நகைச்சுவைகள்
இன்றைய நகைச்சுவை
Empty
நகைச்சுவைகள்
பயங்கரமான ஆளுய்யா நீ....
ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி  விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்கும
என்ன ஒரு வில்லத்தனம்...?
பேப்பரில் ஒரு விளம்பரம்..''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.."அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"அவள் ஒ
வாய்விட்டு சிரிங்க....
ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்
செருப்பு
ஒரு பெண்மணி செருப்பு கடைக்கு சென்று செருப்புகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட கடையில் உள்ள 40 50 ஜோடிகளை முயற்சித்துப் போட்டு, ஒரு வழியாக ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டு கடைக்காரரிடம் மகிழ்ச்சியாக எனக்கு ஏற்ற அளவுள்ள செருப்பு கிடைத்துவிட்டது என்று கூறினார்."இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?" என்றார் பெண்மணி"அந்த செருப்பிற்கு நீங்கள் பணம் தரத் தேவையில்லை" என்றார் கடைக்காரர்"நான் பணம் கொடுத்தே தீருவேன்" என்றார் பெண்மணி"நீங்கள் தேர்ந்தெடுத்த செருப்பு நீங்கள் கடைக்கு வந்தபோது போட்டுக் கொண்டு வந்த‌ செருப்பு" என்றார் கடைக்காரர்.
நானும் வரலாமா?
இரவு நேரத்தில்,  வீட்டுக்கு வெளியே  நாய் சத்தம் கேட்டு வெளியில் வந்தார், அவர்.            தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது, அவருக்கு சற்று வியப்பை தந்தது.        சில நிமிடங்கள்  கழிந்தும் கூட அது அசையாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது.       மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார்.  உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, அவரருகே நின்றது.  வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.  பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.         இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்
நீதிமன்றத்தில் நடந்த நகைச்சுவை
ஒரு சின்ன ஊரில் நீதிமன்றத்தில் வழக்கு நடக்குது.அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க.வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?அதிர்ந்து போனார் வக்கீல் ...மெல்ல சமாளிச்சிகிட்டு..."சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ள
ஜட்ஜ் அய்யா..... என்னை காப்பாத்துங்க....
ஜட்ஜ் அய்யா... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...ஏம்ப்பா... என்ன நடந்துச்சிஅத ஏன் கேக்குறீங்க அய்யா,.. கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறாபுக்கா... கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கசொல்றேனுங்க அய்யா...  மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்இன்ட்ரஸ்ட்டிங். அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்ப்ச்... மூனாவது மாசம் என்ன புக்
சிரிப்பதற்கு மட்டுமே.....
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர்.ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது....ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க.. ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா வாசனை வந்தது..அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..விரதம் என்பதால் சாப்பிடவும் முடில... சிக்கன் சாப்பிடும் ஆசையும் தூண்டியது..அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..
தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....
மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "கணவர் : " சுமார் தான்....! "கொஞ்ச நேரம் கழிச்சி..மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? " Wife முகத்துல ஒரு தீப்பொறிதெரிஞ்சது..மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "கணவர் : "
ரவா உப்புமா
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.சிவன் : என்ன குற்றம் கண்டீர்?நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே!நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே
மாப்பிள்ளை இப்படித்தா வேணும்.....
பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது... ஆனால் க்ளைமாக்ஸ் செம டிவிஸ்ட்டு.●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...●X:  சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன? Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன
 5% காஷ் பேக் ஆஃபர்
திருடன் - ஹான்ட்ஸ் அப் !! கையை மேலே தூக்கு!! ஓ மறுபடியும் நீயா !! இந்த மாதத்தில் உன்கிட்ட நான் மூணாவது வாட்டி ஆட்டய போடுவதனால்!!நீ ! என்னுடைய பிளாட்டினம் கஸ்டமர் ஆகி விட்டாய் அதனால் உனக்கு 5% காஷ் பேக் ஆஃபர் தருகிறேன்!!அப்பாவி - என்னடா!! நீ திருடனா இல்லை வங்கி ஊழியரா !! வங்கி ஆள் மாதிரியே பேசுற!!திருடன் - போங்க!! சார்!! நாங்க சாதரான திருடர்கள்!! அவர்கள் தேசிய திருடர்கள்!! அவங்க லெவல் வேற!! எங்க லெவல் வேற!!