பன்முவித்தகர் திரு சோ

பன்முவித்தகர் திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!

இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.

பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார். பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.

அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.

சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதை கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.

சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ.

சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.

’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’

இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்

தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்‌ஷனைக் கவனிப்பார் சோ.

நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி.

“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.

‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க,

‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையாக் கேட்டா என்ன அர்த்தம்?

அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

  • 1982
  • More
Comments (0)
Login or Join to comment.
சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு