Support Ads
 ·   ·  2157 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பரிகார தகவல்கள்

உங்களிடம் வரும் பணம், நகை இரட்டிப்பாக, பெருகிக்கொண்டே இருக்க இந்த ஒரு மாலையை நரசிம்மருக்கு செலுத்தினால் மட்டும் போதுமே...

ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம். அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான ஜாதகத்தை எழுதி வைக்கிறோம். இந்த ஜாதகத்தின் மூலம் அந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும், எந்த பதவியை அடையும், எப்படி படிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு ஜாதகத்தின் மூலம் ஒருவருடைய வாழ்க்கை ரகசியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியா விட்டாலும், ஓரளவு கணிக்க முடியும். அதிலும் முக்கியமாக பலரும் கேட்கும் கேள்வி என்னவென்றால் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்குமா? என்று தான். அவ்வாறு பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் சுக்கிர பகவானின் அருள் கிடைக்க வேண்டும். சுக்கிர பகவானின் அருள் குறைந்து இருந்தால் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும்

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் 100% நிறைந்து இருந்தால் அவர்களுக்கு பணத்திற்கு குறைவு என்பதே இருக்காது. அவர்களின் முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகளோ அல்லது அவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்துக்களோ அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஆனால் சுக்கிர பகவானின் தாக்கம் குறைந்து இருந்தால் சம்பாதிப்பது என்பதே கேள்விக்குறியாக இருக்கும். அப்படியும் சம்பாதித்த பணம் கையில் தங்குவது என்பது சந்தேகம் தான். ஏதாவது வீண் விரயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சம்பாதித்த பணம் கையில் தங்காது. இவ்வாறு இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவ்வாறானவர்கள் நரசிம்மருக்கு இந்த மாலையை அணிவிக்க, அது உங்களிடம் பணத்தை தங்க வைக்கும். அப்படி அணிவிக்க வேண்டிய மாலை என்னவென்றால் ஏலக்காய் மாலை தான். ஒரு குழந்தை அடம் பிடிக்கும் பழுது, குழந்தைக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருளை வாங்கித் தந்த எவ்வாறு சமாதானம் செய்கிறோமோ, அது போல இறைவனையும் குளிர்விக்க வேண்டும்.

அபிஷேகம் செய்யும் பொழுதும், அலங்காரம் செய்யும் பொழுதும் என தீப ஆராதனை காண்பதற்கு முன்னர் வரை கடவுள் குழந்தையாகத் தான் இருக்கிறார். எனவே தான் நாம் இறைவனை மகிழ்விக்க பல வேண்டுதல்கள் செய்கின்றோம் ஆகவே ஏலக்காயை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற நூலை எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சளை தடவி மஞ்சள் கயிறாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த மஞ்சள் நிற ஊசி நூலில் ஒவ்வொரு ஏலக்காயாக கோர்க்க வேண்டும். ஒவ்வொரு ஏலக்காயையும் நூலில் கோர்க்கும் பொழுது நரசிம்மரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலை கோவிலுக்கு சென்று மாலை நரசிம்மருக்கு சாற்றி விட்டு, இரண்டு நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்துவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

  • 408
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங