·   ·  147 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் வசித்து வந்தவ புருஷோத்தம்- பத்மஜா தம்பதிக்கு அலேக்கியா, சாய் திவ்யா என்று இரு மகள்கள் உண்டு. வேதியியலில் பட்டம் பெற்ற புருஷோத்தம் அரசு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றினார். பத்மஜா கணித பேராசிரியர். இவர், பல்கலையில் படிக்கும் போது தங்கப்பதக்கம் பெற்றவர். ஐ.ஐ.டி கோச்சிங் சென்டரிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். மெத்த படித்திருந்தாலும் இந்த தம்பதிக்கு பூஜைகளில் அதீத நம்பிக்கை உண்டு.

பத்மஜாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. வலிப்பு நோய் குணமாவதற்காக அவ்வப்போது வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, கர்நாடகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் , இரு மகள்களையும் நரபலி கொடுத்தால், பத்மாஜாவின் வலிப்பு நோய் குணமாகும் என்று கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே , பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்ட தம்பதியர், தங்களுக்கு இதனால் கூடுதல் ஆயுள் கிடைக்கும் என்றும், தங்கள் பூஜை காரணமாக நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்த்தெழுந்து விடுவார்கள் என்றும் நம்பியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களின் இரு மகள்களையும் பூஜை நடத்தி தாய் பத்மஜா அடித்து கொன்றுள்ளார். அதற்கு புருஷோத்தம் உடைந்தையாக இருந்துள்ளார். மகள்களை கொன்ற பிறகு, தன் நண்பரான ராஜூ என்பவரை போனில் அழைத்த புருஷோத்தம், மகள்களை மனைவி பத்மஜா அடித்து கொன்று விட்டதாக தகவல் கூறியுள்ளார். ராஜூ பதறியபடி வீட்டுக்கு சென்ற போது, அவரை வீட்டுக்குள் விட தம்பதி மறுத்துள்ளனர். தொடர்ந்து, போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்களின் உடல்களை மீட்டனர்.

கொல்லப்பட்ட ஒரு இளம் பெண்ணின் உடல் பூஜை அறையில் கிடந்தது. மற்றோரு பெண்ணின் உடல் இன்னோரு அறையில் கிடந்துள்ளது. இரு உடல்களையும் சிவப்பு வண்ண துணி கொண்டு போர்த்தி வைத்திருந்தனர். தற்போது, புருஷோத்தம் , பத்மஜா ஆகியோரிடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். வீட்டிலிருந்து ஏராளமான கடவுள் சிலைகள் கைப்பற்றப்பட்டன. பூஜை நடத்தும் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக, இந்த புது வீட்டில் தம்பதியினர் குடியேறியதாக சொல்லப்படுகிறது. லாக்டவுன் காரணமாக போபாலில் உள்ள Indian Institute of Forest Management நிறுவனத்தில் பணியாற்றி வந்த அலெக்கியா சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும் வகையில் பணியை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வந்து தங்கியுள்ளார். ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்த சாய் திவ்யாவுக்கு பெற்றோருடனே தங்கியிருந்துள்ளார். கொல்லப்பட்ட சாய் திவ்யா ஏற்கனவே ஒரு முறை வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

மேலும், சாய் திவ்யா கொல்லப்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சந்தேகத்துக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டதாகவும் போலீஸார் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடத்தில் நடந்த விசாரணையில் , இந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவில் உக்கிரமாகவே இருப்பார்கள். வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும் என்கின்றனர். இரு இளம் பெண்களும் ஞாயிற்றுக்கிழமை இரவில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • 964
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்