Support Ads
 ·   ·  995 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

இப்படியும் ஒருவர்....

ரிடையர் ஆகும் நிலையில் இருப்பவர்களிடம், இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு கேள்வி கேட்கும்.
"இந்தியாவில் உங்கள் விருப்பப்படி எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் மாறுதல் தருவோம், சொல்லுங்கள் உங்கள் விருப்பம் என்ன?"
வாழ்நாள் முழுக்க இட மாறுதலில் சிக்கும் பணியாளர்கள், கடைசியில் ஒரு ஊரை தேர்வு செய்து, அந்த ஊரில் ஒரு சொந்த வீடு வாசல் வாங்கி செட்டிலாகட்டுமே! என்ற நல்லெண்ணம் தான்.
வெறும் இரண்டு வருடங்களே இருக்கும் நிலையில், சுதான்ஷு மணியிடம் இதே கேள்வி வந்தபோது அவர் தேர்வு செய்தது சென்னை ICF (Integral Coach Factory).
எதுக்குய்யா சென்னைக்கு போகணும்னு அடம் பிடிக்கற?
பாரதத்துக்காக ஒரு அதிவிரைவு ரயில் உருவாக்கணும். அதுக்கு எனக்கு ஒரு நல்ல டீம் வேணும்.
அதேநேரத்தில் தான் ஸ்பெயின் நிறுவனமான Talgo மணிக்கு 180 கிமீ வேகத்தில், பத்து பெட்டிகள்(coaches) மட்டுமே கொண்ட ஒரு ரயிலை 250 கோடிக்கு இந்திய ரயில்வேக்கு விற்க ஒப்பந்த புள்ளி கோரியது.
தொழிற்நுட்பம் சார்ந்த எந்த தகவல் பரிமாற்றமும்(Knowledge Transfer) தர மாட்டோம்! என்ற நிபந்தனை வேறு.
அய்யா, ஸ்பெயின் ரயிலை விட உன்னதமான ரயிலை நம்மால் டிசைன் செய்ய முடியும், அதுவும் பாதி விலையில்.
மணியின் ஆர்வத்தை பார்த்து, ரயில்வே சேர்மன் வாயை பிளந்து விட்டார்.
நிஜமா? மணி, நீ ரிடையர் ஆகற நேரத்துல என்னை வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?
சரிப்பா, உன் அணியை நீயே தேர்ந்தெடுத்துக் கொள், ஆராய்ச்சி பணிக்கு 100 கோடி (ஆயிரம் பார்மாலிட்டீஸ் முடிஞ்ச பிறகு) ஒதுக்கீடு செய்கிறோம்.
மணி பெட்டி படுக்கையோடு ICF வந்து விட்டார். இரண்டு வருஷம், அசுர உழைப்பு. கர்ம யோகத்தின் உச்சம்.
அந்த டிரெயின் தான் வந்தே பாரத் (இதற்கு முன் Train 18 என அழைக்கப்பட்டது).
16 கோச்சுகள் கொண்ட ரயில் - அதே 180 கிமீ வேகம்.
100 கிமீ வேகம் எடுக்கும் வெறும் 54.6 செகண்டில். 180 கிமீ வேகம் 145 செகண்டுகளில்.
ஆனால் 97 கோடி ரூபாயில் சாத்தியமானது.
ஸ்பெயின் நிறுவனம் Talgo கேட்டது 250 கோடி ரூபாய் வெறும் 10 கோச்சுகளுக்கு.
அப்படி என்ன பெரிய டிசைன் இந்த வந்தே பாரத் ரயிலில்?
இந்த ரயிலுக்கு என்று தனியே ஒரு இன்ஜின் தேவையில்லை. ஒவ்வொரு கோச்சும் சுய உந்துதலில்(Self Propellant) முன்னேறும். சுருக்கமா சொன்னால், ஒவ்வொரு கோச்சிலும் ஒரு மோட்டார்.
டில்லியிலிருந்து வாரணாசி வரை முதல் ஓட்டம் வெற்றி.
கிழக்கே போன இந்த ரயில், வெற்றிகரமா ஓடிய போதெல்லாம் நம்ம மணியை ஒருவரும் பாராட்டவில்லை. மணி யாருன்னு கூட உலகுக்கு தெரியவில்லை.
ஒரு எருமை கூட்டம், தண்டவாள பாதையில் வந்து இந்த ரயில் மோதியவுடன்,
"என்னத்த ரயில் செஞ்சு விட்டிருக்காங்க? தகர டப்பா மாதிரியில்ல இருக்கு?"
"இதுல எந்த இஞ்சீனியருக்கு எவ்ளோ கமிஷனோ?"
"அந்த காலத்துல, பிரிடிஷ் செஞ்ச இன்ஜின் இருக்கே! அதுல காண்டாமிருகமே குறுக்கே வந்தாலும், சும்மா தூக்கி வீசிட்டு ரயில் போயிட்டே இருக்கும் தெரியுமா?"
என்று தகவல்களை சும்மா அள்ளி விட, இணைய ஊடகங்களில், ஏகப்பட்ட Mechanical இன்ஜினியர்கள். என்னே நாம் செய்த பாக்கியம்!
இவ்வளவு சர்ச்சை வெடித்ததும், மனம் பொறுக்க முடியாமல் தனது டிசைன் எப்படி வேலை செய்யும்? எவ்வளவு மேம்பட்டது? என மணி ஒரு கட்டுரை எழுதினார்.
நம்பி நாராயண் வடிவமைத்த விகாஸ் இன்ஜின் தான் செவ்வாய் கிரகம் வரை நமது செயற்கை கோள்களை நிலை நிறுத்துகின்றது. அவரையும் நாம் 15 வருடம் அல்லாட விட்டோம் என்ற கதையைதெரிந்து கொள்ளவே ஒரு திரைப்படம் வர வேண்டியிருந்தது.
நம் நாட்டில் இது போல சில நம்பிகள், சிவன்கள், மணிகள் தன்னலம் பாராமல், கர்ம யோகம் பயில்வதாலேயே, பாரதம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
2018ல் மணி தன் பணியிலிருந்து மன நிறைவோடு ஒய்வு பெற்று லக்னோவில் வசித்து வருகிறார்.
பி.கு: இந்த ரயிலை டிசைன் செய்ய ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிய 100 கோடியில், 97 கோடி போக, மிச்ச 3 கோடியை மணி பத்ரமாக திருப்பி தந்து விட்டாராம். தேன்குடத்தில் கைவிட்டும் புறங்கையை நக்க வில்லை.
  • 159
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்