·   ·  103 posts
  • 2 members
  • 2 friends

பங்குனி உத்திரத்தில் வழிபாடு செய்யும் முறை

பங்குனி உத்திரமானது தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில், கடைசி நட்சத்திரமான உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் - 25 .3. 2024. அன்றைய நாளில் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளை பங்குனி உத்திரமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

பங்குனி உத்தரத்தில் பக்தர்கள் முருகப் பெருமானையும் சிவபெருமானையும் வழிபட்டு மகிழ்கின்றனர். அது மட்டும் இன்றி இந்த பங்குனி உத்திர திருநாளை கல்யாண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனால் பல ஆலயங்களில் அன்று இறை திருமணங்கள் விமர்சையாக நடக்கும்.

உத்திர நாளில் சிவபெருமான் பார்வதிக்கு திருமணம் நடந்தேறியதாகவும், முருகப்பெருமான் தெய்வானையை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பங்குனி உத்திர நாள் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் மிகவும் உகந்ததாகவும் திருமண வைபோக நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க நாளில் நம்முடைய பண பிரச்சனை தீர எப்படி வழிபாடு செய்வது என அறியலாம். இந்த வருடம் பங்குனி உத்திரம் 25 .3. 2024 திங்கட்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் முருகப்பெருமானையும் சிவபெருமானையும் நினைத்த தீபம் ஏற்றி விடுங்கள்.

முருகப்பெருமான் படம் இருப்பின் நன்றாக துடைத்து மலர்களால் அலங்காரம் செய்து அவருக்கு உகந்த செவ்வரளி பூக்களால் மாலை அணிவித்து விடுங்கள். அவருக்கு அன்றைய தினத்தில் செய்யக் கூடிய நெய்வேத்தியம் தான் மிகவும் விசேஷமானது. முருகக்கடவுளுக்கு தினை மாவு மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முருகப்பெருமானை காண குறத்தி மகள் வள்ளி இந்த தினை மாவை தான் கொடுத்தாக சொல்லப்படுகிறது .ஆகையால் அன்றைய தினத்தில் இந்த தினை மாவை அவருக்கு வைத்து படைப்பது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. திணை மாவை அப்படியே வைக்காமல் சுத்தமான தேன் கொண்டு அதை பிசைந்து மாவாகவோ அல்லது அதை உருண்டைகளாகவும் செய்து வைக்கலாம்

அன்றைய தினத்தில் நீங்கள் முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் இந்த ஒரு தினை மாவு பிரசாதத்தை வைத்தால் போதும் அவர் மனம் மகிழ்ந்து பண பிரச்சனை முழுவதுமாக தீர்த்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு கட்டாயமாக செல்லுங்கள். அவருக்கு அபிஷேகப் பொருள்களான சந்தனம் பன்னீர் தேன் போன்றவற்றை அன்றைய தினத்தில் வாங்கித் தருவதும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர கூடிய கந்தக்கடவுளை அன்றைய தினத்தில் இது போல வழிபட்டால் பரம ஏழையும் பணக்காரனாக கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கையுடன் செய்து கந்தன் அருளைப் பெறலாம்.

  • 561
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்