Latest News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், மாநாட்டிற்கு இடையே ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினர். இருதலைவர்களின் சந்திப்பு தொடங்கும் முன்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது காதில் இயர்போனை மாட்ட தெரியாமல் தடுமாறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன. முன்னதாக ரஷ்ய அதிபர் புதினும் ஷெபாஸ் ஷெரீப் தடுமாறுவதை கண்டு சிரித்தார்.சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் ஷாங்காய் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு சீனா தலைமை வகித்தது.இந்த கூட்டத்திற்கு இடையே உலக தலைவர்கள் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினர். ரஷ்ய

கனடாவில் இன்றைய தினம் இரவு வானில் அரிய காட்சி தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை வரை நார்தர்ன் லைட்ஸ் எனப்படும் துருவ ஒளிக் காட்சியை காண முடியும் என அமெரிக்க தேசிய சமுத்திரவியல் மற்றும் வானிலை நிர்வாக மையம் (NOAA) அறிவித்துள்ளது.குறிப்பாக மேற்கு மற்றும் வட கனடா முழுவதும் இந்த அபூர்வமான ஒளி நிகழ்வு தெளிவாக தெரியும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.வானம் மேகமின்றி இருள் சூழ்ந்திருக்கும் சூழலில், பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்டா, சஸ்காச்சுவான், மனிடோபா, கனடாவின் வடக்கு மண்டலங்கள், வட ஒண்டாரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் நேரடியாக மேல் வானில் துருவ ஒளி படர்ந்து காணப்படும்.தெற்கு ஒண்டாரியோ, தெற்கு கியூபெக் மற்றும் அட்லாண்டிக்

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவானது.உலகை உலுக்கிய ஆப்கான் நிலநடுக்கம்; ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை | Afghan Earthquake Death Toll Crosses 1100நிலநடுக்கத்தின் தாக்கம் வேறு பல நாடுகளிலும் உணரப்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே தரமட்டமானதுடன் 1000 இற்கும் அதிகமானோர் உ

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒன்ராறியோவிலுள்ள ஸ்காப்புரோவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ். அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ். கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், ஸ்காப்புரோ டவுன் சென்டரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர். அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் கனடிய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய செலவு அதிகரிப்பினை வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.கனடாவில் உள்ள கிட்டத்தட்ட 40 சதவீத வணிக நிறுவனங்கள் அடுத்த ஒரு ஆண்டில் அமெரிக்க வரி கட்டணங்களால் ஏற்படும் செலவு உயர்வுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.39.4 சதவீத வணிகங்கள் அடுத்த 12 மாதங்களில் அமெரிக்க வரி கட்டணங்களால் ஏற்படும் செலவு உயர்வுகளை அதிகளவில் அல்லது ஓரளவு நுகர்வோருக்கு பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.இதற்கு மாறாக, 15.4 சதவீத கனடிய வணிகங

வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடாது என கனடிய கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார். கனடா இளைஞர்களின் வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், ஆளும் லிபரல் அரசு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை அதிக அளவில் அனுமதிப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தகவலின்படி, ஜூலை மாதத்தில் இளைஞர் வேலை இழப்பு விகிதம் 14.6% ஆக உயர்ந்துள்ளது. இது 2010-க்கு பின்னர் (கோவிட்-19 காலத்தைத் தவிர்த்து) மிக உயர்ந்த எண்ணிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த அளவைக் கடந்தும் தற்காலிக தொழிலாளர் வீசாக்களை வழங்கியுள்ளதாக பொய்லிவ்ர், கூறியுள்ளார்.இதேவேள

கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நபர் ஓருவர் தேடப்பட்டு வருவதாக நியூ பிரன்ஸ்விக்கின் செயின்ட் ஜான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.43 வயதான ஜேசன் பிட்ரே என்ற நபரையே பொலிஸார் இவ்வாறு தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜேசன் பிட்ரே சட்டரீதியான விடுதலையின் நிபந்தனைகளை மீறியதாக கூறப்படுவதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நிபந்தனையின் பிரகாரம் செயின்ட் ஜானில் உள்ள ஹார்ட் ஹவுஸ் சமூக குடியிருப்பு மையத்திற்கு அவர் திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிட்ரே தற்போது ஆயுதக் கொள்ளை மற்றும் கொள்ளையை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் செய்ததற்காக நான்கு ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.பிட்ரே என்ற பெயருடைய அந்த நபர் ஐந்து அடி ஒன்பது அங்குல உய

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறையும் சாத்தியங்கள் கிடையாது என பொருளியல் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.செப்டம்பர் 1 முதல், அமெரிக்கப் பொருட்களுக்கு கனடா விதித்திருந்த 25% எதிர்-வரிகள் (counter-tariffs) நீக்கப்படவுள்ளன. எனினும், உணவுப் பொருட்களின் விலைகள் உடனடியாகக் குறையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.விலைகள் உடனே குறையாது, ஆனால் விரைவில் குறையலாம் எனவும் சில வாரங்களில் விலைகள் குறையும் எனவும் குவெல்ஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக் வான் மாசோவ் தெரிவித்துள்ளார்.காய்கறிகள், பழங்கள், காப்பி, தேநீர், மாவு, சர்க்கரை, பாஸ்தா, ஆரஞ்சுப் பழச்சாறு போன்றவை விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.நீண்ட ஆயுட்காலம் கொண்ட உணவுப் பொருட்களின் விலை குறைவது கால தாமதமாகலாம் என அறிவி

கனடாவில் கில்ஹாம் (Gillam) பகுதியில் காணாமல் போன மலையேறி ஓருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.நோர்வே நாட்டுப் பிரஜை ஓருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கனடிய காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின் போது 29 வயது நோர்வே மலையேறி மரணமடைந்த நிலையில் கண்டுபிடித்தனர்.ஹெய்ஸ் Hayes நதி மேற்கே புறத்தில் ஹெலிகாப்டர் விமானி மலையேறியின் உடலைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.பினன்ர் மீட்பு குழுக்கள் மற்றும் பொலிஸார் நிலத்தில் சென்று, காணாமல் போன 29 வயது நோர்வே ஹைக்கரின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர்.குறித்த நோர்வே மலையேறி கடந்த 15ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒண்டாரியோ மாகாண இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 9க்கு தெற்கே உள்ள பின்னர்டி சைட் ரோட்டில் அமைந்துள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார், பொதுமக்களை தற்காலிகமாக உள்ளே தங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கிக் காயங்களுடன் மூவர் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஒருவர் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடனும், மற்றொருவர் சிறிய காயங்களுடனும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் க

கனடாவின் ஒண்டாரியோவின் ஃபோர்ட் எரியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தனது வாடிக்கையாளர்களில் சிலரை சிகிச்சையின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 59 வயதான இவோ இவானோவ் என்ற நபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.தற்போது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையாளர்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் வைத்திருப்பவர்கள் நயாகரா காவல்துறையின் பாலியல் தாக்குதல் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

கனடாவின் புகழ்பெற்ற விஸ்கி வககைளில் ஒன்றான கிரவுன் ராயல், அதன் ஒரு தயாரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில், பாட்டில்களில் கண்ணாடி இருக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவை மையமாகக் கொண்ட விஸ்கி விநியோகஸ்தரான டியாஜியோ கனடா இன்க்., "கிரவுன் ராயல் ரிசர்வ்" பிராண்டின் "12 ஆண்டுகள் முதிர்ந்த" என்று பெயரிடப்பட்ட தயாரிப்பே இவ்வாறு மீளப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் காணப்படக்கூடிய சாத்தியங்கள் காரணமாக இந்த வகை விஸ்கி திரும்பப் பெறுகிறது.கனேடிய உணவு ஆய்வு முகமை (CFIA) வெளியிட்ட திரும்பப் பெறுதல் அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் ல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர், மற்றும் ஒன்டாரியோ ஆகிய பகுதிகளுக்கு விநியோ