·   ·  24 posts
  • R

    3 members
  • 4 friends

பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்

நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய விதத்தில் தொல்லியல் வரலாற்று பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்கள் வாழ்வாதரமாக காணப்படுகின்றன.

இப் புகழ் மிக்க நெடுந்தீவின் அமைவிடமானது யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லா தீவுகளிலிலும் கூடிய தொலைவில் அமைந்துள்ளது.  அதாவது . யாழ்பாணத்திலிருந்து 45கிலோ மீற்றர் தொலைவில் தரைத் தொடர்பு கொண்ட புங்குடுதீவு குறிகாட்டுவானிலிருந்து ஏறத்தாள 10கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இத் தீவானது சப்த தீவுகளிலே மிகத்தூரத்தில் அமைந்துள்ள மிகச் சிறப்பான ஒன்றாக விளங்குகின்றது. அதாவது, இலங்கையின் வட மாகணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். 'சப்த' என்னும் சொல் சமஸ்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது.

மேலும், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய ஆறுக்கும் மேற்பட்ட தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட இந்தத் தீவில் தற்போது 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500 பேர் வரையில் வசித்து வருகின்றார்கள்.  இந்த மக்களுக்கான போக்குவரத்து என்பது ஒரு கடல் மார்க்க போக்குவதற்காகவே காணப்படுகின்றது.அதாவது,  சுமார் ஒரு மணிநேரம் படகில் கடல் பயணம் செய்து அதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கும் அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த போக்குவரத்து வசதி என்பது ஒரு பாரிய பிரச்சினையாக தொடர்ந்த வண்ணமேயுள்ளன. காலத்துக்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போது இந்த மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்படும்;  ஆனால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் பறந்த சொல்லாகவே மாறிவிடுகின்றன.ஆனால் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் போக்குவரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இதே வேளை பிரதேச செயலகம் போலீஸ் நிலையம் பிரதேசசபை பாடசாலைகள் பிரதான தபாலகம் என பல்வேறுபட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிர்வாக கட்டமைப்புகளையும் கொண்டு இயங்குகின்ற ஒரு பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இந்தப் படகு மூலம் பயணம் செய்து அந்த மக்களுக்கான சேவையை வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்களில் வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பனவும்; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகு பல்வேறுபட்ட படகுச் சேவைகள் இருக்கின்றன.இதில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்திற்கு வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை என்பன இலவசமாக போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், குமுதினி படகு முழுமையாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதனுடைய திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளது.தற்போது பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையில் வடதாரகை மட்டுமே நாளாந்தம் இரண்டு சேவைகளை வழங்கி வருகின்றது. அதாவது, காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் பின்னர் காலை 8 மணிக்கு குறிகாட்டுவான் இலிருந்து நெடுந்தீவுக்கும்  பிற்பகல் 03.மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் என நாளொன்றுக்கு இரண்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடதாரகை ஏதாவது பழுதடையுமாக இருந்தால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துகள் இருக்காது.  ஆனால் தனியார் படகுகள் கடந்த காலங்களில் சேவைகளில் ஈடுபட்டு வந்த போதும் இப்போது குறிஞ்சாக் கேணியில் இடம்பெற்ற படகு விபத்துக்கு பின்னர் தனியார் படகுகளில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்கு வடமாகாண சபையினால் நெடுந்தொகை என்ற படகு கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்த போதும் மிக குறுகிய காலத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சபையினால் வழங்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடைவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு சென்று வருவதற்கு சுமார் 110 லீற்றர் டீசல் தேவை என்பதும் மற்றைய படகுகளைவிட அதிக செலவு ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு உருவாக்கப்பட்டதுடன் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரமும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டுள்ளதுடன் கடந்த 2017ம் ஆண்டு சேவைக்காக வழங்கப்பட்டது.ஆனால் இப்போது பழுதடைந்த நிலையில் நீண்ட நாளாக இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே போல வடமாகான சபையால் வழங்கப்பட்டு யாழ் ஊர்காவற்றை கண்ணகைஅம்மன் இறங்கு துறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கான சேவையில் ஈடுபட்டுவந்த எழுதாரகை பயணிகள் படகு சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் வடமாகாண சபையின் வினைதிறனற்ற செயற்பாடுகளில் இந்த படகு சேவைகள் சான்றாகின்றன என தீவக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.அதாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் தினமும் தீர்க்கப்படாத பிரச்சனைகளாக அல்லது ஆபத்தான பயணங்களாகவே காணப்படுகின்றன.(சு பாஸ்கரன்)
  • 544
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்