·   ·  999 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தலைமுடி நன்கு வளர இயற்கை வரமான ஆளி விதை

தலைமுடி வளர்ச்சியை தூண்ட இயற்கை நமக்கு பல அற்புதமான வரங்களை தந்திருக்கிறது. இதையெல்லாம் நாம் சரியாக பயன்படுத்தினாலே தலை முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம். 

போன தலைமுறையில் எல்லாம் முடி வளர வேண்டி தனியாக எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருட்களையும் பயன்படுத்தி இருக்கவில்லை. இயற்கையான முறையில் கிடைப்பவற்றை பயன்படுத்தி தான் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி கொண்டார்கள். 

இன்றைய கால சூழ்நிலை வேண்டுமானால் அதற்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நாம் தான் சிறிது மெனக்கிட வேண்டும். இதற்கென நீங்கள் செலவு எதுவும் செய்யத் தேவையில்லை. உங்களுடைய நேரத்தில் உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி நல்ல உணவு தூக்கம் ஆரோக்கியமான சூழ்நிலை இவற்றை உருவாக்கிக் கொண்டாலே போதும். 

ஆளி விதையில் முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக முடியின் வேர்க்கால்களில் இருந்து முடி வலுவாக வெளிவர தேவையான விட்டமின் ஈ, ஒமேகா 3 போன்ற சத்துக்கள் இந்த ஆளி விதையில் அதிகமாக உள்ளது. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதுடன் முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலும் இதற்கு அதிகம் உண்டு. 

தலைமுடி வளர்ச்சியை முதலில் தடுப்பது முடி வெடிப்பு தான். இது வந்து விட்டால் தொடர்ந்து முடி வளராது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆளி விதியில் உள்ள புரதச்சத்துக்கள் இந்த முடி வெடிப்பினை அறவே தடுத்து நிறுத்துவதோடு முடி நல்ல பளபளப்பாக சைனிங் ஆகவும் இருக்கும். இது முடி வறண்டு போகாமலும் காக்கும். 

ஆளி விதையில் முடி வளர்ச்சிக்கு தேவையான இத்தனை சத்துக்கள் அடங்கி இருக்கிறது என்பது எத்தனை பெரிய ஆச்சரியம். இது உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய உணவாகவும் இதை சில வழிமுறைகளின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். - ஆளி விதையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.

மூன்று டம்ளர் தண்ணீர் எடுத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் மூன்று ஸ்பூன் ஆளி விதையை இதில் சேர்த்து நீங்கள் ஊற்றிய தண்ணீர் ஒரு டம்ளர் ஆக குறையும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். 

இந்த ஆளி விதை சேர்த்த தண்ணீர் ஜெல்லி பதத்திற்கு இருக்கும். இது ஓரளவிற்கு சூடாக இருக்கும் போதே நீங்கள் வடிகட்டியில் இதை தனியாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆளி விதை கொதித்த தண்ணீர் நன்றாக ஆறும் வரை விட்டு விட்டால் அதன் பிறகு வடிகட்ட சிரமமாக இருக்கும். ஆகையால் கொஞ்சம் இளம் சூட்டாக இருக்கும் பொழுது வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த ஜெல்லை உங்கள் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்றாக பத்து நிமிடம் வரை மசாஜ் செய்த பின்பு ஒரு மணி நேரம் உங்கள் தலையில் அப்படியே ஊற விடுங்கள். இது இவ்வளவு நேரம் உங்கள் தலையில் ஊறுவதும் மிகவும் முக்கியம். அதன் பிறகு கெமிக்கல் கலந்த ஷாம்புகள் எதையும் பயன்படுத்தாமல் சீயக்காய் சேர்த்து தலைமுடியை நன்றாக அலசி விடுங்கள். ஆளி விதை ஜெல் பதத்திற்கு இருப்பதால் தலைமுடியை சீயக்காய் கொண்டு அலசுவதும் சுலபமாகவே இருக்கும். இந்த ஆளி விதை பேக்கை வாரம் இரு முறை அல்லது ஒரு முறை யாவது பயன்படுத்தி வாருங்கள் உங்கள் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.

  • 96
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்