Latest News
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷம
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள 'கல்டஸ்' ஏரியில் துடுப்புப் படகில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாயமான 13 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.காவல்துறையின் நீருக்கடியிலான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் ஏரியிலிருந்து அச்சிறுமியின் உடலை கண்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அச்சிறுமி ஏரியில் துடுப்புப் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு எதிர்பாராதவிதமாக திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு நீரில் தவறி விழுந்துள்ளார்.விசாரணையில், நீரில் மூழ்கிய போது அந்தச் சிறுமி உயிர் காக்கும் கவசச் சட்டையை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.சிறுமியின் உடல் குறித்த பிரதேப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத
கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர். தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், 29,000க்கும் அதிகமான கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.கனடா - அமெரிக்கா தூதரக உறவைச் சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணாகக் கனேடிய அரசியல் விடயங்களில் மீண்டும் மீண்டும் தலையிட்டதாகவும் ஹோக்ஸ்ட்ரா மீது குற்றச்
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10ஆம் திகதி 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.சில கட்டடங்கள் முற்றாக இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையை தன்வசப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வ
வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒரு வழி என பிராந்திய அரசாங்கம் விவரித்தது.பொருளாதார ரீதியாக நிலையற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பங்களுக்கும், கணவன்மார்களாகிய எங்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவுவதே இந்தத் திருமணத்தின் முழு நோக்கமாகும். அதனால்தான் அரசாங்கம் எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவுகிறது என்று மணமகன் அபுபக்கர் அலியு மூசா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.யூசுப் நிர்வாகம் கூட்டுத் திருமணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும். கானோவின்
கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே
கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தை கடந்த ஜூலை மாதத்தில் கணிசமான மீட்சியைக் கண்டுள்ளது.இம்மாதத்தில் புதிதாக 75,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் முழுமையான நிலையை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் வேலையின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.முன்னதாக ராய்ட்டர்ஸ் நடத்திய கணிப்பில் 15,000 வேலைவாய்ப்புகளே உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய வளர்ச்சி அதனை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.ஜூலையில் உருவான வேலைவாய்ப்புகள் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணிகளுக்கிடையே சமமாகப் பிரிந்துள்ளன.இதில் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டும் 52,000 வேலைவாய்ப்புக
கனடாவின் டொரண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இரு
மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதி துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி