·   ·  2223 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜாக்கிசான் பதில்கள்

ஒரு சமயம் நிருபர் அவரிடம் நீங்கள் இந்த வாழ்க்கையில் எல்லாம் திருப்தியாக உள்ளதா என்று கேள்வி கேட்டபோது!

அதற்கு அவர் சொன்ன பதில் !

" ஒரு முறை இந்த பொன்மொழிகளை நான் கேட்டேன்!

நீங்கள் செய்யும் இந்த கடினமான வேலைவேலை இல்லாத பலருக்கு கனவாகவே இருக்கிறது!

குழந்தைகளால் நிம்மதி இல்லாமல் இருக்கு என்று குறை சொல்லும் நீங்கள்! பல பெற்றோர்களுக்கு தங்களுக்கு குழந்தை என்பதே கனவாக இருக்கிறது!

உங்களுடைய சிறிய வீடு பல பேர் வீடு வாசல் இல்லாமல் ரோட்டில் உறங்குபவர்களின் கனவாக இருக்கிறது!

நீங்கள் வைத்திருக்கும் சிறு முதலீடு பல கடனாளிகளின் கனவாக உள்ளது!

உங்களுடைய சில உடல் உபாதைகள்! பலரது தீர்க்க முடியாத நோயுடன் வாழும் நபர்களின் பிராத்தனையாக உள்ளது!

உங்கள் மன அமைதி தான் உங்கள் நிம்மதியான தூக்கம், உங்களுக்கு கிடைக்கும் சாதாரண உணவுகள் தான் பல யுத்த நாடுகளின் மக்களுக்கு கனவாக உள்ளது!

உங்களிடம் உள்ளவற்றை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! நாளை என்ன கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது என்றார்.

  • 376
  • More
Comments (0)
Login or Join to comment.