·   ·  2152 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை

ஒருவர் வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த வசதி வாய்ப்பை அவரால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டும். இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. 

இயற்கை அன்னை நமக்கு பல அறிய மூலிகைகளை வழங்கி இருக்கிறது. அதிலும் பல மூலிகைகள் நம் அருகிலேயே நமக்கு தினமும் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அதை உணராமல் வீணாக்குவது தான் மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அப்படி நாம் வீணாக்கும் ஒரு அறிய அற்புதமான மூலிகைதான் கருவேப்பிலை.    

கருவேப்பிலையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. இந்த சத்துக்களால் நம் தலை முதல் பாதம் வரை இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது கருவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். தினமும் காலையில் 15 கருவேப்பிலையை நன்றாக கழுவி வாயில் போட்டு மென்று முழுங்க வேண்டும். 

அவ்வாறு மென்று முழுங்க விருப்பமில்லாதவர்கள் கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து சாறு எடுத்து அதில் சுவைக்காக எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதுவும் பிடிக்காதவர்கள் மோரில் கருவேப்பிலையை போட்டு நன்றாக அரைத்து குடிக்கலாம். இப்பொழுது கருவேப்பிலையை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். 

முதலில் தலையிலிருந்து ஆரம்பிப்போம். தலை முடி மிகவும் கருமையாக வளரும். இளம் வயதில் ஏற்படக்கூடிய இளநரைகள் அனைத்தும் மாறுவதற்கு கருவேப்பிலை மிகவும் உதவி செய்கிறது. பள்ளி பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளநரையை முற்றிலும் நீக்கி மறுபடியும் முடியை கருமையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளர வைப்பதற்கு கருவேப்பிலை உதவி செய்கிறது.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்களால் உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் உறுதி பெற உதவுகிறது. மேலும் குழந்தைகள் கருவேப்பிலையை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்களுடைய உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது. 

சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. காய்கறி வாங்கும் பொழுது ஓசியாக கிடைக்கும் இந்த கருவேப்பிலையை தினமும் நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான சத்துக்கள் கிடைத்து நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  

  • 111
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங