Ads

சனிப் பெயர்ச்சி 2020

சனிப் பெயர்ச்சி 2020: உங்கள் ராசிக்கு நடக்கப்போகும் மாற்றங்கள் 

  • 1771
  • More
  • 900
  • More
  • 989
  • More
  • 913
  • More
  • 976
  • More
  • 950
  • More
  • 938
  • More
  • 1035
  • More
  • 968
  • More
  • 965
  • More
  • 976
  • More
  • 916
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 3 ஆம் தேதி மேஷம் -ராசி: நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பங்குதாரர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்பு விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம் ராசி: மனதளவில் தைரியம் பிறக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் தேடல்கள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மைமிதுனம் -ராசி: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம் -ராசி: சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்சிம்மம் -ராசி:எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னி -ராசி: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புதுலாம் -ராசி: அனுபவப் பூர்வமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு விருச்சிகம்- ராசி: கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். செலவு விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசு -ராசி: பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வேலையாட்களால் சிறு அலைச்சல் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாளுவது நல்லது. அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்மகரம் -ராசி:கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மனதளவில் திருப்தி ஏற்படும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதாகும்பம் –ராசி:எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உழைப்புக்குண்டான மதிப்பு கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 62
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.4.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று காலை 07.13 வரை புனர்பூசம். பின்னர் பூசம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகைசெவ்வாய் மதியம் 3 to 4:30 PM காலை 9 to 10:30 AM மதியம் 12:00 to 1:30 PM
  • 83
  • 82
எல்லா கணவன்மார்களின் நிலை இதுதானே?சொல்லுங்க...
  • 81
Good Morning...
  • 83
  • 81
  • 92
  • 93
விபத்தில் சிக்கிய வடக்கின ஆளுநர் !
  • 168
Added a photo 
  • 154
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 2 ஆம் தேதி மேஷம் -ராசி: வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புரிஷபம் ராசி: தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மிதுனம் -ராசி: மனதில் இனம்புரியாத ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களால் திருப்தியான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பப் பெரியவர்களிடம் பொறுமையை கையாளவும். வியாபாரம் மத்தியமாக நடைபெறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கடகம் -ராசி: உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முதலீடு மேம்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்புசிம்மம் -ராசி:குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைப்பொருட்களால் லாபம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதுநிலை கல்வியில் இருந்துவந்த தாமதம் விலகும். நாவல் மற்றும் இலக்கியங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். நறுமண பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். தொழில் நிமிர்த்தமான நட்பு வட்டம் விரிவடையும். அரசு சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்துலாம் -ராசி: புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழியில் ஆதாயம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்விருச்சிகம்- ராசி: பிள்ளைகளின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவரின் வழியில் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசு -ராசி: சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமகரம் -ராசி:நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு ஏற்படும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம் –ராசி:கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு ஏற்படும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: தொழில் சார்ந்த அலைச்சல் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். மனை விற்பனையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தாமதம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 284
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 15.04.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 05.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 05.55 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை திங்கள் காலை 7:30 to 9 AM காலை 10:30 AM to 12 மதியம் 1:30 to 3 PM
  • 292
Added a post 
இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது..அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர்.இருவரில் ஒருவருக்குத்தான்நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்..சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான்.அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்..திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். .மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,''உனக்கு நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?''.இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத் தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது..நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில் அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.'' என்றான்.
  • 301
Good Morning...
  • 280
Added a news 
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும், புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும், புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும்.தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமானது என நம்புகிறேன். புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
  • 375
Added article 
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் படம் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று தமிழ் புத்தாண்டில் ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார். விசில் போடு என்ற இந்த பாடலின் தொடக்கத்தில் ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா.. Campaign தான் தொறக்கட்டுமா.. மைக்கை பிடிக்கட்டுமா?” என தனது அரசியல் வருகையை உணர்த்தும் விதமான வரிகளை பாடியுள்ளார் நடிகர் விஜய்.இந்த பாட்டு தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே வைரலாகி வருகிறது. பாட்டை போலவே படத்திலும் அரசியல் காட்சிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த பாடலில் விஜய் – பிரபுதேவா காம்போ டான்ஸ் சிறப்பாக அமைந்துள்ளதால் முழு பாடலையும் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
  • 393
Added article 
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார் சூர்யா.சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் உறுதி செய்துள்ளது.
  • 375
Added article 
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும் அவர் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது திடீரென நடிகர் விஷாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழக முழுவதும் போட்டியிடப் போகிறாரா? அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைய போகிறாரா? அல்லது அவர் மட்டும் தனியாக போட்டியிடப் போகிறாரா என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் 2026 ஆம் ஆண்டு விஷால் அரசியலில் குதிப்பது மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகள் 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் புதிதாக விஜய்யும் களத்தில் இறங்கி உள்ளார். தற்போது விஷாலும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 377
Added a news 
