·   ·  1274 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

குழந்தைகள் கற்றுக் கொடுத்த பாடம்

கணவன் ,மனைவி ஒரே ஒரு குழந்தை என்றிருக்கும் அழகான வீட்டிற்கு தந்தை வழி தாத்தா வருகிறார். பேரனுடன் தங்கி இருந்து தன் நாட்களை கழிக்க ஆசைக் கொண்ட அவருக்கு கண்கள் சரியாக தெரியவில்லை. கைகளும் பொருட்களை எடுக்கையில் நடுக்கம் கொள்கிறது. அந்த அளவுக்கு முதுமையின் தாக்கத்துடன் இருக்கிறார்.

வீட்டில் எல்லாரும் ஒன்றாக மேசையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். தாத்தா கரண்டியை எடுக்கையில் கீழே தவறி விழுகிறது. பால் குடிக்க கோப்பையை பிடிக்கையில் கை நடுக்கத்தில் பால் மேசை விரிப்பில் சிந்தி விடுகிறது. அவர் உணவு உண்ணும் போதும் உணவும் கீழே சிந்துகிறது.

அவரின் இந்த செயல்களைக் கண்டு கணவனும் மனைவியும் எரிச்சல் அடைகின்றனர். தொடர்ந்து தாத்தாவை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்கள் மேசையில் அமர வைக்காமல் ஓரமாய் அவருக்கென்று ஒரு தனி மேசையில் சாப்பிட வைத்தனர். அவர் சாப்பிடும் பாத்திரம் கீழே விழுந்து உடையாமல் இருக்க மரத்தால் ஆன பாத்திரங்களில் உணவு கொடுக்கப்பட்டது.

நடக்கும் அத்தனை விடயங்களையும் பேரன் அமைதியாய் பார்த்துக் கொண்டே இருக்கிறான். எல்லாரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிட தாத்தா மட்டும் தனி மேசையில் சாப்பிடுகிறார். ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிகிறது. மகன் மற்றும் பேரனை அடிக்கடி திரும்பி பார்த்த படியே சாப்பிடுகிறார்.

ஒரு நாள் அந்த வீட்டு குழந்தை( தாத்தாவின் பேரன்)

மரத் துண்டுகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை பார்த்த தந்தை மகனிடம் அன்பாய் கேட்கிறார், " குட்டி என்ன விளையாடுறிங்க?" என்று.

குழந்தை சொல்கிறது " நான் இந்த மரத்துண்டுகளை வைத்து 2 பாத்திரங்கள் செய்கிறேன் பா .நான் பெரியவன் ஆனதும் உங்களுக்கும் அம்மாவுக்கும் சாப்பிட கொடுக்க வேண்டுமல்ல அதற்குத் தான்" என்று.

தந்தையால் பேச முடியவில்லை. கண்கள் கண்ணீரில் ததும்பியது. தான் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.குற்ற உணர்ச்சி அவரை கொன்றது.

மறுநாளிலிருந்து , தாத்தாவுக்கும் அவர்கள் அமரும் மேசையிலே உணவு பரிமாறப் பட்டது .பக்கத்திலேயே நின்று தாத்தா சாப்பிடும் வரை அவரை கவனித்துக் கொண்டார்கள்.கரண்டிகள் கீழே விழுந்ததும் எடுத்து வைத்துவிட்டு புன்னைகைத்தார்கள்.பால் சிந்தியதும் மேசை விரிப்பை மாற்றிவிட்டார்கள்.

நீதி: குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பது தவறு.நம்மை விட அவர்கள் பார்வை கூர்மையானது.அவர்கள் கண்கள் பார்க்கும் ஒவ்வொரு செயலுக்கும் மனதில் ஒரு தகவல் பதிவிக்கப்படுகிறது. இதை நினைவில் கொண்டு உங்கள் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.

  • 424
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய