Latest News
கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கு காரணமாக, உலகளவில் பரவி வரும் மாற்றமடைந்த H3N2 வைரஸ் வகை, தற்போதைய தடுப்பூசியுடன் முழுமையாகப் பொருந்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுமார் 2% பேருக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதியானது என கனடா பொது சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் ச
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர். 35 முதல்
அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரத்தில் இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.இந்த தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொரண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின. இதனை பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்சின் தொப்பியை அணிந்திருந்தனர்.இதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கனடாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனெனில் காமன்வெல்த் கூ
கனடாவில் குழந்தைகள் உட்பட 6 பேரை இரக்கமின்றி கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரை கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாக சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார். கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார். அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள
2025-ம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி வருகிற 21-ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு அழகிகள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து உள்ளனர். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதில் மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்தது.போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் பேசிய போது, போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.மேலும் மெக்சிகோ அழகி பாத்திமா போஷை கூப் பிட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டார். அப்போது பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது அவரை முட்டாள் என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கூறினா
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்
கனடிய அரசாங்கம் , வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.கனடாவின் ஃபெடரல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க கனoa அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.2025ஆம் ஆண்டு, 673,650 பேருக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026 இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட ள்ளது.அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது. முன்னர், 2026இல் 516,
கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 2023 ஓகஸ்ட்டில் இருந்த 20,900 இலிருந்து, 2025 ஓகஸ்ட்டில் 4,515 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.மோசடிமிக்க கல்வி அனுமதிகளை தடுப்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அதிகப்படியான நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணமாக என கூறப்படுகிறது.
கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன் ஹில்ட்பிராண்ட் த்தீசன் என்ற பெண் தெரிவித்துள்ளார்.தனது மகளுக்கு கிடைக்கப்பெற்ற இனிப்பு பண்டங்களை வீட்டின் அறையில் பிரித்து வகைப்படுத்திய போது அதில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை குறித்த பெண் அவதானித்துள்ளார். யாரோ ஒருவருடைய திருமண மோதிரம் என்பதையும் அவர் ஊகித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் இந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என தான் கருதியதாக பெண் குறிப்பிட்டுள்ளார்.பெறுமதியான இந்த மோதிரம் வேறொருவரின் கைகளில் செல்லக்கூடாது என்பதற்காக மிகவும் குறைந்த விபரங்களை உள்ளட
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான அனிக் நடோ பிரேசெட் என்ற இந்த யுவதி இந்த ஆண்டில் ஐந்து மரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் இரண்டு அல்ட்ரா மரத்தன் ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். 60 கிலோ மீட்டர் மலைப்பாதை ஓட்ட போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.இந்தப் பெண் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ மீட்டர் ஓட்டமாகவும் 3400 கிலோமீட்டர் சைக்கிளிலும் கடந்துள்ளார். மெக்சிகோவில் நடைபெற உள்ள அயன் மேன் போட்டிகளில் இவர் பங்கேற்று உள்ளார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த யுவதியின் தலை முதல் பாதம் வரையில் செயலிழந்து இருந்தது.குயிலென் சின்ட்றோம் எனப்படும் மிகவும் அரிதான ஒரு நோயினால் இந்த பெண் பாதிக்கப்பட்டிருந்தார். உடலின் நரம்புகள் பாதிக்கப்பட்டு திடீர் தளர்ச்சி உணர்விழப்பு மற்றும் முழு ஊனமுற்ற நிலையில
சுற்றுலாப் பயணிகள் ஆப்பிள் சாதனங்களில் உள்ள அவசர நிலை (Emergency SOS) அம்சத்தை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.கனடாவின் மெட்ரோ வன்கூவர் பகுதியில் செயல்படும் ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.கடந்த புதன்கிழமை, கோக்விட்லாம் தேடல் மற்றும் மீட்பு குழு (Coquitlam Search and Rescue) தன்னார்வலர்கள், இந்தியன் ஆமின் வடகிழக்குப் பகுதியில் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய அவசர சுகாதார சேவைகள் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்றனர். ஆனால், விசாரணையில் அது தவறாக செயல்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் SOS அலாரம் காரணமாக உருவான தவறான அழைப்பாக தெரியவந்தது.“அவசரநிலைகளில் SOS அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், தவறான அலாரங்கள் உண்மையான மீட்பு நடவ
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாட்டு பிரஜைகள், நைஜர் நாட்டிற்குப் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நைஜரில் நிலவும் அரசியல்மற்றும் தீவிரவாதம், கடத்தல் நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, நைஜரில் உள்ள தனது தூதரகத்தின் ஆதரவைப் பெற முடியாது எனவும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் அறிவித்தது.அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். அந்த நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.கனடா மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்களுக்கு “அதிக அபாயம் உள்ள நாடு” என நைஜரை வகைப்படுத்தி, அவசர தேவ