·   ·  5 posts
  • 1 members
  • 0 friends

இவ்வாண்டு கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-இவ்வாண்டு கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்;கிறது. எமது நாட்டில்; வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09 ஆம் திகதியே (26.10.2022) விரத ஆரம்பம் என்றும் ஐப்பசி மாதம்; 13 ஆம் திகதி (30.10.2022) விரத நிறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், திருச்செந்தூர் ஆலயத்தில் இம்முறை ஐப்பசி மாதம்; 08 ஆம் திகதியிலிருந்து (25.10.2022) ஐப்பசி மாதம் 13 ஆம் திகதி வரை (30.10.2022) கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. குழப்பத்திற்குக் காரணம் இதுவேயாம்;.ஐப்பசி மாதம் 25 ஆம்; திகதியே பிரதமை திதி கூடி அடுத்தநாளாகிய 26 ஆம் திகதி வரை அத் திதி நிற்பதே, இவ்வாறு இரண்டு திகதிகளில் விரத ஆரம்ப நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாம். 25 ஆம் திகதி விரத ஆரம்பம் செய்தால் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம்; அனுஷ்டிக்கலாம். நம் பஞ்சாங்கங்கள் சொல்கிறபடி 26 ஆம் திகதி விரத ஆரம்பம்; செய்தால் இம்முறை கந்தசஷ்டி விரதம் 5 நாட்களாக மட்டுமே இருக்கும். (இடையிடையே அப்படி வருவதும் உண்டு.)மேற் சொன்ன இரண்டு திகதிகளில் எத்திகதியில் விரத ஆரம்பத்தினைச் செய்வது சரியாகும்? என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. நமது பஞ்சாங்கங்களைக் கொண்டு விரதம் அனுஷ்டிப்பதா? அல்லது திருச்செந்தூர் ஆலயத்தின்படி விரதம் அனுஷ்டிப்பதா? என்று அடியார்கள் சிலர்; கேட்டதாலேயே இக்கட்டுரையை வரைகிறேன்.மேற்சொன்ன இரண்டு நிர்ணயங்களிலும் நமது பஞ்சாங்கங்கள் சொல்லும் கந்தசஷ்டி நிர்ணயமே சரியானது என்பது எனது கருத்து. கந்தசஷ்டி விரதநிர்ணயம் பற்றி நூல்களும் அறிஞர்களும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.கந்தசஷ்டி விரதத்தினை சாந்திரமான, ஐப்பசி மாதத்து, சுக்கில பட்ஷ (வளர்பிறை), பிரதமை முதல், சஷ்டி ஈறாகிய ஆறு நாட்களும் அனுஷ்டிக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விரதநிர்ணய விதியாகும். ஆனால் இதில் வேறு சில விடயங்களையும் நாம் கவனிக்கவேண்டும் என்று ஆகம அறிஞர்கள் கூறுகிறார்கள்.முக்கியமாக விரத ஆரம்;பத்தினை வெறுமனே ஐப்பசி மாத சுக்கிலபட்சப் பிரதமையில் தொடங்க இயலாதென்றும், ஐப்பசி மாதத்தில் வரும் ‘கிருத்திகா சுத்தப் பிரதமையில்’ தான் கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைக் கொள்ள வேண்டும் என்றும்; அவர்கள் உறுதியாயக் குறிப்பிட்;டிருக்கிறார்கள்.நமது நாட்;டைச் சேர்ந்த ஆகமப் பேரறிஞர் அமரர் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள் அவர்கள் இவ்விரதம் பற்றிக் குறிப்பிடுகையில்; ‘கிருத்திகா சுத்தப் பிரதமையில் கந்தசஷ்டி ஆரம்பத்தினைக் கொள்வதே ஆகம சம்மதமாகும்.’ என்று பதிவு செய்திருக்கிறார்.அதன்படி இவ்வாண்டு கந்தசஷ்டி விரதத்தினை, வெறுமனே பிரதமை திதி வரும் நாளாகிய 25.10.2022 செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க முடியாது. கிருத்திகா சுத்தப் பிரதமை வரும் நாளாகிய 26.10.2022 புதன்கிழமை அன்றுதான் ஆரம்பிக்கவேண்டும். அதுவே சரியான விரத ஆரம்ப நிர்;ணயமாகும்;.ஒருசில தினங்களுக்கு முன்பு இணையவெளியில் லண்டனிலிருந்து பேசிய ஓர் அந்தணர் அங்கு 25 ஆம் திகதி ‘கிரகணம்’ வருவதால் அந்நாளைத்; தவிர்த்;து அடுத்த நாளாகிய 26 ஆம் திகதியே கந்தசஷ்டி விரதத்தினை ஆரம்;பிக்கவேண்டும் என்று பேசியிருந்தார். கிரகணத்;திற்காக விரதத்தைத் தள்ளிப்போடவேண்டும் என்று சொல்வது தவறு! இன்னும் சொல்லப் போனால் கிரகண நாட்களில்; ஆலயங்களில் வழிபாடியற்றவேண்டும் என்பதே நம் ஆகம நெறிப்படுத்தலாம். இதனை ஆகமநூல்களும்; பேரறிஞர்களான அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள், பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்;. எனவே 25 ஆம் திகதி, பிரதமை திதி கூடிய போதும், கிருத்;திகா சுத்தத்துடன் கூடிய பிரதமைதிதி வரும் 26 ஆம் திகதியே இவ் ஆண்டு கந்தசஷ்டி விரத ஆரம்பத்தினைச் செய்யவேண்டும்.

  • 259
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்