News
Latest News
 ஒட்டாவாவில் சினிமா பாணியில் தொடர் கொள்ளை சம்பவம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  414 views
கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சனிக்கிழமை அரங்கேறிய தொடர் வாகனத் திருட்டுகள் மற்றும் வீடுபுகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெறும் சில மணிநேர இடைவெளியில் நகரம் முழுவதும் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.வெஸ்ட் ஹண்ட் கிளப் வீதி பகுதியில், வாகன சாரதி ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தேகநபர்கள் இருவர், அவரிடமிருந்து காரைப் பறித்துச் சென்றனர்.சிறிது நேரத்தில் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், உரிமையாளரின் கார் சாவியைத் திருடி, அங்கிருந்த மற்றொரு காரையும் கடத்திச் சென்றனர்.கடத்தப்பட்ட காருடன் நகரின் கிழக்குப் பகுதியில் அவர்கள் விபத்துக்குள்ளாகினர
ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக தகவல்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  412 views
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான 'பாசிஜ்' தன்னார்வப் படைத் தளபதி குலாம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தளபதி சுலைமானியின் மரணம் ஈரானின் 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு' கட்டமைப்பிற்கு விழுந்த பாரிய பலத்த அடி என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஈரானிய இராணுவத் தளபதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து இராணுவ ரீதியான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.இந்தச் செய்தி குறித்து ஈரான் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கருத்துக்களையும் அல்லது உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை என அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  547 views
கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.2026 பெப்ரவரி மாதம், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பிராந்தியம் முழுவதும் பயணித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அவதானித்த நயாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.மார்ச் 10 அன்று மதியம் 3 மணியளவில், வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைத் அதிகாரிகள் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சுமார் $78,000 (கனடிய டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.160 கிராம் ஃபெண்டானில், 280 கிராம் மெத்தாம்பேட்டமைன், 137 கிராம் கொக்கைன், ஆக்ஸிகோட
நெதன்​யாகுவை கொல்லாமல் விடப்போவதில்லை - ஈரான் சூளுரை
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  478 views
ஈரான் குழந்தைகளைக் கொல்​லும் இந்த குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம் என ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை அறிக்​கை​யொன்றினை வெளியிட்டுள்ளது.மார்ச் 12ஆம் திகதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோ என சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர்.அந்த வீடியோ​வில் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் வான்​வழித் தாக்குதல்​களைத் தொடங்​கிய பிறகு தனது முதல் செய்​தி​யாளர் சந்​திப்​பில் உரையாற்​றி​னார்.அதில் ஈரானின் புதிய உயர் தலை​வர் மோஜ்தாபா கொமெய்னியை கொல்​லப
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  470 views
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்த அல்லது காயமடைந்தார் என்ற பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஈரானிய அரச ஊடகம் வெளியிட்ட நிலையில் அவர் கையில் ஒரு கோப்பை கோப்பியுடன் தனது உதவியாளர் ஒருவருடன் உரையாடும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.மூன்றாவது வாரமாகவும் தொடரும் இஸ்ரேல் - ஈரான் போரால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போரில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்த்தாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் தனது உதவியாளரொருவருடன் உரையாடும் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது.
பீதியை கிளப்பும் வட கொரியா
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  432 views
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்
ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  429 views
ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனடாவில் உணவுப் பொருள் விலைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  466 views
உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமா
 ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகியது இத்தாலி
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  367 views
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் (Giorgia Meloni) அறிவித்துள்ளார். அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  517 views
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் மார்ச் 16-ஆம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.2025-இல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆ
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  527 views
 கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  552 views
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.