டில ஊத்திடுங்க.

சூடு ஆறினதும் துண்டு போட முடியாது. அதனால மிதமான சூடு இருக்கும் போதே கட் பண்ணி துண்டுகளா போட்டுடுங்க.

சரியான முறையில செஞ்ச மைசூர் பாக்கு மேல மஞ்சள், ப்ரவுன், டார்க் ப்ரவுன் கலர்னு பார்க்கவே அழகா இருக்கும். சுவைக்கும் குறைவிருக்காது.

மஞ்சள் நிற பகுதி மிருதுவாகவும் , ப்ரவுன் கொஞ்சம் கெட்டியாகவும் டார்க் ப்ரவுன் இன்னும் கொஞ்சம் அழுத்தமாவும் இருக்கும்.

வெட்டியெடுக்கப்பட்ட மைசூர் பாக்கு தேன் கூடு போல சின்ன சின்ன துவாரங்களை கொண்டிருக்கும். இப்படி சரியான முறையில் செய்த மைசூர் பாக்கு சாப்பிட கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். திகட்டாது.

மைசூர்பாக் செய்ய தரமான மற்றும் புதுசா அரைச்ச கடலைமாவு பயன்படுத்துங்க.

மைசூர்பாக் கிளறும் போது குறைவான தீயில் வச்சு கிளறணும். தீ அதிகமா வச்சா, அடி பிடிச்சுடும் இல்லாட்டி மைசூர்பாக் ரொம்ப கெட்டியாகிடும்.

அவ்வளவுதான் ப்ரண்ட்ஸ்... சுவையான பாரம்பரிய மைசூர் பாக் தயார்..

  • 246
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய