·   ·  1000 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அழியாத அழகு ஆய்சுக்கும் இருக்க இயற்கையான குளியல் பொடி

இன்று பெண்களுக்கு அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. காரணம் நாம் பயன்படுத்தும் சோப்புகள், கிரீம்கள், பவுடர்களில் கெமிக்கல். நம்முடைய தோல் சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை அடைவதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் அழகு சாதனங்களும் கூட. 

ஆகவே, கொஞ்சம் செயற்கையான விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி இயற்கையான முறையில் சொல்லப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் வாங்கி அரைத்து உடம்பில் பூசி குளிக்க பழகி வாருங்கள். சிரமம் பாக்காதீர்கள். அழியாத அழகு உங்களுக்கு ஆய்சுக்கும் இருக்கும். 

கஸ்தூரி மஞ்சள் 1/2 கிலோ, ஆவாரம்பூ 1/4 கிலோ, ரோஜா இதழ் 1/4கிலோ பூலாங்கிழங்கு 100 கிராம், வசம்பு 100 கிராம், இந்த ஐந்து பொருட்கள் தான். இது எல்லாமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. காய்ந்த ஆவாரம் பூ, காய்ந்த ரோஜா இதழ்கள் எல்லாமே ரெடிமேட் ஆக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 

இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி ஒரு முறை நன்றாக காயும் வெயிலில் ஒருநாள் முழுவதும் காய வைத்து விடுங்கள். ரைஸ்மிலில் அரைத்து தரும்படி சொல்லுங்கள். இது உடம்பில் பூசி குளிப்பதற்காக அரைக்கும் பொடி என்று சொல்லி அரைக்க வேண்டும். நைசாக இந்த பொடி அரைக்க வேண்டும். கொரகொரப்பாக அரைக்க கூடாது. 

மஞ்சள் அரைக்கக்கூடிய மிஷினில் கொடுத்து இதை அரைத்து வீட்டுக்கு எடுத்து வந்து நன்றாக ஆறவைத்து காத்து போகாத பாட்டிலில் கொட்டி மூடி வைக்கவும். தேவைக்கு ஏற்ப கொஞ்சமாக ஒரு சின்ன டப்பாவில் போட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் படாமல் இருந்தால் ஒரு வருடத்திற்கு கெட்டுப்போகாது. 

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்கள் கூட இந்த குளியல் பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். சோப்பு போட்டு குளித்த பிறகு இந்த குளியல் பொடியை உடல் முழுவதும் பூசி நன்றாக மசாஜ் செய்து பிறகு வெறும் தண்ணீரை ஊற்றி குளித்து விடுங்கள். இந்த பொடியை போட்டு குளித்து வந்தால் பெண்கள் சருமம் பளபளப்பாக மாறும். உடல் துர்நாற்றம் நீங்கும்.

பெண்களின் அழகை குறைக்கும் தேவையற்ற முடி வளர்ச்சியானது குறையும். சரும தொற்று வராமல் பாதுகாப்பாக இருக்கும். ஒரு வயது பெண் குழந்தை முதல், இந்த குளியல் பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

  • 191
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்