·   ·  964 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

காது கேட்கும் தன்மையை இழப்பதற்கான அறிகுறிகள்

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு படி இந்தியர்கள் சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் காது கேளாமை தொடர்புடைய பிரச்சினைகளைஎதிர்கொண்டுள்ளனர். 

5 பேரில் 4 பேருக்கு காதுகேளாமை பிரச்சினைக்கான அறிகுறிகள் இருப்பது தெரிவதில்லை. இந்த 7 அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் காதுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமானது.

முணுமுணுப்பது போல் உணர்வது உங்களிடம் மற்றவர்கள் பேசும்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் சரியாக புரியாது. அமைதியான சூழலில் இருந்தும் கூட அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் போகும். 

ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றும். இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால் காதுகளை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். 

போனில் பேசுவதற்கு சிரமப்படுவது 'நீங்கள் பேசுவது எனக்கு சரியாக கேட்கவில்லை. உங்கள் குரல் தெளிவாக இல்லை. உங்கள் பேச்சில் சில வார்த்தைகள் தெளிவாக கேட்கவில்லை. அந்த வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்பது போன்ற வார்த்தைகளை போனில் பேசும்போது எப்போதாவது பயன்படுத்தலாம். 

நெட்வொர்க் பிரச்சினை காரணமாக இத்தகைய இடையூறு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும்போதெல்லாம் எதிர்முனையில் பேசுபவரிடம் இத்தகைய வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தால் அவை உங்கள் செவித்திறனில் ஏதோ குறைபாடு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.  

மற்றவர்கள் பேசும்போது அவர்களின் உதட்டு அசைவை வைத்து என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முயல்வதும் காது கேளாமைக்கான அறிகுறிதான். ஒவ்வொரு முறையும் அவர்களின் உதட்டு அசைவை நம்ப தொடங்கினீர்கள் என்றால் காது நிபுணரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. 

திரும்பச் சொல்லும்படி கேட்பது 'மன்னிக்கவும். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது எனக்கு புரியவில்லை?', 'தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?', 'நீங்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பமாக இருக்கிறது' என்பது போன்ற வார்த்தைகளை மற்றவர்களுடன் பேசும்போது பயன்படுத்தினால் இதுவும் காதுகேளாமைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம். 

டி.வி. ஒலி அளவை அதிகரிப்பது நீங்கள் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும்போது, 'ஏன் இப்படி அதிக சத்தத்தில் வைத்து டி.வி. பார்க்கிறீர்கள்? டி.வி. ஒலி அளவு அதிகமாக இருக்கிறது. எங்கள் காதுகளுக்கு அசவுகரியமாக இருக்கிறது. கேட்பதற்கு எரிச்சலாக இருக்கிறது' என்பது போன்ற வார்த்தைகளை குடும்பத்தினர் புகாராக தெரிவித்தால் அது உங்கள் காது கேளாமைக்கான அறிகுறியாகும். 

கூட்டம் கூடும் இடங்களை தவிர்ப்பது சத்தமான சூழலில் பிறருடைய உரையாடலை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். பொது இடங்களிலோ, சுப நிகழ்ச்சி களிலோ, நிறைய பேர் கூடி இருக்கும் கூட்டத்திற்கு மத்தியிலோ ஒருவர் பேசுவதை புரிந்து கொள்வதற்கு சிரமப்பட்டாலோ, அத்தகைய கூட்டம் கூடும் இடங்களை தவிர்த்தாலோ அது காதுகேளாமை பிரச்சினைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமைந்திருக்கலாம். 

மற்றொருவரை சார்ந்திருப்பது ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல், அதனைக் கேட்டு சொல்வதற்கு மற்றொருவரை சார்ந்திருந்தால் உங்கள் செவித்திறனை பரிசோதிக்க வேண்டியது அவசியமானது.

 

  • 111
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்