இஸ்ரேல் மாற்றம் ஈரான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் கப்பலை ஈரான் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் அதில் சிக்கியுள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு திடீரென இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமன் அருகே சந்தேகத்துக்குரிய ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்த போது அந்த கப்பலை ஈரான் கப்பல் படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஈரான் கப்பல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது.அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்ததாக அந்த கப்பல் நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியர்களை பத்திரமாக மீட்க ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது,
  • 382
Added a news 
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார்.இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
  • 385
Added a news 
இஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது. பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானிய அரசாங்கம் பிராந்திய வலயத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உதாசீனம் செய்வது புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தும் உரிமையை கனடா ஆதரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலி, எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் போன்றவர்களும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.கனடிய அரசாங்கத்தின் இந்த கண்டனங்களுக்கு நன்றி பாராட்டுவதாக கனடாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் இடோ மொஹட் தெரிவித்துள்ளார். 
  • 388
Added a news 
கனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வி பயின்று வரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான சிரங் அன்டில் என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வரும் சிரங் அன்டில் நேற்று முன் தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில் தனது சொகுசு காரில் பயணித்துள்ளார். அப்பகுதியில் முக்கிய தெருவில் இரவு 11 மணியளவில் சிரங் அன்டில் காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த சொகுசு காரை பரிசோதித்தனர். அப்போது அந்த காரில் சிரங் அன்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிரங் அன்டில் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிரங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது யார்? அல்லது சிரங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 385
Added a news 
இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது. எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமான சேவையை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.பிராந்திய வலயத்தின் நிலைமைகளை கருத்திற் கொண்டு விமானப் பயணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் மீது, ஈரானிய படையினர் கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் எயார் கனடா நிறுவனம் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. 
  • 392
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 1 ஆம் தேதிமேஷம் -ராசி: தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். நவீன பொருட்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம் ராசி: உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் ஆதரவான சூழல் அமையும். உணவு சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பரிசு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மிதுனம் -ராசி: பிள்ளைகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் செல்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புகடகம் -ராசி: சுபச்செலவுகளால் கையிருப்பு குறையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் சாதகமாகும். தொழிலில் சிறு சிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விரயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம் -ராசி:உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைபட்ட பணிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். மனதில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் விலகும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கன்னி -ராசி: சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டுமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கவலை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்துலாம் -ராசி: சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைவிருச்சிகம்- ராசி: மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நினைத்த சில செயல்களில் தாமதம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். கல்வி தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் தனுசு -ராசி: உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்மகரம் -ராசி:எதையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் சிறு தூரப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு குறையும். துன்பம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புகும்பம் –ராசி:உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். அலைபாயும் சிந்தனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். புதிய கருவிகள் வாங்குவதில் சிந்தித்து முடிவெடுக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மீனம் -ராசி: உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 522
Added a post 
குரோதி வருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.04.2024.  சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 04.47 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.  இன்று அதிகாலை 05.17 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.  சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 541
Good Morning...
  • 526
Added article 
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது. கோட் படத்தின் சூட்டிங் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது.இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா – மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பாவுக்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும் நடித்துளளனர், இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நடிகர் பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, அஜ்மல், வைபவ், ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா, உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் விஜயுடன் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.கோட் படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 2ம் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத், துருக்கி, திருவனந்தபுரம், புதுச்சேரி, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது ரஷ்யா நாட்டில் உள்ள மாஸ்கோ நகரில் ஷூட்டிங் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையும் நிலையில், வரும் 17ஆம் தேதி படக்குழு சென்னை திரும்புகிறது.வரும் செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ் புத்தாண்டு தினத்தில் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இப்போது இணையத்தில் கோட் படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் வெளியாகி உள்ளது. இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். நாளை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு விஜய் பாடலை ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், இப்படி திடீரென இணையத்தில் இந்தப் பாடல் எப்படி லீக் ஆனது என்பது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 விஜய் நடிப்பில் உருவாகி வரும் The GOAT படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், முழு பாடலும் இணையத்தில் கசிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
  • 631
Added article 
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகாராஷ்ட்ரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சாயாஷி ஷிண்டேவுக்கு நெஞ்சுவலி இருந்தது. இதையடுத்து சதாராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது . உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • 631