பன்முவித்தகர் திரு சோ

பன்முவித்தகர் திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!

இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.

பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார். பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.

அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.

சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதை கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.

சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ.

சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.

’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’

இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்

தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்‌ஷனைக் கவனிப்பார் சோ.

நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி.

“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.

‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க,

‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையாக் கேட்டா என்ன அர்த்தம்?

அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

  • 2065
  • More
Comments (0)
Login or Join to comment.
சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு