·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

பொருளாதார நெருக்கடி மற்றும் சேதன உரப் பயன்பாடு என்பவற்றால் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தொழில்களில் ஒன்றாகக் காணப்படும் விவசாயச்செய்கையில் உரிய வருமானம் கிடைக்காமையால் விவசாயிகள் இம்முறை பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களில் 65 வீதத்திற்கு மேல் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.

இவ்வாறு விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள் ஒவ்வெரு போகத்திலும் வறட்சிப்பாதிப்பு, விளைபொருட்களை உரிய காலத்தில் உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாமை என பல்வேறு நெருக்கடிகளை கடந்த காலங்களில் எதிர் கொண்டாலும் தற்போது சேதன உரப்பாவனையும் எரிபொருள் தட்டுப்பாடும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனக் காணிகள் மற்றும் மானாவாரி பயிர்ச்செய்கை நிலங்கள் என 69 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வருடாந்தம் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.மேற்படி உற்பத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத்தேவைக்கு ஏறத்தாள 22 ஆயிரத்து 310 மெற்றிக்தொன் தேவைப்படுகின்றது. இதைக்கூட இம்முறை உற்பத்தி செய்ய முடியாத நிலையிலேயே இந்த மாவட்டம் காணப்பட்டதாக விவசாய அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு கால போக அறுவடையில் கெக்ரேயர் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைத்துள்ளாதக மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுளளது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் மானாவாரி பயிர்செய்கை நிலங்கள் உள்ளடங்கலாக சுமார் 69ஆயிரம் ஏக்கர் முதல் 70 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.இந்த நிலையில் நெல்லுக்கான உரிய விலை கிடைத்தாலும் கடந்த காலங்களில் அறுவடைகள் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்திகளை விட இந்த முறை குறைந்த அளவு விளைச்சல்களே கிடைத்துள்ளன என்றும் இதனால் பாரிய நட்டத்தினை எதிர் கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

போதிய உரவகைகள் இன்மை களை நாசினிகள் இன்மை காரணமாக சில இடங்களில் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இரசாயன உரங்களை தடுத்து நிறுத்தி சேதனப் பசளை பயன்படுத்தி விவசாயத்ததை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் உரத் தட்டுப்பாடு மற்றும் கிருமி நாசினிகள் களை நாசினிகள் தட்டுப்பாடு காரணமாக குறித்த விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அறுவடைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த போகங்களில் ஹெக்டேர் ஒன்றுக்கு 4.3 மெற்றிக் தொன் முதல் 4.5 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைத்திருந்தன.இந்தப் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளன. அதாவது கெக்ரேயர் ஒன்றுக்கு இரண்டு மெற்றிக் தொன் முதல் 2.5 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் மாத்திரமே கிடைத்துள்ளதாக மாவட்ட பிரதி மாகாண  விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

மேற்படி செய்கையின் போது உரிய களைக் கட்டுப்பாடு இல்லாத நிலையில் 13ஆயிம் ஏக்கர் வரையில் கைவிடப்பட்டாதவும் குறிப்பிடப்பட்டது.கடந்த கால விளைச்சல்களில் கிடைத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை கூட பெற்றுக் கொள்ளமுடியவில்லை என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.கால போகம் நிறைவு பெற்று மாவட்டத்தில் இருபத்தி ஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை ஆரம்பிக்கபடவுள்ளது.  இதற்கான முன்னாயத்த செயற்பாடுகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் நிலப்பண்படுத்தலுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதிலும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் இதற்கான ஒழுங்கு படுத்தல்கள் மாவட்ட செயலகத்தினால் செய்யப்பட்டிருந்தாலும் அதனை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நடைமுறைப்படுத்தவில்லையென விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.இவ்வாறு விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகள்; தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,(வன்னியில் இருந்து சு.பாஸ்கரன்)

  • 497
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்